பொது அறிவு வினா விடை பகுதி 11
1 ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896
2. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
3. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
4. உரைநடையில் அடுக்குமொழியையும், உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
5 ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை
6 ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச் தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்
7. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14
8. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்
9. ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்
10. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
No comments:
Post a Comment