வரலாற்றில் இன்று மே 18 (Today in History)
மே 18 (May
18) கிரிகோரியன் ஆண்டின் 138 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 139 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள்
உள்ளன.
332 – கான்ஸ்டண்டினோபில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை
உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார்.
872 – இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில்
முடிசூடினார்.
1096 – முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர்.
1268 – அந்தியோக்கியா எகிப்தின் மம்லுக் சுல்தான் பைபார்களிடம் வீழ்ந்தது.
1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.
1593 – மதமறுப்புக் குற்றங்களுக்காக பிரித்தானிய நாடக எழுத்தாளர்
கிறித்தோபர் மார்லொவ் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
1652 – வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும்
சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.
1756 – பிரித்தானியா பிரான்சு மீது போரை அறிவித்ததைத் தொடர்ந்து ஏழாண்டுப்
போர் ஆரம்பமானது.
1803 – நெப்போலியப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் பிரான்சு மீது போரை
அறிவித்தது.
1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக மேலவை தெரிவு செய்தது.
1812 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவலைப் படுகொலை செய்த
குற்றத்திற்காக ஜோன் பெல்லிங்காம் என்பவனுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
1896 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசின் முடிசூட்டு விழாக்
கொண்டாட்டத்தின் போது "கோதிங்கா" என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில்
சிக்கி 1,389 பேர் இறந்தனர்.
1900 – தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.
1912 – முதலாவது இந்தியத் திரைப்படம் சிறீ பந்தாலிக் மும்பையில்
வெளியிடப்பட்டது.
1917 – முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்கு கட்டாய ஆள் திரட்டு அதிகாரம்
அமெரிக்க அரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டது.
1927 – மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்
பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45
பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: மோண்ட்டி கசீனோ சண்டை முடிவுக்கு வந்தது.
1944 – கிரிமியத் தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.
1955 – முதலாவது இந்தோசீனப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள், போர்வீரர்கள்,
பிரான்சிய இராணுவத்தினர் அடங்கிய 310,000 பேர் கம்யூனிச வடக்கு வியட்நாமில்
இருந்து தென் வியட்நாமிற்கு இடம் பெயர்ந்தனர்.
1969 – அப்பல்லோ 10
விண்ணுக்கு ஏவப்பட்டது.
1973 – சோவியத் ஒன்றியத்தின் ஏரோபுளொட் வானூர்தி 109 வான்வெளியில் கடத்தப்பட்டு, கடத்தல்காரரின் குண்டு வெடித்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 82 பேரும் கொல்லப்பட்டனர்.
1974 – அணுகுண்டு சோதனை: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில்
இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
1980 – வாசிங்டனில் புனித எலன்சு மலை தீக்கக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான
சேதம் ஏற்பட்டது.
1984 – அன்னலிங்கம் பகீரதன் சயனைடு அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப்
புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.
1991 – வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில்
இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும், எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை.
1994 – இசுரேலியப் படைகள் காசாக்கரையில் இருந்து முற்றாக விலகியது.
பாலத்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.
2005 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அனுப்பப்பட்ட படிமம் புளூட்டோ
நிக்சு, ஐதரா என்ற மேலதிகமாக இரண்டு
நிலாக்களைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தியது.
2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே
இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு
அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ்
மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.
2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.
2015 – கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
2018 – அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டில் 10
பேர் கொல்லப்பட்டனர்.
2018 – கியூபா தலைநகர் அவானாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம்
செய்த 113 பேரில் 112 பேர் உயிரிழந்தனர்.
சிறப்பு நாள்
·
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
(இலங்கைத் தமிழர்)
·
கிரிமிய தத்தார் இனவழிப்பு நினைவு நாள்
(உக்ரைன்)
·
விடுதலை நாள் (சோமாலிலாந்து, ஏற்கப்படாதது)
·
பன்னாட்டு அருங்காட்சியக நாள்
·
போர்க்குற்ற நாள் (இலங்கை)
·
ஆசிரியர் நாள் (சிரியா)
·
உலக எயிட்சு தடுப்பு மருந்து நாள்
No comments:
Post a Comment