LATEST

Monday, January 13, 2020

சமூக அறிவியல் - தென்னிந்திய அரசுகள் பகுதி 2

சமூக அறிவியல்  

தென்னிந்திய அரசுகள் பகுதி 2

1. கி.பி. 300 முதல் 600ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய 3 நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்கள்
அ) பாரசீகர்கள் 
ஆ) களப்பிரர்கள் 
இ) சாதவாகனர்கள்
விடை: ஆ) களப்பிரர்கள்
 
2. பல்லவர்களின் தலைநகரம்
அ) உத்திரமேரூர் 
ஆ) காஞ்சிபுரம் 
இ) மாமல்லபுரம்
விடை: ஆ) காஞ்சிபுரம்
 
3. மாமல்லன் என்று புகழப்பட்டவர்
அ) இரண்டாம் நந்திவர்மன் 
ஆ) இராஜசிம்மன் 
இ) முதலாம் நரசிம்மவர்மன்
விடை: இ) முதலாம் நரசிம்மவர்மன்
 
4. கடைசி பல்லவ அரசர்
அ) பரமேஸ்வர வர்மன் 
ஆ) இராஜசிம்மன் 
இ) அபராஜித்தன்
விடை: இ) அபராஜித்தன்
 
5. சோழர்களின் இலச்சினை
அ) மீன் 
ஆ) புலி 
இ) வில்
விடை: ஆ) புலி
 
6. சுங்கம் தவிர்த்த சோழன் எனப்பட்டவர்
அ) இராசமகேந்திரன் 
ஆ) முதலாம் குலோத்துங்கன் 
இ) முதலாம் இராசாதிராசன்
விடை: ஆ) முதலாம் குலோத்துங்கன்
 
7. பாண்டியர்களின் தலைநகரம்
அ) இராமநாதபுரம் 
ஆ) திருநெல்வேலி 
இ) மதுரை
விடை: இ) மதுரை

8. பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்ம விஷ்ணு.
 
9. மகேந்திர வர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் அப்பர்.
 
10. முதலாம் மகேந்திரவர்மன் மகேந்திரமங்கலம், மகேந்திரவாடி என்ற இரண்டு நகரங்களை நிறுவினார்.

No comments:

Post a Comment