LATEST

Friday, April 10, 2020

கற்காலப் பிரிவுகள் பகுதி 6

கற்காலப் பிரிவுகள்

சுருக்க உரை:

•    இடைக் கற்காலம் என்பது  மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில் கற்காலத்தில் பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட கால கட்டத்தைக் குறிக்கிறது.
•    புதிய கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும் இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டதிற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
•    பெரும்பாலான பகுதிகளில் நுண்கற்கருவிகள் இக்காலப் பண்பாட்டுக்குரிய சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. தூண்டில்கள், கற் கோடாரிகள், ஓடங்கள், வில்லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில் காணப்பட்டுள்ளன.
•    இடைக்கற்கால சின்னங்கள் குஜராத்தில் லாங்கன்ச், மத்திய பிரதேசத்தில் ஆதம்கார், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீகார் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
•    பாறைக் குகைகளில் காணப்படும் ஒவியங்களிலிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி ஒரளவு அறிய முடிகிறது.
•    இடைக் கற்காலத்தில் வேறுவகையிலான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மிகச் சிறிய கற்களாலான இவை பெரும்பாலும் அதிகபட்சம் ஐந்து சென்டிமீட்டர் அளவையுடையதாகும். எனவே இவற்றை நுண்கற்கருவி அல்லது மைக்ரோலித் என்று அழைக்கிறோம்.
•    வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகியன இக்காலத்திலும் தொடர்ந்தன. பெரிய விலங்குகளுக்குப்பதில் சிறிய விலங்குகளை வேட்டையாடுவதிலும், மீன் பிடிப்பதிலும் இக்கால மக்கள் அதிக கவனம் செலுத்தினர். வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினர்.
•    மேலும் ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கி வாழும் போக்கும் வளரத் தொடங்கியது. ஆகையால், பிராணிகளை வளர்த்தல், தோட்டப் பயிரிடுதல், தொடக்கக்கால வேளாண்மை போன்ற நடவடிக்கைகளை இக்காலத்தில் தொடங்கின. நாய், மான், பன்றி, தீக்கோழி போன்ற விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளமை இதற்கு சான்றாகும்.

No comments:

Post a Comment