LATEST

Friday, April 17, 2020

திருவள்ளுவமாலை பகுதி 03

திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள் 02

பொன்முடியார்

        கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
        கூநின்று அளந்த குறளென்ப – நூல்முறையான்
        வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
        தாம்நின்று அளந்த குறள்

கோதமனார்

        ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
        போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி
        வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
        சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று

நத்தத்தனார்
        ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
        பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் – போயொருத்தர்
        வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
        ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்

முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

        உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
        தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்
        முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
        எப்பா வலரினும் இல்

ஆசிரியர் நல்லந்துவனார்

        சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
        போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவே
        முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
        எப்பா வலரினும் இல்

கீரந்தையார்

        தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
        முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் – எப்பாலும்
        வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
        தெய்வத் திருவள் ளுவர்

சிறுமேதாவியார்

        வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
        நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் – கூடுபொருள்
        எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
        வள்ளுவர் சொன்ன வகை

நல்கூர் வேள்வியார்

        உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
        உத்தர மாமதுரைக்கு அச்சென்ப – இப்பக்கம்
        மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
        போதார் புனற்கூடற்கு அச்சு

தொடித்தலை விழுத்தண்டினார்

        அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
        திறம்மூன்று எனப்பகுதி செய்து – பெறல்அறிய
        நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
        போலும் ஒழிந்த பொருள்

No comments:

Post a Comment