LATEST

Saturday, March 14, 2020

இந்திய பாராளுமன்றம்

இந்திய பாராளுமன்றம்

பாராளுமன்றம்•    அரசியலமைப்பு சட்டம் சரத்து 79 முதல் 122 வரை பாராளுமன்றத்தின் அமைப்பு, ஒன்று சேர்த்தல், பணிக்காலம், அலுவலர்கள், கோட்பாடுகள், சிறப்புரிமைகள், அதிகாரம் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. 
•    இது பகுதி – ஏ ல் அமைந்துள்ளது.

அமைப்பு
அரசியலமைப்பின் படி பாராளுமன்றமானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
1. குடியரசுத்தலைவர்
2. மக்களவை
3. மாநிலங்களவை
 
குடியரசுத்தலைவர்
•    குடியரசுத்தலைவர் பாராளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கமாவார். ஏனெனில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அது சட்டமாகும்.
•    குடியரசுத் தலைவரின் பாராளுமன்றம் தொடர்பான செயல்பாடுகளில் இரு அவைகளையும் கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது மக்களவையை கலைப்பது, இரு அவைகளிலும் உரையாற்றுவது மற்றும் அவைகள் கூடாதபோது அவசரச் சட்டங்களை பிறப்பிப்பது போன்றவை அடங்கும்.
•    மக்களவை மற்றும் மாநிலங்களவையும் ஒருங்கிணைந்து பாராளுமன்றமாக செயல்படுகிறது.
 
மாநிலங்களவை
•    அரசியலமைப்பின் நான்காவாது அட்டவணையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
•    நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை – 250
•    தற்போதைய எண்ணிக்கை – 245
•    மாநிலங்கள் – 29
•    யூனியன் பிரதேச உறுப்பினர்கள் – 4
•    நியமன உறுப்பினர்கள் – 12
 
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவம்
 
•    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மறைமுக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
•    சரத்து 80(3)ன்படி குடியரசுத் தலைவர் இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பான அறிவும் அனுபவமும் கொண்ட 12 உறுப்பினர்களை நியமிக்கின்றார் என்று ஷரத்து 80(3) கூறுகிறது.
•    7 யூனியன் பிரதேசங்களில் இரண்டில் மட்டும் (டெல்லி மற்றும் பாண்டிச்சேரி) மாநிலங்களவைக்கு பிரதிநிதித்துவம் உள்ளது.
•    இதர 5 யூனியன் பிரதேசங்களில் மக்கள்தொகை மிக குறைவாக இருப்பதால் அவற்றிற்கு மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை.
 
மக்களவை (சரத்து 81) 
 
•    அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 550 + 2 = 552.
•    இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
•    சரத்து 331-ன் படி ஆங்கிலோ இந்தியன் சமூகத்தைச் சார்ந்த 2 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment