19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2
1. பிரம்ம சமாஜம்
அ) பிரம்ம சமசஜத்தினை நிறுவியவர் யார்?
விடை: இராஜாராம் மோகன் ராய்
ஆ) இராஜாராம் மோகன் ராய் பயின்ற மொழிகள் யாவை?
விடை: அராபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு போன்ற மொழிகளை பயின்றார்.
இ) இராஜாராம் மோகன் ராய் எழுதிய புத்தகங்கள் யாவை?
விடை: ‘ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள்’, ‘அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழி’ போன்றவை ஆகும்.
ஈ) பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை யாது?
விடை: ‘ஒரே கடவுள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ‘பொது சமயத்தில்’ நம்பிக்கை கொண்டிருந்தது.
2. ஆரிய சமாஜம்
அ) சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?
விடை: ‘மூல் சங்கர்’.
ஆ) சுவாமி தயானந்த சரஸ்வதியின் குரு யார்?
விடை: சுவாமி விராஜனந்தர்.
இ) சுவாமி தயானந்த சரஸ்வதியின் கொள்கை என்ன?
விடை: ‘வேதங்களை நோக்கிச் செல்’ என்பது.
ஈ) ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது?
விடை: பெண் கல்விஇ கலப்பு மணம்இ சமபந்தி உணவு முறைஇ பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேனற்றம் ஆகியவற்றை ஆதரித்தது.
No comments:
Post a Comment