LATEST

Showing posts with label HISTORY. Show all posts
Showing posts with label HISTORY. Show all posts

Saturday, May 22, 2021

May 22, 2021

வரலாற்றில் இன்று மே 22 (Today in History)

வரலாற்றில் இன்று மே 22 (Today in History)


கிரிகோரியன் ஆண்டு: 142 ஆம் நாளாகும்.

நெட்டாண்டு: 143 ஆவது நாள். 

ஆண்டு முடிவிற்கு: 223 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

760ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை 14-வது தடவையாக அவதானிக்கப்பட்டது.

Friday, May 21, 2021

May 21, 2021

வரலாற்றில் இன்று மே 21

வரலாற்றில் இன்று மே 21

 

கிரிகோரியன் ஆண்டு :  141 ஆம் நாளாகும்.

நெட்டாண்டு :  142 ஆவது நாள்.

ஆண்டு முடிவிற்கு 224 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்:

878 சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர்.

996புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.

Wednesday, May 19, 2021

May 19, 2021

வரலாற்றில் இன்று மே 19 (Today in History)

வரலாற்றில் இன்று மே 19 (Today in History)

 

மே 19 (May 19) கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.

 

715இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1051 பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

1268பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது.

1499அராகனின் 13-வயது கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம் நடைபெற்ரது.

1535பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.

1536இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி ஆன் பொலின் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள்;

1542புரோம் இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மரில்) வீழ்ந்தது.

1568இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியைக் கைது செய்ய உத்தவிட்டார்.

1649 இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.

1655ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஜமேக்கா மீதான முற்றுகை ஆரம்பமானது.

1743சான்-பியேர் கிறிஸ்தீன் செல்சியசு வெப்பநிலை அலகைக் கண்டுபிடித்தார்.

1780 நியூ இங்கிலாந்து, மற்றும் கனடாவின் சில பகுதிகளில் அசாதாரணமான இருட்டு பகல் நேரத்தில் அவதானிக்கப்பட்டது.

1802பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை அறிமுகப்படுத்தினார்.

1828அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் குவின்சி ஆடம்ஸ் கம்பளி உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்வை சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1834 இலங்கையில் பாடசாலைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.[1]

1848 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.

1919 முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியக் கருங்கடல் கரையில் தரையிறங்கினார். துருக்கிய விடுதலைக்கான போர் ஆரம்பமானது.

1934பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கீமோன் ஜோர்ஜியெவ் பிரதமராகப் பதவியேற்றார்.

1950இசுரேலியக் கப்பல்களுக்கும் வணிகத்திற்கும் சுயஸ் கால்வாய் மூடப்படும் என எகிப்து அறிவித்தது.

1950 பாக்கித்தானுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த வெடிகுண்டுகள் அடங்கிய படகு அமெரிக்காவின் தெற்கு அம்போய் துறைமுகத்தில் வெடித்ததில் நகரம் பெரும் சேதத்துக்குள்ளாகியது.

1961சோவியத்தின் வெனேரா 1 வெள்ளிக் கோளைக் கடந்தது. பூமியை விட வேறொரு கோளைக் கடந்த முதலாவது விண்ணூர்தி இதுவாகும்.

1961அசாம் மாநிலத்தில் சில்சார் தொடருந்து நிலையத்தில், வங்காள மொழி இயக்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

1971 சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.

1978 விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

1991குரோவாசியர்கள் தமது விடுதலைக்காக பொது வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.

2012சிரியாவில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

2016எகிப்திய வானூர்தி பாரிசில் இருந்து கெய்ரோ செல்லும் வழியில் நடுநிலக் கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந்தனர்.

2018வேல்சு இளவரசர் ஹாரி, ரேச்சல் மேகன் மெர்கல் ஆகியோரின் திருமணம் வின்சர் மாளிகையில் இடம்பெற்றது.

 

சிறப்பு நாள்

 

·        இனவழிப்பு நினைவு நாள் (கிரேக்கம்)

·        ஓ சி மின் பிறந்தநாள் (வியட்நாம்)

·        கல்லீரல் அழற்சி சோதனை நாள் (ஐக்கிய அமெரிக்கா)

·        அன்னையர் நாள் (கிர்கிசுத்தான்) 

Tuesday, May 18, 2021

May 18, 2021

வரலாற்றில் இன்று மே 18 (Today in History)

 வரலாற்றில் இன்று மே 18 (Today in History)


மே 18 (May 18) கிரிகோரியன் ஆண்டின் 138 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 139 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள் உள்ளன.

 

332கான்ஸ்டண்டினோபில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார்.

872 இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார்.

1096முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர்.

1268அந்தியோக்கியா எகிப்தின் மம்லுக் சுல்தான் பைபார்களிடம் வீழ்ந்தது.

1565உதுமானியப் படைகள் மால்ட்டாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.

1593மதமறுப்புக் குற்றங்களுக்காக பிரித்தானிய நாடக எழுத்தாளர் கிறித்தோபர் மார்லொவ் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டது.

1652 வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.

1756 பிரித்தானியா பிரான்சு மீது போரை அறிவித்ததைத் தொடர்ந்து ஏழாண்டுப் போர் ஆரம்பமானது.

1803 நெப்போலியப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் பிரான்சு மீது போரை அறிவித்தது.

1804முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக மேலவை தெரிவு செய்தது.

1812 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவலைப் படுகொலை செய்த குற்றத்திற்காக ஜோன் பெல்லிங்காம் என்பவனுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

1896உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசின் முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் போது "கோதிங்கா" என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.

1900 தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.

1912 முதலாவது இந்தியத் திரைப்படம் சிறீ பந்தாலிக் மும்பையில் வெளியிடப்பட்டது.

1917முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்கு கட்டாய ஆள் திரட்டு அதிகாரம் அமெரிக்க அரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டது.

1927மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.

1944 இரண்டாம் உலகப் போர்: மோண்ட்டி கசீனோ சண்டை முடிவுக்கு வந்தது.

1944கிரிமியத் தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.

1955முதலாவது இந்தோசீனப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள், போர்வீரர்கள், பிரான்சிய இராணுவத்தினர் அடங்கிய 310,000 பேர் கம்யூனிச வடக்கு வியட்நாமில் இருந்து தென் வியட்நாமிற்கு இடம் பெயர்ந்தனர்.

1969அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1973சோவியத் ஒன்றியத்தின் ஏரோபுளொட் வானூர்தி 109 வான்வெளியில் கடத்தப்பட்டு, கடத்தல்காரரின் குண்டு வெடித்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 82 பேரும் கொல்லப்பட்டனர்.

1974 அணுகுண்டு சோதனை: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.

1980வாசிங்டனில் புனித எலன்சு மலை தீக்கக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.

1984 அன்னலிங்கம் பகீரதன் சயனைடு அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.

1991வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும், எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை.

1994இசுரேலியப் படைகள் காசாக்கரையில் இருந்து முற்றாக விலகியது. பாலத்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.

2005ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அனுப்பப்பட்ட படிமம் புளூட்டோ நிக்சு, ஐதரா என்ற மேலதிகமாக இரண்டு நிலாக்களைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தியது.

2006நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.

2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.

2010 நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.

2015கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.

2018அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

2018கியூபா தலைநகர் அவானாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 113 பேரில் 112 பேர் உயிரிழந்தனர்.

 

சிறப்பு நாள்

 

·        முள்ளிவாய்க்கால் நினைவு நாள் (இலங்கைத் தமிழர்)

·        கிரிமிய தத்தார் இனவழிப்பு நினைவு நாள் (உக்ரைன்)

·        விடுதலை நாள் (சோமாலிலாந்து, ஏற்கப்படாதது)

·        பன்னாட்டு அருங்காட்சியக நாள்

·        போர்க்குற்ற நாள் (இலங்கை)

·        ஆசிரியர் நாள் (சிரியா)

·        உலக எயிட்சு தடுப்பு மருந்து நாள்

Monday, May 17, 2021

May 17, 2021

வரலாற்றில் இன்று மே 17 2021 (Today in History)

 

வரலாற்றில் இன்று மே 17 2021 (Today in History)

 

மே 17 (May 17) கிரிகோரியன் ஆண்டின் 137 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 138 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

·        1498வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.

·        1521பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

·        1536 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.

·        1590டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினார்.

·        1792நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

·        1805முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

·        1809பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார்.

·        1814 நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது. டென்மார்க் இளவரசர் கிறித்தியான் பிரெடெரிக் மன்னராக முடிசூடினார்.

·        1814மொனாக்கோவின் ஆட்சி பிரான்சிடம் இருந்து ஆஸ்திரியாவுக்குக் கைமாறியது.

·        1865 அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

·        1902 கிரேக்க தொல்லியலாளர் வலேரியோசு ஸ்தாயிசு பண்டைய தொடர்முறைக் கணினி ஆன்ட்டிகித்தீரா பொறிமுறையைக் கண்டுபிடித்தார்.

·        1915பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.

·        1940 இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரைக் கைப்பற்றியது.

·        1969சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துள் சென்று அதனுடன் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.

·        1972இலங்கையில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரசு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள் கூடி தமிழர் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினர். இது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனது.

·        1974அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

·        1980மாணவர் போராட்டத்தை அடக்குவதற்காக தென் கொரியாவில் இராணுவத் தளபதி சுன் தூ-குவான் ஆட்சியைக் கைப்பற்றி இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

·        1983லெபனானில் இருந்து இசுரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இசுரேல், அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.

·        1987ஈரான் ஈராக் போர்: ஈராக்கிய போர் விமானம் ஒன்று அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர், 21 பேர் காயமடைந்தனர்.

·        1990உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை தற்பால்சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.

·        1992தாய்லாந்து பிரதமர் சுச்சிந்தா பிரப்பிராயூனுக்கு எதிராக நடந்த மூன்று-நாள் எதிர்ப்புப் போராட்டங்களில் இராணுவம் சுட்டதில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

·        1994மலாவிவில் முதல் தடவையாக பல-கட்சி பொதுத் தேர்தல் இடம்பெற்றது.

·        1997சயீர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

·        1998 தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

·        2004அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.

·        2006 அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் ஒரிசுகானி மெக்சிகோ வளைகுடாவில் மூழ்கியது.

·        2007 வட கொரியாவில் இருந்து தென் கொரியா வரையான தொடருந்து சேவை 1953 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இடம்பெற்றது.

·        2009 தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

·        2014வடக்கு வாவோசில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

 

சிறப்பு நாள்

·        குழந்தைகள் நாள் (நோர்வே)

·        அரசமைப்பு நாள் (நவூரு)

·        விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)

·        உலக தகவல் சமூக நாள்

 

Saturday, May 1, 2021

May 01, 2021

வரலாற்றில் இன்று - 01/05/2021

 

வரலாற்றில் இன்று
01/05/2021-சனி


1328 : ஸ்காட்லாந்தை தனி நாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது.

ஸ்காட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

 

1776 : இலுமினாட்டி குழு ஆரம்பிக்கப்பட்டது.

 

1794 : பிரெஞ்சுப் படையினர் ஸ்பெயினைத் தோற்கடித்து சென்ற ஆண்டு தாம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினர்.

 

1840 : உலகின் முதலாவது அதிகாரப்பூர்வமாக பசை தடவிய தபால்தலையான பென்னி பிளாக் வெளியிடப்பட்டது.

 

1844 : ஆசியாவின் முதலாவது நவீன காவல்துறையாக

ஹாங்காங் காவல்துறை அமைக்கப்பட்டது.

 

1851 : லண்டனில் பொருட்காட்சி நடத்துவதற்கென்றே கட்டப்பட்ட பளிங்கு அரண்மனை விக்டோரியா மகாராணியால் திறந்துவைக்கப்பட்டது.

 

1862 : அமெரிக்க உள்நாட்டுப் போர் :- அமெரிக்க கூட்டு ராணுவம் நியூ ஓர்லென்ஸைக் கைப்பற்றியது.

 

1866 : அமெரிக்காவில் மெம்பிஸ் இனக்கலவரம் ஆரம்பமானது.

3 நாட்களில் 46 கறுப்பினத்தவர்களும், இரண்டு வெள்ளை இனத்தவரும் கொல்லப்பட்டனர்.

 

1875 : கடந்தாண்டு எரிந்து அழிந்த லண்டன் அலெக்ஸாண்ட்ரா அரண்மனை மீண்டும் நிறுவப்பட்டது.

 

1886 : அமெரிக்காவில் 8 மணி நேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலை நிறுத்தம் ஆரம்பமானது.

 

1890 : அமெரிக்காவில் 8 மணி நேர வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது.

 

1893 : உலக கொலம்பியாக் கண்காட்சி சிகாகோவில் ஆரம்பமானது.

 

1895 : அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் முதல் பயணிகள் மின்சார ரயில் விடப்பட்டது.

 

1897 : கல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

 

1900 : அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.

 

1917 : புலிட்சர் விருது வழங்கும் திட்டம் கொலம்பியா பல்கலைக் கழகத்தினால் துவக்கப்பட்டது.

 

1923 : இந்தியாவில் சென்னை கடற்கரையில் முதன்முதலில் தொழிலாளர் தினம் எம். சிங்காரவேலு தலைமையில் கொண்டாடப்பட்டது.

 

1919 : ஈரான் - துருக்மேனியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,800 பேர் உயிரிழந்தனர்.

 

1930 : சூரியனைச் சுற்றி வந்த குறுங்கோளுக்கு புளூட்டோ என அதிகாரபூர்வமாக பெயரிடப்பட்டது.

 

1931 : நியூயார்க்கில் எம்பயர் ஸ்டேட் பில்டிங் திறந்து வைக்கப்பட்டது.

 

1940 : ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.

 

1944 : இரண்டாம் உலகப் போர் :- 200 கம்யூனிஸ்ட் கைதிகள்

ஏதென்ஸில் நாஜிக்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

1945 : ஹிட்லரின் போர் பிரச்சார அமைச்சர் கோயபல்சும் அவரது மனைவியும் பதுங்கு அறைக்கு வெளியே தங்களது 6 குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

இரண்டாம் உலகப் போர் :- செஞ்சேனையின்

முன்னேற்றத்தை அடுத்து ஜெர்மனியின் தெம்மின் என்ற இடத்தில் 2,500 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டனர்.

 

1956 : ஜோனஸ் சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

மினமாட்டா கொள்ளை நோய் அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது.

 

1957 : இங்கிலாந்து, ஹாம்ஷயர் என்ற இடத்தில் விமானம் ஒன்று விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்.

 

1960 : பம்பாய் மாகாணம் குஜராத், மகாராஷ்டிரா என

இரண்டு மாநிலங்களாக பிரிக்கப் பட்டன.

 

1961 : கியூபாவில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது.

இனி தேர்தலே நடைபெறாது என மே தின உரையில் பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

 

1983 : சிட்னி பொழுதுபோக்கு மையம் திறக்கப்பட்டது.

 

1989 : இந்திய அமைதிகாக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப்புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.

 

1991 : கம்போடியாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

 

1993 : இலங்கை அதிபர் பிரேமதாசா மே தினப் பேரணியில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

 

1999 : 1924 ல் காணாமல்போன பிரிட்டனைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஜார்ஜ் மலோரியின் உடல் எவரெஸ்ட் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

2009 : ஸ்வீடனில் ஓரினத் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது.

 

2010 : சீனாவின் ஷாங்காயில் எக்ஸ்போ - 2010 ஆரம்பமானது.

 

2011 : அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன்

அமெரிக்கக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.