LATEST

Friday, February 21, 2020

குடியரசுத் தலைவரின் அதிகாரம் மற்றும் பணிகள் பகுதி 1

குடியரசுத் தலைவரின் அதிகாரம் மற்றும் பணிகள்

•    நிர்வாக அதிகாரங்கள்
•    சட்டமன்ற அதிகாரங்கள்
•    நிதி அதிகாரங்கள்
•    நீதி அதிகாரங்கள்
•    தூது அதிகாரங்கள்
•    இராணுவ அதிகாரங்கள்
•    நெருக்கடி நிலை அதிகாரங்கள்
 

நிர்வாக அதிகாரம்

•    இந்திய யூனியனின் நிர்வாக அதிகாரத்தின் தலைவராக இந்திய குடியரசுத் தலைவர் திகழ்கிறார்.
•    இந்திய அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்படுகிறது.
•    பிரதம அமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களையும் நியமிக்கிறார்.
•    இந்திய தலைமை வழக்கறிஞரையும் இவரே நியமிக்கிறார்.
மேலும் ஒரு சில உயர்மட்ட அலுவலர்களை நியமிக்கிறார் அவர்கள்:
•    தலைமை கணக்குத் தணிக்கையாளர்
•    தலைமைத் தேர்தல் அதிகாரி
•    மத்திய பணியாளர் தேர்வாணையத் தலைவர் (ருPளுஊ)
•    மாநில ஆளுநர்கள்
•    நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
 

சட்டமன்ற அதிகாரங்கள்

•    குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆவார்.
•    பாராளுமன்றத்தின் கூட்டத்தை கூட்டவோ அல்லது ஒத்தி வைக்கவோ முடியும் மற்றும் மக்களவையைக் கலைக்கும் அதிகாரமும் பெற்றுள்ளார்.
•    பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை கூட்ட அதிகாரம் பெற்றுள்ளார்.
•    பொதுத்தேர்தல் நடந்து அமையும் புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் மற்றும் ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றுவார்.
•    மாநிலங்களவையில் இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக பணிகளில் நடைமுறை அனுபவம் பெற்ற 12 நபர்களை சரத்து 80 (3) ன் படியும் மக்களவையில் 2- ஆங்கில – இந்திய பிரதிநிதிகளை சரத்து 331-ன் படியும் நியமனம் செய்வார்.
•    குடியரசுத்தலைவரின் முன் பரிந்துரை அல்லது அனுமதியுடன் சில வகை மசோதாக்களை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும். உதாரணமாக ஒருங்கிணைப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்கள் தொடர்பான மசோதாக்கள்.
•    பாராளுமன்றம் கூடாத போது நாட்டிற்கு தேவையான அவசர சட்டங்களை ஷரத்து 123-ன் படி குடியரசுத்தலைவர் இயற்றலாம்.
•    நிதி அதிகாரம்
•    பணமசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் முன்பாக குடியரசுத் தலைவரின் முன் அனுமதியை பெறவேண்டும். (ஷரத்து 110)
•    ஆண்டு நிதிநிலை அறிக்கையை (மத்திய பட்ஜெட்) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு காரணமாக இருக்கிறார். (ஷரத்து 112)
•    குடியரசுத்தலைவரின் பரிந்துரை பெறாமல் மானியக் கோரிக்கையை நிறை வேற்ற முடியாது.
•    நாட்டில் ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தேவைப்படும் நிதியை குடியரசுத்தலைவர் முன்பணமாக பெறலாம்.
•    ஒவ்வொரு 5-ஆண்டுக்கும் ஒரு முறை நிதி ஆணையத்தை நிறுவி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி பகிர்வை அளிப்பார்.
•    நீதி அதிகாரம்
•    உச்ச மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிப்பார்.
•    சட்டம் அல்லது உண்மை விதி தொடர்பாக எழும் விளக்கங்களுக்கும் உச்சநீதி மன்றம் சரத்து 143-படி தகுந்த விளக்கத்தை வழங்கவேண்டும். அவ்வாறு உச்ச நீதிமன்றம் தரும் விளக்கத்தை கட்டாயம் குடியரசுத்தலைவர் ஏற்கவேண்டிய அவசியமில்லை.
•    நீதி மன்றத் தீர்வு வாயிலாக குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குதல் மற்றும் அவர்களின் தண்டனையை குறைத்தல் போன்றவற்றை செய்ய இயலும்.

No comments:

Post a Comment