சங்க கால மன்னர்கள் - உதியன் சேரலாதன்
• சங்க காலச் சேர மன்னர்களுள், வரலாறு விளங்க வாழ்ந்த முதல் சேர மன்னன், உதியன் சேரலாதன்.
• இவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன், உதியஞ்சேரல் என்றெல்லாம் அழைக்கப் பெறுகிறான்.
• வெளியன் வேண்மான் என்னும் வேளிர் குலத் தலைவன் மகள் நல்லினி இவனுடைய மனைவி ஆவாள்.
• இவன் மைந்தர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் இருவரும் ஆவர்.
• உதியன் சேரலாதன் ஆற்றிய அரிய செயல்கள் இரண்டு ஆகும்.
• ஒன்று தன் நாட்டு எல்லையை விரிவாக்கியது.
• மற்றொன்று பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்தது ஆகும்.
• உதியன் சேரலாதன், தமிழகம் முழுமையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து உலகாண்ட பேரரசன், இவன் கிழக்கு மேற்கு ஆகிய பெருங்கடல்களை எல்லையாகக் கொண்ட நாட்டை ஆண்டு வந்தான்.
• இம்மன்னனைப் போற்ற வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், “அரசே! கீழ்க்கடலும் நினதே, மேலைக்கடலும் நினதே, ஆதலின் ஞாயிறு தோன்றுவதும் உன் கடலிலேயே, மறைவதும் உன் கடலிலேயே” என்று கூறுகிறார்
• உதியன் சேரலாதன் தன் எல்லையை விரிவுபடுத்த வேண்டிக் கரிகால் சோழனோடு போரிட்டுத் தோல்வியுற்றான் என்றும், அப்போரில் முதுகில் ஏற்பட்ட புண்ணிற்கு நாணி வடக்குத்திசை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டான் என்றும் மாமூலனார் அகநானூற்றில் குறிப்பிடுகிறார்.
• இவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன், உதியஞ்சேரல் என்றெல்லாம் அழைக்கப் பெறுகிறான்.
• வெளியன் வேண்மான் என்னும் வேளிர் குலத் தலைவன் மகள் நல்லினி இவனுடைய மனைவி ஆவாள்.
• இவன் மைந்தர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் இருவரும் ஆவர்.
• உதியன் சேரலாதன் ஆற்றிய அரிய செயல்கள் இரண்டு ஆகும்.
• ஒன்று தன் நாட்டு எல்லையை விரிவாக்கியது.
• மற்றொன்று பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்தது ஆகும்.
• உதியன் சேரலாதன், தமிழகம் முழுமையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து உலகாண்ட பேரரசன், இவன் கிழக்கு மேற்கு ஆகிய பெருங்கடல்களை எல்லையாகக் கொண்ட நாட்டை ஆண்டு வந்தான்.
• இம்மன்னனைப் போற்ற வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், “அரசே! கீழ்க்கடலும் நினதே, மேலைக்கடலும் நினதே, ஆதலின் ஞாயிறு தோன்றுவதும் உன் கடலிலேயே, மறைவதும் உன் கடலிலேயே” என்று கூறுகிறார்
• உதியன் சேரலாதன் தன் எல்லையை விரிவுபடுத்த வேண்டிக் கரிகால் சோழனோடு போரிட்டுத் தோல்வியுற்றான் என்றும், அப்போரில் முதுகில் ஏற்பட்ட புண்ணிற்கு நாணி வடக்குத்திசை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டான் என்றும் மாமூலனார் அகநானூற்றில் குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment