வரலாற்றில் இன்று மே 19 (Today in History)
மே 19 (May
19) கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள்
உள்ளன.
715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம்
புரிந்தார்.
1268 – பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது.
1499 – அராகனின் 13-வயது
கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம்
நடைபெற்ரது.
1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது
இரண்டாவது பயணத்தை 110
பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.
1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி ஆன் பொலின் வேறு
ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு
மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள்;
1542 – புரோம் இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மரில்)
வீழ்ந்தது.
1568 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி ஸ்காட்லாந்தின் முதலாம்
மேரியைக் கைது செய்ய உத்தவிட்டார்.
1649 – இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் இங்கிலாந்து
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து
குடியரசாக இருந்தது.
1655 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஜமேக்கா மீதான முற்றுகை ஆரம்பமானது.
1743 – சான்-பியேர் கிறிஸ்தீன் செல்சியசு வெப்பநிலை அலகைக் கண்டுபிடித்தார்.
1780 – நியூ இங்கிலாந்து, மற்றும்
கனடாவின் சில பகுதிகளில் அசாதாரணமான இருட்டு பகல் நேரத்தில் அவதானிக்கப்பட்டது.
1802 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை
அறிமுகப்படுத்தினார்.
1828 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் குவின்சி ஆடம்ஸ் கம்பளி
உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்வை சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
1834 – இலங்கையில் பாடசாலைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.[1]
1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா
மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர்
முடிவுக்கு வந்தது.
1919 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியக் கருங்கடல் கரையில்
தரையிறங்கினார். துருக்கிய விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
1934 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கீமோன்
ஜோர்ஜியெவ் பிரதமராகப் பதவியேற்றார்.
1950 – இசுரேலியக் கப்பல்களுக்கும் வணிகத்திற்கும் சுயஸ் கால்வாய்
மூடப்படும் என எகிப்து அறிவித்தது.
1950 – பாக்கித்தானுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த வெடிகுண்டுகள் அடங்கிய
படகு அமெரிக்காவின் தெற்கு அம்போய் துறைமுகத்தில் வெடித்ததில் நகரம் பெரும்
சேதத்துக்குள்ளாகியது.
1961 – சோவியத்தின் வெனேரா 1
வெள்ளிக் கோளைக் கடந்தது. பூமியை விட வேறொரு கோளைக் கடந்த முதலாவது விண்ணூர்தி
இதுவாகும்.
1961 – அசாம் மாநிலத்தில் சில்சார் தொடருந்து நிலையத்தில், வங்காள மொழி இயக்கத்துக்கு ஆதரவாக
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.
1978 – விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டது.
1991 – குரோவாசியர்கள் தமது விடுதலைக்காக பொது வாக்கெடுப்பில்
வாக்களித்தனர்.
2012 – சிரியாவில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – எகிப்திய வானூர்தி பாரிசில் இருந்து கெய்ரோ செல்லும் வழியில்
நடுநிலக் கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந்தனர்.
2018 – வேல்சு இளவரசர் ஹாரி, ரேச்சல்
மேகன் மெர்கல் ஆகியோரின் திருமணம் வின்சர் மாளிகையில் இடம்பெற்றது.
சிறப்பு நாள்
·
இனவழிப்பு நினைவு நாள் (கிரேக்கம்)
·
ஓ சி மின் பிறந்தநாள் (வியட்நாம்)
·
கல்லீரல் அழற்சி சோதனை நாள் (ஐக்கிய
அமெரிக்கா)
· அன்னையர் நாள் (கிர்கிசுத்தான்)
No comments:
Post a Comment