இந்திய விடுதலை இயக்கம்
முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919)
வினா விடை பகுதி 1
1. பிரிட்டிஷார் ஒன்றுபட்ட நாட்டை உருவாக்க வழிகோலியது --------------அ) ஏகாதிபத்தியம்
ஆ) அரசியல்
இ) படையெடுப்பு
ஈ) பேச்சுவார்த்தை
விடை: அ) ஏகாதிபத்தியம்
2. படித்த இந்தியர்களின் மொழியாக அமைந்தது --------------
அ) பிரெஞ்சு
ஆ) ஆங்கிலம்
இ) இந்தி
ஈ) வங்காளம்
விடை: ஆ) ஆங்கிலம்
3. சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது --------------
அ) தேசியம்
ஆ) புரட்சி
இ) கலகம்
ஈ) கிளர்ச்சி
விடை: அ) தேசியம்
4. மிதவாதிகளின் கோரிக்கைகளை தீவிரவாதிகள் வர்ணித்தது -------------------
அ) அரசியல் பிச்சை
ஆ) இரண்டாம் பட்சமானது
இ) கட்டளைகள்
ஈ) திறந்தவெளிக் கொள்கை
விடை: அ) அரசியல் பிச்சை
5. காங்கிரசில் பிளவை ஏற்படுத்திய மாநாடு -------------
அ) சூரத்
ஆ) லாகூர்
இ) திரிபுரா
ஈ) மதராஸ்
விடை: அ) சூரத்
6. மிண்டோ – மார்லி சீர்த்திருத்தச் சட்டம் தனித் தொகுதிகளை அறிமுகப்படுத்தியது ---------
(அ) இந்துக்கள்
ஆ) முஸ்லீம்கள்
இ) சீக்கியர்கள்
ஈ) கிறித்துவர்கள்
விடை: ஆ) முஸ்லீம்கள்
7. பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் -----------
அ) நேரு
ஆ) திருமதி.அன்னிபெசன்ட்
இ) திலகர்
ஈ) பாரதியார்
விடை: இ) திலகர்
8. இல்பர்ட் மசோதா இந்தியர்களுக்கு எந்த பலனும் அளிக்கவில்லை.
9. மிதவாதிகளின் கோரிக்கைகளை இளைய தலைமுறையினர் அரசியல் பிச்சை என்று வர்ணித்தனர்.
10. ஆங்கில அரசு இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தீவிரமாக எதிர்க்க கொண்டு வந்த சட்டம் ரௌலட் சட்டம்.
No comments:
Post a Comment