LATEST

Saturday, April 18, 2020

பொது தமிழ் வினா விடை 93

பொது தமிழ் வினா விடை 93

1. “பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வெ.இராமலிங்கனார்
(D) சுரதா
ANS: (C) வெ.இராமலிங்கனார்

2. ‘பாவலரேறு’ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
(A) அப்துல் ரகுமான்
(B) வாணிதாசன்
(C) முடியரசன்
(D) துரை. மாணிக்கம்
ANS: (D) துரை. மாணிக்கம்
3. மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் ;
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் - என்று பாராட்டப்படுபவர்
(A) உமறுப்புலவர்
(B) அப்துல் ரகுமான்
(C) ந. பிச்சமூர்த்தி
(D) ஞானக் கூத்தன் 
ANS: (B) அப்துல் ரகுமான்

4. தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?
(A) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
(B) நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு
(C) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை
(D) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை
ANS: (A) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
5. ‘ஞான சாகரம்’ - இதழினை ‘அறிவுக்கடல்’ என மாற்றியவர்
(A) பரிதிமாற்கலைஞர்
(B) மறைமலையடிகள்
(C) இரா.பி.சேதுப்பிள்ளை
(D) திரு.வி.க.
ANS: (B) மறைமலையடிகள்
6. “நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம்வாழ்வில்
ஓதித்தொழு(து) எழுக ஓர்ந்து”
இவ்வாறு திருக்குறளின் பெருமையைப் பாடியவர் யார்?
(A) கபிலர்
(B) ஒளவையார்
(C) கவிமணி
(D) பரணர்
ANS: (C) கவிமணி
7. தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும் - இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?
(A) பாரதியார், பெரியாரைப் பற்றிப் பாடியது
(B) பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
(C) கவிமணி, இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
(D) நாமக்கல் கவிஞர், இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
ANS: (B) பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
8. ‘காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே’ – என்று பாடியவர்
(A) திருமூலர்
(B) கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை
(C) பாரதியார்
(D) பாரதிதாசன் 
ANS: (B) கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை
9. “நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே
நான் இறந்து விடுவேன்” - என்று கூறியவர்
(A) காந்தியக் கவிஞர் இராமலிங்கர்
(B) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
(C) ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
(D) ருசிய அறிஞர் தால்கதாய்
ANS: (C) ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
10. தாயுமேது தந்தையேது
தனையர் கற்றத் தாருமேது
ஆயும்போது யாவும் பொம்ம
லாட்டமே பூலோகசூது என்று பாடியவர்
(A) மீரா
(B) சாலை, இளந்திரையன்
(C) பாஸ்கரதாஸ்
(D) பாரதிதாசன்
ANS: (C) பாஸ்கரதாஸ்

No comments:

Post a Comment