வரலாற்றில் இன்று மே 17 2021 (Today in History)
மே 17 (May 17) கிரிகோரியன் ஆண்டின் 137 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 138
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
·
1498 – வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
·
1521 – பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட்
தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
·
1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம்
செல்லுபடியற்றதாக்கப்பட்டது.
·
1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினார்.
·
1792 – நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
·
1805 – முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
·
1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம்
நெப்போலியன் ஆணையிட்டார்.
·
1814 – நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம்
கையெழுத்திடப்பட்டது. டென்மார்க் இளவரசர் கிறித்தியான் பிரெடெரிக் மன்னராக
முடிசூடினார்.
·
1814 – மொனாக்கோவின் ஆட்சி பிரான்சிடம் இருந்து ஆஸ்திரியாவுக்குக்
கைமாறியது.
·
1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம்
பாரிசில் அமைக்கப்பட்டது.
·
1902 – கிரேக்க தொல்லியலாளர் வலேரியோசு
ஸ்தாயிசு பண்டைய தொடர்முறைக் கணினி ஆன்ட்டிகித்தீரா பொறிமுறையைக் கண்டுபிடித்தார்.
·
1915 – பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
·
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி
பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரைக் கைப்பற்றியது.
·
1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துள்
சென்று அதனுடன் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
·
1972 – இலங்கையில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரசு, இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள் கூடி தமிழர் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினர்.
இது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனது.
·
1974 – அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர்
கொல்லப்பட்டனர்.
·
1980 – மாணவர் போராட்டத்தை அடக்குவதற்காக தென் கொரியாவில் இராணுவத் தளபதி
சுன் தூ-குவான் ஆட்சியைக் கைப்பற்றி இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
·
1983 – லெபனானில் இருந்து இசுரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இசுரேல், அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
·
1987 – ஈரான் – ஈராக்
போர்: ஈராக்கிய போர் விமானம் ஒன்று அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது நடத்திய
ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர், 21 பேர் காயமடைந்தனர்.
·
1990 – உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை தற்பால்சேர்க்கையை உளநோய்களின்
பட்டியலில் இருந்து நீக்கியது.
·
1992 – தாய்லாந்து பிரதமர் சுச்சிந்தா பிரப்பிராயூனுக்கு எதிராக நடந்த
மூன்று-நாள் எதிர்ப்புப் போராட்டங்களில் இராணுவம் சுட்டதில் 52 பேர்
கொல்லப்பட்டனர்.
·
1994 – மலாவிவில் முதல் தடவையாக பல-கட்சி பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
·
1997 – சயீர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
·
1998 – தமிழர் விடுதலைக் கூட்டணியின்
யாழ்ப்பாண மாநகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
·
2004 – அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம் மாசச்சூசெட்ஸ்
மாநிலத்தில் நடைபெற்றது.
·
2006 – அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல்
ஒரிசுகானி மெக்சிகோ வளைகுடாவில் மூழ்கியது.
·
2007 – வட கொரியாவில் இருந்து தென் கொரியா
வரையான தொடருந்து சேவை 1953 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இடம்பெற்றது.
·
2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில்
பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.
·
2014 – வடக்கு வாவோசில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 17 பேர்
உயிரிழந்தனர்.
சிறப்பு நாள்
·
குழந்தைகள் நாள் (நோர்வே)
·
அரசமைப்பு நாள் (நவூரு)
·
விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக்
குடியரசு)
·
உலக தகவல் சமூக நாள்
No comments:
Post a Comment