திருக்குறள் பகுதி 06
அறத்துப்பால்:
·
அறத்துப்பால் 38
அதிகாரங்களையும் 4 இயல்களையும் உடையது.
·
பாயிரவியல் = 4
அதிகாரங்கள்
·
இல்லறவியல் = 20
அதிகாரங்கள்
·
துறவறவியல் = 13 அதிகாரங்கள்
·
ஊழியல் = 1 அதிகாரங்கள்
பொருட்பால்:
·
பொருட்பாலில் 70
அதிகாரங்களையும் 3 இயல்களையும் உள்ளது.
·
அரசியல் = 25 அதிகாரங்கள்
·
அங்கவியல் = 32
அதிகாரங்கள்
·
குடியியல் = 13
அதிகாரங்கள்
இன்பத்துப்பால்:
·
இன்பத்துப்பால் 25
அதிகாரங்களையும் 2 இயல்களையும் உடையது.
·
களவியல் = 7 அதிகாரங்கள்
·
கற்பியல் = 18 அதிகாரங்கள்
திருக்குறளின் உரைகள்:
• திருக்குறளுக்குப் பத்து பேர் உரை உள்ளது எனப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது.
• தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
• பரிதி பரிமே லழகர்-திருமலையர்
• மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு
• எல்லையுரை செய்தார் இவர்
• இவர்களில் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள் ஆகிய ஐவர் உரைகள்
வெளிவந்துள்ளன. தருமர், தாமத்தர், நச்சர்
ஆகிய மூவரின் உரைகள் சில குறட்பாக்களுக்கு மட்டும் கிடைத்துள்ளன. திருமலையர்,
மல்லர் ஆகிய இருவர் உரை கிடைக்கவில்லை.
• கிடைத்துள்ள இந்த உரைகளில் காலத்தால் பிந்திய பரிமேலழகர் உரை 13 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. பரிப்பெருமாள் காலம் 11 ஆம் நூற்றாண்டு எனத் தெளிவாகத் தெரிகிறது.
·
இவரது
உரை மணக்குடவர் உரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. எனவே மணக்குடவர் காலம் 10 ஆம் நூற்றாண்டு என்பதாகிறது. ஏனைய மூவர் உரைகளைக்
காலிங்கர், பரிப்பெருமாள்,
பரிமேலழகர் எனக் கால வரிசைப்படுத்தலாம். பரிதியார் உரை
காலிங்கர் உரையைத் தழுவிச் செல்கிறது.
No comments:
Post a Comment