LATEST

Saturday, April 18, 2020

பொது தமிழ் வினா விடை 98

பொது தமிழ் வினா விடை 98

1. கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I. முத்துராமலிங்கர் விருப்பத்துக்கு இணங்க மருதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்தார்
II. நடுவண் அரசு முத்துராமலிங்கரது அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது.
III. ஆங்கில அரசு வட இந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் ‘தேசியம் காத்த செம்மல்’ எனும் விருதளித்தது.
IV. முத்துராமலிங்கர் தம் சொத்துகள் முழுவதையும் பதினேழு பாகங்களாகப் பிரித்து, திருக்கோவில்களுக்கு எழுதி வைத்தார்.
(A) I, III சரியானவை
(B) III, IV சரியானவை
(C) II, IV சரியானவை
(D) I, II சரியானவை
ANS: (D) I, II சரியானவை
2. ‘தமிழுக்குக் கதி’ என்று அழைக்கப்பட்ட இரண்டு நூல்கள்
(A) சங்க இலக்கியம், மகாபாரதம்
(B) சிலப்பதிகாரம், மணிமேகலை
(C) கம்பராமாயணம், திருக்குறள்
(D) தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம்
ANS: (C) கம்பராமாயணம், திருக்குறள்
3. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” கூறியவர் 
 (A) மகாகவி பாரதியார்
(B) பேரறிஞர் அண்ணாத்துரை
(C) தமிழ்த்தென்றல் திரு.வி.க
(D) செயங்கொண்டார்
ANS: (B) பேரறிஞர் அண்ணாத்துரை
4. பொருத்ததுக:
(a) மணிமேகலை 1. உமறுப்புலவர்
(b) தேவாரம் 2. கிருஷ்ணப்பிள்ளை
(c) சீறாப்புராணம் 3. சீத்தலைச்சாத்தனார்
(d) இரட்சணியயாத்திரிகம் 4. சுந்தரர்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 1 2 4 3
(C) 3 4 1 2
(D) 1 4 2 3
ANS: (C) 3 4 1 2
5. “திராவிட சாஸ்திரி” – என அழைக்கப்பட்டவர்
(A) பரிதிமாற் கலைஞர்
(B) மறைமலை அடிகள்
(C) சி.வை. தாமோதரனார்
(D) உ.வே. சாமிநாதர்
ANS: (A) பரிதிமாற் கலைஞர்
6. பட்டியல் I உடன் பட்டியல் II யை பொருத்துக :
பட்டியல் I பட்டியல் II
(a) சாதியும், நிறமும் அரசியலுக்கும் இல்லை, 1. கடுவெளிச்சித்தர்
ஆன்மீகத்துக்கும் இல்லை என்றவர்
(b) அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் 2. ஜவஹர்லால் நேரு
எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும் என்றவர்
c) பிறர் தாழும்படிக்கு நீ தாழ்வைப் பண்ணாதே 3. பசும்பொன் முத்துராமலிங்கர்
என்றவர்
(d) ஆயிரம் முகங்கள் கொண்ட வாழ்க்கையைப் 4. தந்தை பெரியார் புரிந்துகொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர்
(a) (b) (c) (d) 
 (A) 1 2 4 3
(B) 3 4 1 2
(C) 2 3 1 4
(D) 4 2 3 1
ANS: (B) 3 4 1 2
7. ‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்’ என்று பாடியவர் யார்?
(A) ஓளவையார்
(B) கம்பர்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
ANS: (B) கம்பர்
8. பொருத்துக :
(a) வினையே ஆடவர்க்குயிர் 1. தாராபாரதி
(b) உடம்பை வளர்த்தேன் ; உயிர் வளர்த்தேனே 2. தொல்காப்பியர்
(c) முந்தீர் வழக்கம் மகடூஉவோடில்லை 3. குறுந்தொகை
(d) விரல்கள் பத்தும் மூலதனம் 4. திருமூலர்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 1 2 3 4
(C) 3 4 2 1
(D) 4 3 2 1
ANS: (C) 3 4 2 1
9. பொருத்துக :
நூலாசிரியர் நூல்
(a) சி.சு.செல்லப்பா 1. ‘அப்பாவின் சிநேகர்’
(b) பி.எஸ்.இராமையா 2. ‘வலம்புரிச் சங்கு’
(c) அசோகமித்திரன் 3. ‘எழுத்து’
(d) நா.பார்த்தசாரதி 4. ‘நட்சத்திரக் குழந்தைகள்’
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 3 4 2 1
(C) 4 3 1 2 
 (D) 1 2 3 4
ANS: (A) 3 4 1 2
10. “அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த” - இவ்வடிகளுக்குச் சொந்தக்காரர் யார்?
(A) தாயுமானவர்
(B) இராமலிங்கர்
(C) திருமூலர்
(D) மறைமலையடிகள்
ANS: (B) இராமலிங்கர்

No comments:

Post a Comment