LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 40

பொது தமிழ் வினா விடை 40

1. பொருந்தாததை கண்டறிந்து எழுதுக.
(A) ஐந்து கிலோ – எடுத்தல் அளவை ஆகுபெயர்
(B) நாலு லிட்டர் - முகத்தல் அளவை ஆகுபெயர்
(C) மூன்று மீட்டர் - நீட்டல் அளவை ஆகுபெயர்
(D) இந்தியா வென்றது – உவமையாகுபெயர்
ANS - (D) இந்தியா வென்றது – உவமையாகுபெயர்

2. தொழிற் பெயரைக் கண்டறிக.
‘வா’ –
A) வருதல்
(B) வந்து
(C) வந்தான்
(D) வந்த
ANS – (A) வருதல்

3. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக. 
யுA காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி
(B) காசு, கிளி. கூறை, கேணி, கைப்பிடி
(C) கிளி, கைப்பிடி, காசு. கூறை, கேணி
(D) கேணி, காசு, கிளி, கூறை, கைப்பிடி
ANS – (B) காசு, கிளி. கூறை, கேணி, கைப்பிடி

4. ‘இனிய நண்ப’ - இலக்கணக் குறிப்பு தருக.
A) குறிப்புப் பெயரெச்சம்
(B) தெரிநிலை பெயரெச்சம்
(C) எதிர்மறைப் பெயரெச்சம்
(D) குறிப்பு வினையெச்சம்
ANS – (A) குறிப்புப் பெயரெச்சம்

5. “எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி” - இதில் நொச்சி என்பது
A) மதில் காத்தல்
(B) மதில் வளைத்தல்
(C) மதில் பூச்சூடல்
(D) மதில்வாகை சூடல்
ANS – (A) மதில் காத்தல்

6. சொல்லை பொருளோடு பொருத்துக :
(a) வனப்பு 1.வலிமை
(b) அடவி 2. அழகு
(c) வீறு 3. இனிமை
(d) மதுரம் 4. காடு
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 2 3 1 4
(C) 3 2 4 1
(D) 1 3 2 4
ANS - (A) 2 4 1 3

7. பொருத்துக :
(a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு 3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம் 4. முன்றுறை அரையனார்
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 2 3 4 1 
(C) 3 2 1 4
(D) 3 1 4 2
ANS - (A) 2 1 4 3

8. தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?
(A) கபிலர்
(B) நரிவெரூஉத் தலையார்
(C) அறியப்படவில்லை
(D) ஓதலாந்தையார்
ANS - (C) அறியப்படவில்லை

9. ஐஞ்சிறு காப்பியங்கள் - என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?
(A)நாக குமார காவியம்
(B) நீலகேசி
(C) குண்டலகேசி
(D) சூளாமணி
ANS - (C) குண்டலகேசி

10. ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ – எனப் பாடியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) திருவள்ளுவர்
ANS - (B) பாரதிதாசன்

No comments:

Post a Comment