வரலாற்றில் இன்று மே 21
கிரிகோரியன் ஆண்டு : 141 ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 142 ஆவது நாள்.
ஆண்டு முடிவிற்கு : 224 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
878 – சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர்.
996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.
1674 – யோன் பிசுக்கி போலந்து மன்னராகவும், லித்துவேனியாவின் இளவரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1703 – ஆங்கிலேய எழுத்தாளர் டானியல் டீஃபோ தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார்.
1792 – சப்பானில் கியூசூ தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,500 பேர் உயிரிழந்தனர்.
1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
1856 – அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் லாரன்சு நகரம் அடிமைகளுக்கு ஆதரவான படையினரால் கைப்பற்றப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
1864 – உருசிய-சிர்க்கேசியப் போர் முடிவுற்றதாக உருசியப் பேரரசு அறிவித்தது. பெரும்பாலான சிர்க்கேசியர்கள் நடு கடத்தப்பட்டனர்.
1864 – இயோனியத் தீவுகள் கிரேக்கத்துடன் மீண்டும் இணைந்தது.
1871 – பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிசைத் தாக்கின. ஒரு வார முற்றுகையில் 20,000 மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
1871 – முதலாவது பற்சட்டத் தொடருந்துப் பாதை ஐரோப்பாவில் அமைக்கப்பட்டது.
1881 – அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1904 – பாரிசில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது.
1917 – அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
1937 – ஆர்க்டிக் பெருங்கடல் பனிப்பாறைகளில் முதன் முதலில் அறிவியல் ஆய்வுகூடம் ஒன்றை சோவியத் ஒன்றியம் அமைத்தது.
1939 – கனடாவில் தேசியப் போர் நினைவகம் ஒட்டாவாவில் பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் திறந்து வைக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
1961 – குடிசார் உரிமைகள் இயக்கம்: அலபாமாவில் நடந்த இனவன்முறைகளை அடுத்து அங்கு இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1966 – வட அயர்லாந்தில் அல்சுடர் தன்னார்வப் படை அயர்லாந்துக் குடியரசுப் படைகள் மீது போரை அறிவித்தது.
1972 – மைக்கலாஞ்சலோவின் பியேத்தா ஓவியம் உரோம் நகரில் புனித பேதுரு பேராலயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட அங்கேரிய நிலவியலாளர் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது.
1976 – கலிபோர்னியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.
1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
1991 – எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்து ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1994 – யெமன் சனநாயகக் குடியரசு யெமனில் இருந்து விலக எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது.
1996 – தான்சானியாவில் பூக்கோவா என்ற பயணிகள் கப்பல் விக்டோரியா ஏரியில் மூழ்கியதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1998 – இந்தோனேசியாவில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்நாட்டை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த சுகார்த்தோ அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
2001 – பிரான்சில் அத்திலாந்திக் அடிமை வணிகம், மற்றும் அடிமைத்தொழில்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த 6.8 அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். பலேரிக் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கியது.
2006 – செர்பியா-மொண்டெனேகுரோவில் இருந்து விலகுவதற்கான பொது வாக்கெடுப்பு மொண்டெனேகுரோ குடியரசில் இடம்பெற்றது. 55% மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2012 – யெமன், சனா நகரில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.
சிறப்பு நாள்:
விடுதலை நாள் (மொண்டெனேகுரோ, 2006)
கடற்படை நாள் (சிலி)
No comments:
Post a Comment