LATEST

Monday, March 16, 2020

இந்திய பாராளுமன்றம் - உறுப்பினர்கள் இடம் காலியாதல்

இந்திய பாராளுமன்றம்

உறுப்பினர்கள் இடம் காலியாதல்

1. ஷரத்து 101-ன்படி உறுப்பினர் இடம் காலியாதல்களாவன.

2. இரண்டு இடங்களில் உறுப்பினராதல்: 
•    ஒருவர் பாராளுமன்றத்தில் இரு சபைகளிலும் அல்லது பாராளுமன்றத்திலும், மாநிலச் சட்டமன்றத்திலும் ஒரே நேரத்தில் உறுப்பினராக இருக்க முடியாது. 
•    அவ்வாறு இருந்தால் அவர் ஏதேனும் ஓர் இடத்தை விட்டுவிட வேண்டும்.

3.    தகுதியிழத்தல்: 
•    ஷரத்து 102-ன் படி சில காரணங்களுக்காக தகுதி இழப்பு செய்யப்படும். 
•    எ.கா. உறுப்பினர் ஆன பின்பு மனநிலை பாதிப்பட்டால் தகுதி இழப்பு செய்யப்படும்.

4.    பதவியிழத்தல்: 
•    பாராளுமன்ற உறுப்பினர் தாமே முன்வந்து, தாம் சார்ந்திருக்கும் சபையின் தலைவருக்கு பதவியை விட்டு விலக விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதினாலும் அவரது பதவி காலியாகி விடும்.

5.    அனுமதியின்றி விடுப்பெடுத்தல்: 
•    உறுப்பினர் எவரேனும் தாம் சார்ந்துள்ள சபையின் முன் அனுமதியின்றி அறுபது நாட்களுக்கு மேல் அவை நடவடிக்கைகளில் பங்கு பெறாமல் இருந்தாலும் அவருடைய இடம் காலியானதாக அறிவிக்கப்படும்.

6.     இதர இனங்கள் :
•    உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால்,

•    அவையினரால் வெளியேற்றப்பட்டால்,

•    குடியரசுத்தலைவர், குடியரசுத்துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டால்,

•    மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டால் உறுப்பினர் பதவி இழக்க நேரிடும்.

No comments:

Post a Comment