LATEST

Saturday, April 18, 2020

பொது தமிழ் வினா விடை 97

பொது தமிழ் வினா விடை 97

1. சித்தர் பாடலில் ‘கடம்’ என்பதன் பொருள் யாது?
(A) பாம்பு
(B) இறுமாப்பு
(C) உடம்பு
(D) வேம்பு
ANS: (C) உடம்பு
2. பொருட்பாலில் பகுக்கப் பெறாத இயல்
(A) பாயிரவியல்
(B) அரசியல்
(C) அங்கவியல்
(D) ஒழிபியல்
ANS: (A) பாயிரவியல்
3. கம்பராமாயணத்தில் அமைந்திராத காண்டம்
(A) அயோத்தியா காண்டம்
(B) மதுரைக் காண்டம்
(C) ஆரணிய காண்டம்
(D) யுத்த காண்டம்
ANS: (B) மதுரைக் காண்டம்
4. தமிழகத்தின் இருண்ட காலம் என அழைக்கப்படுவது
(A) நாயக்கர் காலம்
(B) களப்பிரர் காலம்
(C) கற்காலம்
(D) உலோகக் காலம்
ANS: (B) களப்பிரர் காலம் 
5. “பகல்வெல்லும் கூகையைக் காக்கை, இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”
- எனும் குறளில் ‘கூகை’ என்பதன் பொருள் யாது?
(A) ஆட்டுக்கடா
(B) கோட்டான்
(C) முதலை
(D) யானை
ANS: (B) கோட்டான்
6. “அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” – என்னும் பழமொழியில் ‘அஷ்டபிரபந்தம்’ என்பது எத்தனை நூல்களைக் குறிக்கிறது?
(A) பத்து நூல்கள்
(B) பதினெட்டு நூல்கள்
(C) எட்டு நூல்கள்
(D) நான்கு நூல்கள்
ANS: (C) எட்டு நூல்கள்
7. பொருத்துக :
(a) சிறுபஞ்ச மூலம் 1. கணி மேதாவியார்
(b) திருவிளையாடல் புராணம் 2. முன்னுரை அரையனார்
(c) பழமொழி நானூறு 3. பரஞ்சோதி முனிவர்
(d) ஏலாதி 4. காரியாசன்
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 1 3 2 4
(C) 4 2 3 1
(D) 4 3 2 1
ANS: (D) 4 3 2 1
8. பொருத்துக :
ஊர் சிறப்புப்பெயர்
(a) சிதம்பரம் 1. திருமறைக்காடு
(b) வேதாரணியம் 2. திருச்சிற்றம்பலம்
(c) விருத்தாசலம் 3. திருப்பாதிரிப்புலியூர்
(d) கடலூர் 4. திருமுது குன்றம்
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3 
(B) 3 1 2 4
(C) 2 3 1 4
(D) 2 1 4 3
ANS: (D) 2 1 4 3
9. தன் கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று பொறிக்க வேண்டுமென்று விரும்பியவர் யார்?
(A) கால்டுவெல்
(B) வீரமாமுனிவர்
(C) ஜி.யு.போப்
(D) சீகன் பால்கு
ANS: (C) ஜி.யு.போப்
10. ‘திருவேங்கடத்தந்தாதி’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) குமரகுருபரர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) கம்பர்
(D) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
ANS: (D) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

No comments:

Post a Comment