LATEST

Friday, April 17, 2020

திருவள்ளுவமாலை பகுதி 06

திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள் 05

 உறையூர் முதுகூற்றனார்

        தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
        பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் – நாவிற்கு
        உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
        செயலில்லை என்னும் திரு

இழிகண் பெருங்கண்ணனார்

        இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
        செம்மை நெறியின் தெளிவுபெற – மும்மையின்
        வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
        பாடினர் இன்குறள்வெண் பா

செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்


        ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
        யாவரும் வல்லார் எடுத்தியம்பத் – தேவர்
        திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
        பொருவில் ஒழுக்கம் பூண்டார்

செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்

        வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
        ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
        உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
        வள்ளுவர் வாய்மொழி மாட்டு

வண்ணக்கஞ் சாத்தனார்

        ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
        சீரியது என்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
        வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
        ஓது குறட்பா உடைத்து

களத்தூர்க் கிழார்

        ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
        தர்மம் முதல்நான்கும் சாலும் – அருமறைகள்
        ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
        புந்தி மொழிந்த பொருள்

நச்சுமனார்

        எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
        வழுக்கில் வனப்பு அணிவண்ணம் – இழுக்கின்றி
        என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
        இன்றிவர் இன்குறள்வெண் பா

அக்காரக்கனி நச்சுமனார்

        கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
        நிலைநிரம்பும் நீர்மைய தேனும் – தொலைவுஇலா
        வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
        பால்நூல் நயத்தின் பயன்

நப்பாலத்தனார்
        அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
        சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு – குறும்பாவா
        வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
        உள்ளிருள் நீக்கும் விளக்கு

No comments:

Post a Comment