LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக  பகுதி  9

1. தயானந்த ஆங்கிலோ வேதிக் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி.

2. ‘சுதேசி’ மற்றும் ‘இந்தியா இந்தியருக்கே’ போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர் சுவாமி தயானந்தர்.

3. சுவாமி தயானந்தர் இந்து சமயத்தின் ‘மார்ட்டின் லுதர்’ என அழைக்கப்பட்டார்.

4. பிரம்மஞான சபை நிறுவப்பட்ட ஆண்டு 1875.

5. பிரம்மஞான சபை நிறுவப்பட்ட இடம் நியூயார்க் நகர்.

6. கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவை பெறுவதற்காக பிரம்மஞான சபை
நிறுவப்பட்டது.

7. இந்தியர்களின் மறுமலர்ச்சிகாக ஒரு முன்னோடி இயக்கமாக செயல்பட்ட சபை பிரம்மஞான சபை.

8. பிரம்மஞான சபையின் தலைமையிடம் சென்னையில் அடையார்இல் உள்ளது.

9. ‘தியோசோபி’ என்பதன் பொருள் கடவுளைப் பற்றிய அறிவு.

10. 1893ஆம் ஆண்டு அன்னிபெசன்ட் அவர்கள் பிரம்மஞான சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment