LATEST

Friday, December 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு - 10.கரூர்

Magme Guru

10. கரூர் வரலாறு 

தலைநகரம் : கரூர்
பரப்பு : 2,904 ச.கி.மீ
மக்கள் தொகை : 1,064,493 (2011)
எழுத்தறிவு : 727,044 (75.60 %)
ஆண்கள் : 528,184
பெண்கள் : 536,309
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 367

வரலாறு :

• கரூர் மாவட்டம் பலகாலம் திருச்சி மாவட்டத்துடன் இணைந்திருந்த காரணத்தால்திருச்சி மாவட்டத்தின் வரலாறு கரூர் மாவட்டத்திற்கும் பொருந்தும்.
• நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-2 (கரூர், குளித்தலை); வட்டங்கள்-4 (கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம்).

உள்ளாட்சி நிறுவனங்கள் :

ஊராட்சி ஒன்றியம்-8 (கரூர், தாந்தோனி, கே.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடலூர்).

எல்லைகள் :
• வடக்கில் நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களையும், கிழக்கில் பெரம்பலூர்,திருச்சி மாவட்டங்களையும், தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் ஈரோடு மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

தொழில் :
புகளூர் சர்க்கரை ஆலை :

• தென்னிந்திய சர்க்கரைப் பொருளாதாரத்தில் புகளூர் சர்க்கரை ஆலை முக்கியப் பங்கு வகிக்கிறது.
• இது காலத்தால் பழமையானது.
• நாளொன்றுக்கு சுமார் 1500 டன் கரும்புச்சாறு பிழியப்படுகிறது.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும், காகித நிறுவனம் :
• இக்காகித ஆலை புகளூரில் ரூ.236 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு உற்பத்தி நடக்கிறது.
• ஆண்டுக்கு 50,000 டன் செய்தித்தாள் காகிதமும், 40,000 டன் எழுது அச்சுக் காகிதமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 40 கோடி அன்னிய செலாவணி மிச்சப்படுகிறது.
• இங்கு கரும்பு சக்கையைக் கொண்டு காகிதம் தயாரிக்கிறார்கள். 785 ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது.


No comments:

Post a Comment