LATEST

Thursday, January 30, 2020

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக  பகுதி  7

1. இராஜாராம் மோகன்ராய் நவீன இந்தியாவின் ‘விடிவெள்ளி’ என அழைக்கப்பட்டார்.

2. 1815ஆம் ஆண்ட ஆத்மீய சபாவை இராஜராம் மோகன்ராய் தோற்றுவித்தார்

3. ஆத்மீய சபாவே, பின்னர் 1828ஆம் ஆண்டு முதல் பிரம்ம சமாஜமாக வளர்ந்தது.

4. ‘ஒரே கடவுள்’ என்பது பிரம்ம சமாஜத்தின் அடிப்படை கொள்கையானது.

5. பொது சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் சபை பிரம்ம சமாஜம்

6. 1829ஆம் ஆண்டு ‘சதி தடைச்சட்டம்’ கொண்டு வரப்பட்டது.

7. சதி தடை சட்டத்தை கொண்டு வந்த ஆங்கிலத் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு.

8. 1872ஆம் ஆண்டு பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

9. பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடை செய்யும் சட்டம் கேசவ் சந்திரசென் என்பவரின் முயற்சியால் இயற்றப்பட்டது.

10. 1867ஆம் ஆண்டு பிராத்தனா சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment