இந்திய விடுதலை இயக்கம்
முதல் நிலை – காந்திக்கு - முந்தைய சகாப்தம் (கி.பி.1885-கி.பி. 1919) ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 3
1. தீவிரவாதிகள்அ) சில தீவிரவாத தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை: பால கங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால், அரவிந்த கோஷ்
ஆ) திலகரின் அறிவிப்பு என்ன?
விடை: சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்
இ) திலகர் புதுப்பித்த பண்டிகைகளை குறிப்பிடுக
விடை: கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள்
ஈ) தீவிரவாத தேசியவாதிகளின் விருப்பம் யாது?
விடை: தீவிரவாத தேசியவாதிகள், காங்கிரசின் மிதவாத அணுகுமுறையை மாற்றி, அவற்றினை அடையும் முறைகளையும் மாற்ற விரும்பினர்
2. ஜாலியன்வாலாபாக் படுகொலை
அ) கைது செய்யப்பட்ட முக்கியமான தலைவர்கள் யார்?
விடை: டாக்டர் சத்தியபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு.
ஆ) மக்கள் எங்கு கூடினர்?
விடை: அமிர்தரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் பூங்காவில்
இ) அமிர்தசரஸின் ஆங்கில இராணுவ தளபதி யார்?
விடை: ஜெனரல் டயர்
ஈ) இரவீந்திரநாத் தாகூர் செய்தது என்ன?
விடை: படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாகூர் தனது “நைட்வுட்” பட்டத்தை துறந்தார்
No comments:
Post a Comment