சமூக அறிவியல்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்- பகுதி 1
1. வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது.
அ) எழுத்து ஆதாரங்கள் கிடைத்துள்ள காலம்
ஆ) எழுத்து ஆதாரங்கள் கிடைக்காத காலம்
இ) காலம், இடம், நிகழ்ச்சி ஆகிய மூன்று ஆதாரங்களும் கிடைத்துள்ள காலம்
விடை: ஆ) எழுத்து ஆதாரங்கள் கிடைக்காத காலம்
2. பழைய கற்கால மக்கள்
அ) பருத்தி ஆடை அணித்தனர்
ஆ) இலை, மரப்பட்டை, விலங்குகளின் தோலை ஆடையாக அணிந்தனர்
இ) கம்பளி ஆடை அணிந்தனர்
விடை: ஆ) இலை, மரப்பட்டை, விலங்குகளின் தோலை ஆடையாக அணிந்தனர்
3. ஆதிமனிதன் முதலில் பழக்கிய விலங்கு
அ) மாடு ஆ) குதிரை இ) நாய்
விடை: இ) நாய்
4. ஆதிமனிதன் இயற்கையை அண்டி வாழ்ந்தான்.
5. கடந்தகால உண்மையை அறிய வரலாற்றைப் படிக்க வேண்டும்.
6. பழைய கற்கால மனிதன் கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தினான்.
7. தொல்பழங்காலம் என்பது பழங்காலத்திற்கும் முற்பட்ட காலம்.
8. மிகத் தொன்மைக்காலத்தை ஆய்ந்தறிய அகழ்வாராய்ச்சிக் குறிப்புகளை படிக்க வேண்டும்.
9. இரும்பினால் கருவிகள் செய்த காலம் இரும்புக் காலம்.
10. புதிய கற்கால மனிதன் சக்கரத்தைப் பயன்படுத்தி மட்பாண்டங்களைச் செய்தான்.
No comments:
Post a Comment