LATEST

Friday, December 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -07. ஈரோடு

Magme Guru

7. ஈரோடு வரலாறு

தலைநகரம் : ஈரோடு
பரப்பு : 5,760 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,251,744 (2011)
எழுத்தறிவு : 1,492,662 (72.58%)
ஆண்கள் : 1,129,868
பெண்கள் : 1,121,876
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 391

பெயர்க் காரணம்:
• பிச்சைக்காரன் ஓடை, பெருபள்ள ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர்.
• இங்குள்ள கடவுளுக்கும் 'ஈரோடையப்பர்' என்ற பெயரே காணப்படுகிறது.

எல்லைகள்:

• தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சேலம்-கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடகமும், மேற்கில் கோவை மாவட்டமும் ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாற்றுச் சிறப்பு:
• கோவை மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ந் தேதி, ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது.
• கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களையும், கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும், திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியிருப்பதே கொங்கு நாடு ஆகும்.
• இப்பகுதிகளை கொங்கர் என்னும் ஆயர்கள் ஆண்டு வந்தனர்.
• கொங்கரை வெற்றி கொண்டு சேர நாட்டுடன் பல்யானை செல்கெழு குட்டுவன் சேர்த்துக் கொண்டான் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.இங்குள்ள தாராபுரத்தில் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
• உரோம பேரரசுக்கும் இம்மாவட்ட வணிகர்களுக்கும் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது வரலாற்றறிஞர்களின் கணிப்பு.
• இதுபோலவே நொய்யல் ஆற்றின் கரையில் சென்னி மலைக்கு அருகே உள்ள 'கொடுமணல் நாகரிகம்' 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
• இங்கு பல வண்ண மணிகள், ஓடுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர்.
• அவர்களை சோழர்கள் 9ஆம் நூற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப் பட்டனர்.
• சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலத்தின் பெயர் 'அதிராசராச மண்டலம்' என்று அழைக்கப்பட்டது.
• இக்காலத்தில் கொங்குவேளிர் 'பெருங்கதை'யையும்; பவணந்தி 'நன்னுலையும்; அடியார்க்கு நல்லார் 'சிலப்பதிகாரத்திற்கு உரையையும் எழுதியுள்ளனர்.
• சோழர்களுக்கு பிறகு பாண்டியர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள், திப்புசுல்தான் முதலியோர் இப்பகுதியை ஆண்டிருக்கின்றனர். இக்காலங்களில் பட்டக்காரர் வசம் வரிவசூலிப்பு இருந்திருக்கிறது.

சட்டசபை தொகுதிகள்:11
வெள்ளக்கோவில், காங்கேயம், மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம், தாராபுரம்.

பாராளுமன்ற தொகுதி: - 1 கோபிசெட்டிப் பாளையம்

ஆறுகள்:
காவிரி, நொய்யல், பவானி, உப்பாறு.

அணைக்கட்டுகள்:
பவானி சாகர், வறட்டுப்பள்ளம், கொடிவேரி, ஒரத்துப்பள்ளம், உப்பாறு, காளிங்கரான் அணை.

கல்வி:
பள்ளிகள்:

தொடக்க நிலை-1,455; நடுநிலை-185; உயர்நிலை-77; மேநிலை-52; கல்லூரிகள் - 8; தொழிற்கல்வி நிறுவனங்கள்-9, தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-1.

இயற்கை வளங்கள்
மலைவளம்:
• ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைகள்: தாளவாடி மலை, திம்பமலை, தல்ல மலை, தவளகிரி மலை, பவள மலை, பன்னாரி மலை, பெருமாள் மலை, பருவாச்சி மலை, பூனாட்சி மலை, அந்தியூர் மலை,வட்டமலை, சென்னிமலை,மலைப்பாளையம்மன் மலை, எழுமாத்தூர் மலை, எட்டிமலை, அருள்மலை, சிவகிரி மலை, அறச்சலூர் மலை, அரசன்னா மலை, திண்டல் மலை, விசயகிரி மலை, ஊராட்சி கோட்டை மலை ஆகியவையாகும்.
• இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதி கர்நாடக பீடபூமியின் தொடர்ச்சியாயுள்ளது.
• இங்கு 900 மீ. முதல் 1700 மீ. உயரம் உள்ள மலைகள் காணப்படுகின்றன.
• இங்கு வரட்டுப்பள்ளம், வழுக்குப் பாறைப் பள்ளம், தென்வாரிப் பள்ளம், கோரைப் பள்ளம் போன்ற பல பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

காட்டுவளம்:
• இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. காட்டின் மொத்தப் பரப்பளவு 2,42,953.28 ஹெக்டேர்களாகும். தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் ஈரோடு மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியது. இவற்றை 4 ஆக பிரித்துள்ளனர்.
• அவை: சத்தியமங்கலம் சரகம், தல்ல மலை சரகம், பர்கூர் சரகம், அந்தியூர் சரகம் ஆகியவையாகும்.
• தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடுமாவட்டத்திலிருந்து கிடைக்கிறது.
• சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்று உள்ளது.
• மேட்டூர் சந்தன எண்ணெய்த் தொழிற்சாலைக்கு இங்கிருந்தே மரங்கள் செல்கின்றன.
• அந்தியூர், பர்கூர் மலைப் பகுதிகளில் தேக்கு மரங்களும், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர்ப் பகுதிகளில் மூங்கில் மரமும் அதிகமாக வளர்கின்றன.
• இவை காகிதத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
• இம்மாவட்டத்திலுள்ள காடுகளில் வேங்கை, கருங்காலி. ஈட்டி, மருது போன்ற பல்வேறு மரங்களும் காணப்படுகின்றன.

விலங்குகள்:
• பவானி சாகர், தெங்க மராடா, மோயாறு, பன்னாரி ஹாசனுர் காட்டுப் பகுதிகளில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன.
• இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கூறுகின்றனர். தல்லமலைப் பகுதிகளில் புலிகள் வசிக்கின்றன.
• இப்பகுதியில் காட்டு எருமை, முள்ளம் பன்றி, மான்கள் அதிகமாக உள்ளன.

கனிவளம்:
• இரும்பு - கீழ்பவானி அணை, தொப்பம்பாளையம், கரிகொட்டாம் பாளையம், பங்களாபுத்தூர் பகுதியின் வடக்கு மலைப்பகுதியில் கிடைக்கிறது.
• தங்கம் - கோபிச்செட்டிப்பாளையம், எக்காத்தூர், ஊதியூர், எழுமாத்தூர்.
• மைக்கா - வைரமங்கலம், குறிச்சி, புளியம்பட்டி, ஏரப்ப நாயக்கன் பாளையம்.
• கருங்கற்கள் - பவானி பாலமலைப் பகுதி. இவை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
• ஆஸ்பெஸ்டாஸ் - பெருந்துறை, பர்கூர்.
• ஜிப்சம் - தாராபுரம்.
• படியூரில் பெரில்ஸ் என்னும் கடல்நிற வைரக்கற்களும், சிவன்மலை, சலங்கிப் பாளையம், சின்ன தாராபுரம் பகுதியில் உயர்தரக் கற்கள் கிடைக்கின்றன. குவார்ட்ஸ் எனப்படும் வெள்ளைக் கல்லும்,பெல்ஸ்பர் என்ற சிவப்புக் கல்லும் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.

விவசாயம்:
• மொத்த விவசாய பரப்பு 9 இலட்சம் ஏக்கர்;
• முக்கிய விளை பொருட்கள்: நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள்.
• விவசாயத் தொழிலாளர்கள்: 10,78,256 பேர்கள். மஞ்சள் சந்தை தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் நடைபெறுகிறது.

                                                               வணிக வளர்ச்சி
தொழில்கள்:
பெருந்தொழில் நிறுவனங்கள் - 2; சிறு தொழிற்சாலைகள் 7,249. மற்றும் 1301 குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன.

கைத்தறி:
• நெசவுத் தொழில் பெருந்துறை, தாராபுரம், ஈரோடு, பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன.
• இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர்.
• இங்கு டையிங் பேக்டரிகள் அதிகமாக உள்ளன. சென்னிமலை, பவானி ஆகிய இடங்களில் ஜமுக்காளம், போர்வைகள், படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது.
• கோபிச்செட்டிப் பாளையம், தாளவாடி,சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஈரோடு:
• இங்கு வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது.
• இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது.
• இதன் அருகில் முட்டையை பெளடராக்கி பேக்கிங் செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
• பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது.
• ஈரோடு துணி மார்க்கெட்இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் குறைவு.
• சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

சர்க்கரை:
சத்திநகர், சித்தோடு, பெருந்துறை, கவுந்தபாடி முதலிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மரம் அறுப்பு:
சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையத்தில் மரம் அறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மீன்பிடிப்பு:
• ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பே நடந்து வருகிறது. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளில் அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
• தாலக்குளத்தில் மீன் குஞ்சுகள் விற்கப்படுகின்றன.
• பவானிசாகர் அணையிலும், உப்பாறு அணையிலும் மீன்பிடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது.
• இங்கு பிடிக்கப்படும் மீனுக்கு 'பவானிகெண்டை' என்றே பெயர் உள்ளது.
• ஏரி மீன்பிடிப்பில் ஓடத்துறை ஏரி, தலைக்குளம் ஏரியில் மீன்பிடிப்பு நடக்கிறது.
• இங்கு இறால் மீன் பக்குவப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. செம்படவ பாளையத்தில் கையினால் மீன்வலை பின்னும் நிலையம் ஒன்று உள்ளது.

எண்ணெய்:
எண்ணெய் சந்தையைப் பொறுத்த அளவில் கேரளாவில் உள்ள கொச்சிக்கு அடுத்த படியாக, இங்குள்ள காங்கேயம் தான் பெரிய சந்தையாக திகழ்கிறது.

சுற்றுலாத்தலங்கள்:
பவானி சாகர் அணைக்கட்டு, கூடுதுறை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை.

வரலாற்று சுற்றுலா தலங்கள்:
அரச்சலூர் - கல்வெட்டுகள்; பெருந்துறை- விஜயமங்கலம்; கொடுமணல்புதைபொருள் ஆய்வு இடம்.

இருப்புப் பாதை:
• முக்கிய புகைவண்டி நிலையங்கள்: ஈரோடு, ஊத்துக்குளி, பெருந்துறை, ஊஞ்சலூர், கொடுமுடி, பாசூர், ஈங்கூர்.
• இம்மாவட்டத்தில் உள்ள இரயில் பாதை அகன்ற இரயில் பாதையாகும்.
• ஈரோடு-கோவை இருப்புப்பாதை ஓர் இரட்டைப் பாதையாகும்.

நீர்வழி:
காவிரியாற்றின் போக்கை ஒட்டி படகுப் போக்குவரத்து இங்கு நடைபெறுகிறது.

தாளவாடி மலை:
• இது இம்மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமாகும்.
• இயற்கை எழில் போலவே வனவிலங்குகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.
• யானை, கரடி, செந்நாய், மான், கருங்குரங்கு, சிறுத்தை போன்றவை இங்குண்டு.

மாவட்ட பெரியோர்:
• தமிழக மக்களால் 'பெரியார்' என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி பெரியார் ஈரோட்டில் பிறந்து, வளர்ந்தவர்.
• நரேந்திர தேவர், காங்கிரஸ் தியாகி.
• கொடிகாத்த குமரன் பிறந்த இடம் சென்னி மலைதான்.


No comments:

Post a Comment