பொது தமிழ் வினா விடை 56
1. ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சிசுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்
(A) சேக்கிழார்
(B) கம்பர்
(C) மாணிக்கவாசகர்
(D) எவருமில்லை
ANS - (A) சேக்கிழார்
2. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?
(A) அப்பர்
(B) திருமூலர்
(C) சம்பந்தர்
(D) சுந்தரர்
ANS - (B) திருமூலர்
3. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” –
யார் கூற்று?
(A) திரு.வி.க
(B) ரா.பி.சேதுப்பிள்ளை
(C) பேரறிஞர் அண்ணா
(D) ஜி.யு.போப்
ANS - (C) பேரறிஞர் அண்ணா
4. திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச்
சான்றோர் யார்?
(A) இளம்பூரணர்
(B) நச்சர்
(C) பரிமேலழகர்
(D) ந.மு.வேங்கடசாமி
ANS - (C) பரிமேலழகர்
5. ஏலாதி – நூல்களுள் ஒன்று
(A) பதினெண் மேற்கணக்கு
(B) பதினெண் கீழ்க்கணக்கு
(C) காப்பியம்
(D) பாயிரம்
ANS - (B) பதினெண் கீழ்க்கணக்கு
6. ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர்
(A) இளங்கோவடிகள்
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) கவிமணி
ANS - (C) பாரதியார்
7. சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப்
பணியாற்றியவர் யார்?
(A) திருநாவுக்கரசர்
(B) திருஞானசம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
ANS - (D) மாணிக்கவாசகர்
8. மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்
(A) திரிகடுகம், ஏலாதி
(B) இன்னாநாற்பது, இனியவை நாற்பது
(C) திருக்குறள், நன்னூல்
(D) நற்றிணை, அகநானூறு
ANS - (A) திரிகடுகம், ஏலாதி
9. சரியானவற்றை பொருத்துக :
(a) கான் 1. கரடி
(b) உழுவை 2. சிங்கம்
(c) மடங்கல் 3. புலி
(d) எண்கு 4. காடு
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 4 3 1 2
(C) 3 4 1 2
(D) 3 4 2 1
ANS - (A) 4 3 2 1
10. பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல்
(A) பகவத்கீதை
(B) நன்னூல்
(C)பைபிள்
(D) சீறாப்புராணம்
ANS - (C) பைபிள்
No comments:
Post a Comment