LATEST

Wednesday, January 29, 2020

கிராம நிர்வாக அலுவலர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பகுதி 2

கிராம நிர்வாக அலுவலர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பகுதி 2

ஆழிப்பேரலை(சுனாமி) :
•    கடற்கரையோரம் உள்ள மக்களை அங்கிருந்து அவர்களுடைய உடைமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்து உணவு, தங்கும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
•    எந்தப் பகுதியில் ஏற்கனவே தாக்குதல் நடைபெற்றது, மீண்டும் எந்தப் பகுதியில் தாக்குதல் நடைபெறலாம் என்ற விவரங்களை உள்ளடக்கிய ஒரு வரைபடமும் தயாரிக்க வேண்டும்.

நில நடுக்கம்
•    நிலநடுக்கங்கள் நேரிடையாக மனிதனைக் கொல்வதில்லை. ஆனால் பாதுகாப்பற்ற கட்டடங்கள் மனிதனைக் கொல்கிறது என்பதே நம் அனுபவத்தில் கண்ட உண்மை. நிலநடுக்கம் எவ்வித முன்னெச்சரிக்கையையும் தருவதில்லை.
 
தடுப்பு நடவடிக்கைகள்
•    நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளை ஏற்கனவே அரசு கண்டறிந்துள்ளது.
•    அப்பகுதி மக்களுக்கு நிலநடுக்கத்திற்கு முன்பு செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதன் பின் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் எடுத்துக் கூற வேண்டும்.
•    நிலநடுக்கத்தில் காரணமாக சேதமடைந்த கட்டடங்கள், மின் அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்றுவதற்கு மற்ற துறை அலுவலர்களுடன் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பணிபுரிய வேண்டும்.
•    நிலநடுக்கத்தால் அதிகமாக காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
 
நிவாரணப் பணிகள்
•    வெள்ளம், புயல், தீ விபத்து போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருவூல விதி 27-இன் கீழ் உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
•    உயிரிழந்த நபர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு - ரூ.1200
•    முழுமையாகப் பாதிக்கப்பட்ட குடிசை ஒன்றுக்கு – ரூ. 2000
•    பகுதியாகப் பாதிக்கப்பட்ட குடிசை ஓன்றுக்கு – ரூ. 1000
•    பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பம் ஒன்றுக்கு – ஒரு வேட்டி, ஒரு சேலை,5 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய்
•    இறந்த கால்நடைகள் ஒன்றூக்கு - ரூ. 5000
•    இறந்த கன்று ஒன்று - ரூ. 3000
•    செம்மறியாடு / வெள்ளாடு – ரூ. 1000

No comments:

Post a Comment