இந்திய வரலாறு வினா விடை பகுதி 1
1. கடந்த பனியுகம் இருந்த காலம்
(A) பிளையோசின் காலம்
(B) பிளைஸ்டோசின் காலம்
(C) மியோசின் காலம்
(D) ட்ரையாசிக் காலம்
2. கீழ்கண்ட சொற்றொடரை கருதுக:
I. பிளாசிப்போர் வங்காளத்தில் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டை தோற்றுவித்தது.
II. பக்சர் போர் இந்தியா முழுவதும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுமையை ஏற்படுத்தியது
(A) I மட்டும் சரியாகும்
(B) II மட்டும் சரியாகும்
(C) I மற்றும் II சரியாகும்
(D) I மற்றும் II தவறாகும்
3. இந்தியாவிற்கு விஜயம் செய்து பாமினி பேரரசை பற்றி குறிப்பிட்டுள்ள ரஷிய பயணி யார்?
(A) நிக்கலோ கோண்ட்
(B) ராபர்ட் நொபிலி
(C) டொமிங்கோ பேஸ்
(D) அல்தனேசியஸ் நிகிட்டின்
4. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி:
(a) வேதகால மக்களின் சமயத்திலிருந்து சிந்துவெளி மக்களின் சமயம் மாறுபட்டிருந்தது
(b) வேதகால மக்கள் இயற்கையாக தோற்றமளித்த பல கடவுள்களை வணங்கினர். எடுத்துக்காட்டாக, வருண பகவானாக பிரித்வி, இந்திரன் மற்றும் சூரியன்
இவற்றுள்:
(A) (a)சரி (b) தவறு
(B) (b) சரி (a) தவறு
(C) (a) மற்றும் (b) இரண்டும் சரி
(D) (a) மற்றும் (b)இரண்டும் தவறு
5. மலைவாழ் மக்களான ராமோசிக்கள் யாருடைய தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து கலகம் செய்தனர்?
(A) டாடு மியான்
(B) சித்தூர் சிங்
(C) கரம் ஷா
(D) ஹாஜி ஷாரியத்துல்லா
6. “1947 என்பது வெகு விரைவு அல்ல மாறாக இது மிகவும் தாமதம்” இதைக் கூறியவர் யார்?
(A) மௌண்ட்பேட்டன்
(B) வேவல்
(C) இஸ்மே
(D) அட்லி
7. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
(A) 1965
(B) 1959
(C) 1969
(D) 1960
8. கி.பி. 1526 ம் ஆண்டு இப்ராஹிம் லோடியின் மீது வெற்றி கொண்டதின் நினைவாக பானிப்பட்டில் பாபர் உருவாக்கிய தோட்டத்தின் பெயரை குறிப்பிடுக
(A) ஆக்ரா பாக்
(B) காபூல் பாக்
(C) ஆம்பர் பாக்
(D) ஜோத்பூர் பாக்
9. விஜயநகர மன்னன் நரசிம்மா ____________ வம்சத்தை சார்ந்தவர்
(A) சங்கமா
(B) சலுவா
(C) துலுவா
(D) ஆரவீடு
10. தேவிந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய அமைப்பின் பெயரை குறிப்பிடுக.
(A) சங்கத் சபா
(B) தத்துவபோதினி சபா
(C) இந்திய சீர்திருத்த சங்கம்
(D) பிரம்ம சமாஜம்
No comments:
Post a Comment