பொது தமிழ் வினா விடை 95
1. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல் - இக்குறட்பாவில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு தருக.
(A) உரிச்சொற்றொடர்
(B) வினையெச்சம்
(C) இரண்டாம் வேற்றுமைத் தொகை
(D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ANS: (D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2. கீழக்காணும் தொடரில் வழூஉச் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி
(A) இடப்பக்கச் சுவறில் எழுதாதே
(B) இடது பக்கச் சுவரில் எழுதாதே
(C) இடக்பக்கச் சுவற்றில் எழுதாதே
(D) இடப்பக்கச் சுவரில் எழுதாதே
ANS: (D) இடப்பக்கச் சுவரில் எழுதாதே
3. கீழக்காணும் அடிக்கோடிட்ட சொற்களுள் முதனிலை திரிந்த தொழிற்பெயரைக் காண்க.
(A) அறிவறிந்த மக்கட்பேறு
(B) இராமனுக்கு அடி விழுந்தது.
(C) முருகன் பரிசு பெற்றான்
(D) மாதவி ஆடற்கலையில் சிறந்தவள்
ANS: (A) அறிவறிந்த மக்கட்பேறு
4. ‘வந்தான்’, ‘நடந்தான்’” – வேர்ச்சொல்லைச் சுட்டுக.
(A) வந்து, நடந்து
(B) வந்த, நடந்த
(C) வா, நட
(D) வந்தான், நடந்தான்
ANS: (C) வா, நட
5. பின்வரும் சொற்களில் ஈறுபோதல் விதிப்படியும் இனமிகல் விதிப்படியும் புணரும் பண்புச் சொல்
எது?
(A) நிலங்கடந்தான்
(B) வாழைப்பழம்
(C) கருங்குயில்
(D) பெரியன்
ANS: (C) கருங்குயில்
6. ‘விரல்கள் பத்தும் மூலதனம்’ என்று கூறியவர்
(A) திருமூலர்
(B) தொல்காப்பியர்
(C) தாராபாரதி
(D) மருதகாசி
ANS: (C) தாராபாரதி
7. தென்னிந்தியாவின் ஏதென்சு நகர் என்றழைக்கப்பெறுவது எது?
(A) மதுரை
(B) நாகர்கோவில்
(C) இராமநாதபுரம்
(D) திருச்சி
ANS: (A) மதுரை
8. கீழ்காணும் நூலகளில் எட்டுத்தொகையில் அடங்காத நூல் எது?
(A) அகநானூறு
(B) கலித்தொகை
(C) ஐங்குறுநூறு
(D) நெடுநல்வாடை
ANS: (D) நெடுநல்வாடை
9. தமிழநாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
(A) தேசியக்கொடி
(B) கதரின் வெற்றி
(C) தேச பக்தி
(D) கதரின் இரகசியம்
ANS: (B) கதரின் வெற்றி
10. நானிலத்திற்குரிய ஊரின் பெயர்களைப் பொருத்துக
(a) குறிஞ்சி 1. ஆலங்காடு
(b) முல்லை 2. கோடியக்கரை
(c) மருதம் 3. ஆனைமலை
(d) நெய்தல் 4. புளியஞ்சோலை
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 2 1 3 4
(C) 3 2 1 4
(D) 1 3 4 2
ANS: (A) 3 1 4 2
No comments:
Post a Comment