LATEST

Friday, April 17, 2020

திருவள்ளுவமாலை பகுதி 05

திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள் 04

பெருஞ்சித்திரனார்

        ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
        ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
        தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
        வேதமே மேதக் கன

நரிவெரூஉத் தலையார்

        இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
        முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் – மன்பதைகட்கு
        உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
        கொள்ள மொழிந்தார் குறள்

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்

        புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
        சிலவர் புலவர் எனச்செப்பல் – நிலவு
        பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
        கறங்குஇருள் மாலைக்கும் பெயர்

மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்


        இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
        மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ – அன்பொழியாது
        உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
        வள்ளுவர் வாயுறை வாழ்த்து

கவிசாகரப் பெருந்தேவனார்

        பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
        ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
        தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
        பாவிற்கு வள்ளுவர்வெண் பா

மதுரைப்பெருமருதனார்

        அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
        திறம்இருபத் தைந்தால் தெளிய – முறைமையால்
        வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
        ஓதஅழக் கற்றது உலகு

கோவூர்க் கிழார்

        அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
        திறமுறத் தேர்ந்து தெளியக் – குறள்வெண்பாப்
        பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
        முன்னை முதுவோர் மொழி

No comments:

Post a Comment