பொது தமிழ் வினா விடை 96
1. ‘ஆற்றுணா வேண்டுவ(து) இல்’ - இப்பழமொழியில் உள்ள ‘ஆற்றுணா| என்பதன் பொருள்.(A) அரையன்
(B) வழிநடை உணவு
(C) அரண்மனை
(D) திருவிழா
ANS: (B) வழிநடை உணவு
2. சங்க கால இலக்கியங்கள்
(A) எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்
(B) நன்னூலும், நம்பியகப்பொருளும்
(C) கம்பராமாயணமும், பெரியபுராணமும்
(D) வளையாபதியும், குண்டலகேசியும்
ANS: (A) எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்
3. கீழக்காணும் கூற்றுக்களில் பொருத்தமில்லாததைக் கூறுக.
I. பெருமுத்தரையர் பற்றிய குறிப்பு நாலடியாரில் உள்ளது. பழமொழியிலும் இடம்பெற்றுள்ளது.
II. கபிலர் பாடிய அறநூல் ‘இன்னா நாற்பது’
III. நான்மணிக்கடிகையில் உள்ள நூறு பாடல்களும் நான்கு நான்கு கருத்துக்களைக் கொண்டு இயங்குவது
IV. அம்மை என்னும் வனப்பின்பாற்படும் காரியாசான் இயற்றிய நூல் சிறுபஞ்சமூலம் என்பதாகும்.
(A) II மட்டும் பொருத்தமற்றது (B) III மட்டும் பொருத்தமற்றது
(C) IV மட்டும் பொருத்தமற்றது (D) I மட்டும் பொருத்தமற்றுது
ANS: (D) I மட்டும் பொருத்தமற்றுது
4. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம்” கலிங்கத்துப்பரணியே - இப்படிக் கூறியவர்
(A) திரு.வி. கல்யாண சுந்தரம்
(B) பெரியார்
(C) அண்ணாதுரை
(D) மு.வரதராசன்
ANS: (C) அண்ணாதுரை
5. குரவைக் கூத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவி
(A) தொண்டகப்பறை
(B) செங்கோட்டுயாழ்
(C) புல்லாங்குழல்
(D) உடுக்கை
ANS: (A) தொண்டகப்பறை
6. “கண்ணுள் வினைஞர்” என மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரால் பாராட்டப்பெறுபவர்கள்
(A) ஓவியக் கலைஞர்கள்
(B) சிற்பக் கலைஞர்கள்
(C) கட்டடக் கலைஞர்கள்
(D) இசைக் கலைஞர்கள்
ANS: (A) ஓவியக் கலைஞர்கள்
7. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களுள் மிகவும் பழமையான கோயில் உள்ள ஊர்
(A) சுவாமிமலை
(B) பிள்ளையார்பட்டி
(C) திருப்பரங்குன்றம்
(D) பழனி
ANS: (B) பிள்ளையார்பட்டி
8. கீழக்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
(A) ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
(B) எலிக்குப் பகை பூனை, நண்டுக்குப் பகை நரியும் கொக்கும், தவளைக்குப் பகை பாம்பும் பருந்தும்
(C) கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
(D) சேற்று நண்டு சேற்றைக் குழைத்து ஏற்றடைக்குதே
ANS: (B) எலிக்குப் பகை பூனை, நண்டுக்குப் பகை நரியும் கொக்கும், தவளைக்குப் பகை பாம்பும் பருந்தும்
9. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் சேராத ஒருவர்
(A) தருமர்
(B) ஜி.யு.போப்
(C) மல்லர்
(D) பரிமேலழகர்
ANS: (B) ஜி.யு.போப்
10. கபிலரைப் பிற கவிஞர்கள் புகழ்ந்ததைச் சரியாகப் பொருத்துக :
(a) நக்கீரர் 1. ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’
(b) பெருங்குன்றூர் கிழார் 2. ‘வாய்மொழிக் கபிலன்’
(c) இளங்கீரனார் 3. ‘பொய்யா நாவிற் கபிலன்’
(d) மாறோக்கத்து நப்பசலையார் 4. ‘நல்லிசைக்கபிலன்’
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 2 4 1 3
(C) 3 1 4 2
(D) 3 4 2 1
ANS: (B) 2 4 1 3
No comments:
Post a Comment