LATEST

Sunday, February 18, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 2 Test - 6th std Tamil Unit 4, 5, 6

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 2 Test

 கேள்விகள் : 100                                                  கால நேரம்: 90 நிமிடங்கள்
___________________________________________________________________

6ஆம் வகுப்பு  தமிழ் இயல் 4, 5, 6


1. நல்வழி என்ற நூலின் ஆசிரியர்?
A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்            B. ஔவையார்    
C. முடியரசன்                          D. சத்திமுத்தப் புலவர்

2. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?
A. பாரதிதாசன்                B. துரைராசு    
C. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்        D. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

3. காமராசரைக் "கல்விக்கண் திறந்தவர்" என மனதாரப் பாராட்டியவர்?
A. ஜவஹர்லால் நேரு    B. அண்ணா        C. பெரியார்        D. காரல் மார்க்ஸ்

4. ஆசாரக் கோவை என்ற நூலின் ஆசிரியர்?
A. இளங்கோவடிகள்    B. ஔவையார்    C. பெருவாயின் முள்ளியார்    D. முடியரசன்

5. தால் என்பதன் பொருள்?
A. வாய்        B. மூக்கு        C. நாக்கு        D. கழுத்து

6. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
A. காட்டாறு        B. காடாறு        C. காட்டு ஆறு        D. காடு ஆறு

7. பொருந்தாததைத் தேர்ந்தெடு
A. மாடு பிடித்தல்        B. மஞ்சுவிரட்டு        C. மற்போரிடல்        D. ஏறு தழுவுதல்

8. பழையன கழிதலும் ______ புகுதலும்?
A. புதியன    B. புதுமை    C. புதிய        D. புதுமையான

9. தமிழகத்தின் மிகப்பெரிய சிற்ப கலைக்கூடம்?
A. மாமல்லபுரம்        B. மகாபலிபுரம்    C. தஞ்சாவூர்        D. A மற்றும் B இரண்டும் சரி

10. திராவிட நாட்டின் வானம்பாடி?
A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்        B. முடியரசன்
C. பெருவாயின் முள்ளியார்            D. சு.சக்திவேல்

11. பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் - என்றவர்?
A. முடியரசன்                    B. ஔவையார்    
C. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்            D. பெருவாயின் முள்ளியார்

12. நெய்தல் திணையின் தொழில்?
A. மீன் பிடித்தல்        B. வழிப்பறி செய்தல்        C. உப்பு விளைவித்தல்        D. A மற்றும் C சரி

13. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் என்னும் திருக்குறள் வணிகரின்_______ பற்றிக் கூறுகிறது?
A. வணிகரின் திறமை        B. வணிகரின் தொலைநோக்குப் பார்வை
C. வணிகரின் நேர்மை        D. ஏதுமில்லை

14. சுட்டு எழுத்துக்கள் எத்தனை? A. எட்டு    B. இரண்டு        C. நான்கு        D. மூன்று

15. நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதைத் தேர்ந்தெடு?
A. அறிஞர் அண்ணா        B. காரல் மார்க்ஸ்    C. பெரியார்        D. ஜவஹர்லால் நேரு

16. காமராசருக்கு நடுவண் அரசு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது?
A. 1980        B. 1985        C. 1987        D. 1976

17. மாமல்லன் என அழைக்கப்படுபவர்?
A. மகேந்திரவர்மன்        B. நரசிம்மவர்மன்        C. திருமலை நாயக்கர்    D. ராமராயர்

18. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல் எது?
A. மஞ்சள்        B. வந்தான்        C. கண்ணில்        D. தம்பி

19. ஆசாரக்கோவை ______ வெண்பாக்களைக் கொண்டது?
A. 31    B. 55    C. 100        D. 40

20. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை ______- கொண்டாடப்பட்டது?
A. இந்திர விழா        B. நாவாய் விழா    C. நெய்தல் விழா    D. வேலன் வெறியாட்டு விழா

21. தந்தத்திலே தொட்டில் கட்டித் தங்கத்திலே பூ இழைத்துச் செல்லமாய் வந்து உதித்த _______ நாட்டு முத்தேனோ?
A. சேர நாடு        B. சோழ நாடு        C. பாண்டிய நாடு        D. பல்லவ நாடு

22. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை தமிழில் உள்ளன?
A. மூன்று        B. ஐந்து        C. எட்டு        D. பத்து

23. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
A. நம் முகம் மாறினால்            B. நம் வீடு மாறினால்    
C. நாம் நன்கு வரவேற்றால்            D. நம் முகவரி மாறினால்

24. சிற்பக்கலை மொத்தம் எத்தனை வகைப்படும்?
A. இரண்டு        B.மூன்று        C. நான்கு        D. ஐந்து

25. காமராசர் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு?
A. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது
B. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது
C. சென்னையில் உள்ள வெளிநாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
D. ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது
26. இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை தேர்ந்தெடு
A. கங்கை        B. பட்டணம்        C. கண்ணில்        D. பக்கம்

27. நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் எட்டு என குறிப்பிடும் நூல் எது?
A. மூதுரை    B. நானிலம் படைத்தவன்        C. ஆசாரக்கோவை    D. துன்பம் வெல்லும் கல்வி
28. தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்திற்கு மட்டும் இன எழுத்து இல்லை?
A. மெய்யெழுத்து        B. குறில்        C. நெடில்        D. ஆய்தம்

29. வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் என்று கூறியவர்?
A. இளங்கோவடிகள்        B. பாரதியார்        C. பாரதிதாசன்        D. நெல்லை சு.முத்து

30. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
A. நா + னிலம்        B. நான்கு + நிலம்        C. நா + நிலம்        D. நான் + நிலம்

31. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்?
A. மகிழ்ச்சி        B. துன்பம்        C. வீரம்        D. அழுகை

32. தாழம்பூ' - எந்நிலத்திற்குரிய பூ? A. குறிஞ்சி        B. முல்லை    C. மருதம்    D. நெய்தல்

33. சீனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை?
A. கண்ணாடி        B. கற்பூரம்        C. பட்டு        D. அனைத்தும்

34. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A. நற்றிணை        B. குறுந்தொகை        C. அகநானூறு        D. பட்டினப்பாலை

35. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட _______ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
A. அ        B. இ        C. உ        D. ஏ

36. நானிலம் படைத்தவன் என்னும் கவிதையை எழுதியவர்?
A. ஔவையார்                B. முடியரசன்        
C. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்        D. பெருவாயின் முள்ளியார்

37. குதிரைகள் எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டன?
A. சீனா        B. ஆஸ்திரேலியா        C. அரேபியா    D. ஆப்பிரிக்கா

38. சங்ககாலத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதைப் பெற்றுச் சென்றனர்?
A. தேன்        B. உப்பு        C. ஏலக்காய்        D. கரும்பு

39. பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. ண --- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியை தொடுவதால் ணகரம் பிறக்கிறது
B. ன --- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் கீழ்ப்பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது
C. ந --- நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது
D. ழ --- நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம்‌ தோன்றும்

40. "பாலொடு வந்து கூழொடு பெயரும்‌" என்று கூறும் நூல்?
A. நற்றிணை        B. பட்டினப்பாலை        C. குறுந்தொகை        D. அகநானூறு

41. மூதுரை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?
A. 100        B. 50        C. 31        D. 13

42. ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள்?
A. உயிர் எழுத்துக்கள்            B. மெய்யெழுத்துக்கள்    
C. இன எழுத்துக்கள்            D. சுட்டு எழுத்துக்கள்

43. "பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்" என்று அறிவுரை கூறியவர்?
A. கபிலர்        B. திருவள்ளுவர்        C. ஔவையார்        D. பாரதியார்

44. பொருத்துக:
1. கடற்பயணம் - Voyage
2. பயணப்படகுகள் - Ferries
3. கலப்படம் - Adulteration
4. தொழில் முனைவோர் - Entrepreneur
5. சிற்பங்கள் - Sculptures
A. 1 2 3 4 5        B. 5 4 3 2 1        C. 4 2 3 5 1        D. 3 1 5 4 2

45. பொருத்துக:
1. விலை --- விரும்பு
2. விளை --- உண்டாக்குதல்
3. விழை --- பொருளின் மதிப்பு
A. 1 2 3        B. 2 3 1        C. 3 2 1        D. 2 1 3

46. பொருத்துக:
1. இலை --- நூல் இழை
2. இளை --- செடியின் இலை
3. இழை --- மெலிந்து போதல்
A. 3 2 1        B. 1 2 3            C. 2 3 1        D. 3 1 2

47. பொருத்துக:
1. ஒரு மைல் தூரம் ---நடுநிலைப்பள்ளி
2. மூன்று மைல் தூரம் --- உயர்நிலைப் பள்ளி
3. ஐந்து மைல் தூரம் --- ஆரம்பப்பள்ளி
A. 3 2 1            B. 1 2 3        C. 3 1 2        D. 2 3 1

48. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க?
கூற்று : மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்
காரணம் : சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை என பெயர் பெற்றது
A. கூற்று சரி, காரணம் சரி                B. கூற்று சரி, காரணம் தவறு
C. கூற்று தவறு, காரணம் சரி                D. கூற்று தவறு, காரணம் தவறு

49. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?
கூற்று 1: தை முதல் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது
கூற்று 2: தை இரண்டாம் நாளில் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது
A. கூற்று 1 , 2 சரி                B. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு    
C. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி          D. கூற்று 1, 2 தவறு

50. பொருத்துக :
1. தரைத்தளம் --- பிரெய்லி நூல்கள்
2. முதல் தளம் --- குழந்தைகள் பிரிவு
3. ஏழாம் தளம் --- கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
4. எட்டாம் தளம் --- கல்வித் தொலைக்காட்சி
5. மூன்றாம் தளம் --- கணினி அறிவியல்
A. 5 4 3 2 1        B. 4 3 5 1 2            C. 3 2 1 5 4        D. 1 2 3 4 5

51. "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்று ______ பாராட்டுகிறது?
A. குறுந்தொகை        B. நற்றினை        C. பட்டினப்பாலை        D. அகநானூறு

52. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை _________ என்பர்?
A. குழு வணிகம்        B. சிறு வணிகம்        C. வணிகச் சாத்து    D. தரைவழி வணிகம்

53. பெருமை + வானம் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
A. பெருமைவனம்        B. பெருவானம்        C. பெருமானம்        D. பேர்வானம்

54. முடியரசனின் இயற்பெயர்?    
A. சுப்ரமணியம்    B. மாணிக்கம்    C. துரைராசு        D. சுப்புரத்தினம்

55. வீரகாவியம் என்ற நூலை எழுதியவர்?
A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்        B. பெருவாயின் முள்ளியார்
C. முடியரசன்                D. பாரதியார்

56. "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே" என்று பாடியவர் யார்?
A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்            B. பெருவாயின் முள்ளியார்
C. துரைராசு                    D. திருவள்ளுவர்

57. நூலக விதிகளை உருவாக்கியவர்?
A. காரல் மார்க்ஸ்        B. அறிஞர் அண்ணா        C. பெரியார்        D.இரா. அரங்கநாதன்

58. மாமல்லபுரம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. தஞ்சாவூர்        B. தென்காசி        C. மகாபலிபுரம்        D. கன்னியாகுமரி

59. கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்?
A. அறிஞர் அண்ணா        B. பெரியார்        C. காமராசர்        D. அம்பேத்கர்

60. உச்சரிப்பில் சிறிதளவு வேறுபாடு உள்ள ஒலிகள்?
A. சார்பெழுத்துகள்        B. இன எழுத்துக்கள்    C. வினா எழுத்துக்கள்    D. மயங்கொலிகள்

61. வீரகாவியம் என்ற நூலை எழுதியவர்?
A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்            B. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
C. துரைராசு                    D. பெருவாயின் முள்ளியார்

62. "கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது" என்று வணிகம் பற்றி கூறும் நூல்?
A. குறுந்தொகை        B. நற்றிணை        C. பட்டினப்பாலை        D. அகநானூறு

63. தவறானதைத் தேர்ந்தெடு?
A. வாணம் – வெடி        B. பணி – குளிர்ச்சி    C. ஏரி – நீர்நிலை    D. கூறை - புடவை

64. "தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி _______ உமணர் போகலும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
A. குறுந்தொகை        B. நற்றிணை        C. பட்டினப்பாலை        D. அகநானூறு

65. கீழ்க்கண்டவற்றில் காமராசரின் சிறப்பு பெயர்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. பெருந்தலைவர்                    B. கருப்புக் காந்தி    
C. தலைவர்களை உருவாக்குபவர்            D. ரோசாப்பு துரை

66. இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
A. சு. சக்திவேல்    B. காரல் மார்க்ஸ்        C. அறிஞர் அண்ணா        D. இரா. அரங்கநாதன்

67. காமராசர் வாழ்ந்த __________ இல்லம் அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன?
A. விருதுநகர் இல்லம்                B. சென்னை இல்லம்
C. கன்னியாகுமரி இல்லம்                D. A மற்றும் B இரண்டும் சரி

68. 02.10.2000 ஆம் ஆண்டு காமராசருக்கு எங்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது?
A. விருதுநகர்        B. சென்னை        C. மதுரை        D. கன்னியாகுமரி

69. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது?
A. சீனா        B. ஆஸ்திரேலியா        C. தமிழ்நாடு        D. கேரளா

70. "அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்" என்று பாடியவர்?
A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்        B. பெருவாயின் முள்ளியார்
C. முடியரசன்                D. சு. சக்திவேல்

71. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு ?
A. மூன்று ஏக்கர்        B. எட்டு ஏக்கர்        C. ஐந்து ஏக்கர்        D. பத்து ஏக்கர்

72. காவியப்பாவை என்ற நூலின் ஆசிரியர்?
A. துரைராசு                B. இளங்கோவடிகள்        
C. சீத்தலைச்சாத்தனார்            D. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

73. குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு ______ என்பது இன எழுத்தாகும்?
A. இ        B.அ        C.உ        D. ஔ

74. கீழ்க்கண்டவற்றில் அண்மைச் சுட்டுக்குரிய எழுத்து எது?    
A. அ    B. இ    C. உ    D. ஏ

75. கீழ்க்கண்டவற்றில் சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து எது?    
A. அ    B. இ        C. உ    D. ஏ

76. கொன்றைவேந்தன் என்ற நூலின் ஆசிரியர்?
A. பெருவாயின் முள்ளியார்        B. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
C. சு. சக்திவேல்            D. ஔவையார்

77. சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப் பொருளைத் தருவது?
A. அகவினா        B. அண்மைச் சுட்டு        C. சுட்டுத் திரிபு        D. புறச்சுட்டு

78. தவறானதைத் தேர்ந்தெடு?
A. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் கயத்தூர்
B. ஆசாரக்கோவை பதினெண்மேற்கணக்கு நூல்களுள் ஒன்று
C. ஆசாரக்கோவை என்பதற்கு நல்லொழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்
D. மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்

79. சிறந்த நூலகர்களுக்கு ______ விருது வழங்கப்படுகிறது?
A. பாரத ரத்னா விருது            B. பத்மபூஷன் விருது
C. டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது        D. ஏதுமில்லை

80. அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத்தளத்தோடு எத்தனை அடுக்குகளை கொண்டது?
A. ஐந்து அடுக்குகள்            B. எட்டு அடுக்குகள்        
C. இரண்டு அடுக்குகள்        D. நான்கு அடுக்குகள்

81. காமராசர் ஆட்சிக் காலத்தில் காட்டாற்றைக் காரணம் காட்டி‌ பள்ளிக் கூடம் அமைத்த ஊர்?
A. தஞ்சாவூர்        B. பரமக்குடி        C. விருதுநகர்        D. கன்னியாகுமரி

82. கடலோடு விளையாடு என்னும் பாடல் சு. சக்திவேல் தொகுத்த __________ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது?
A. புதியதொரு விதி செய்வோம்    B. கனிச்சாறு        
C. நாட்டுப்புற இயல் ஆய்வு        D. பாரதியார் கவிதைகள்

83. 2021 ஆம் ஆண்டிற்கு திருவள்ளுவர் ஆண்டு?
A. 2034        B. 2061        C. 2044        D. 2052

84. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வை போற்றியவர்?
A. பெருவாயின் முள்ளியார்            B. நெல்லை முத்து
C. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்        D. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

85. தவறானதைத் தேர்ந்தெடு
A. முத்தமிழ் - இயல், இசை, நாடகம்        B. முத்தேன் - கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
C. முக்கனி - மா, திராட்சை, வாழை        D. இவை அனைத்தும்

86. நானிலம் படைத்தவன் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
A. பாரதிதாசன் கவிதைகள்            B. நாட்டுப்புற இயல் ஆய்வு
C. பாரதியார் கவிதைகள்            D. புதியதொரு விதி செய்வோம்

87. பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. கரன்சி நோட் – பணத்தாள்            B. டிமாண்ட் டிராஃப்ட் - காசோலை
C. கிரெடிட் கார்டு - பற்று அட்டை        D.டெபிட் கார்டு - கடன் அட்டை

88. சரியானதைத் தேர்ந்தெடு?
A. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது
B. அப்துல்கலாம் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது
C. விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது
D. அனைத்தும் தவறு

89. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - என்றவர்?
A. பாரதியார்            B. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
C. ஔவையார்            D. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
90. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
A. ஆஸ்திரேலியா        B. சீனா        C. ஆப்பிரிக்கா        D. எகிப்து

91. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?
கூற்று 1: ர - நாவின் நுனியை மேல் அண்ணத்தில் முதல் பகுதியை உரசுவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்
கூற்று 2: ‌‌‌ற‌ - நாவின் நுனியை மேல் அண்ணத்தில் மையப்பகுதியைத் தொட்டு வருவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.
A. கூற்று 1 2 சரி        B. கூற்று 1 மட்டும் தவறு        C. கூற்று 2 மட்டும் தவறு    D. கூற்று 1 2 தவறு

92. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?
கூற்று 1: ஆறு வல்லின மெய்யெழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்
கூற்று 2: இடையின எழுத்துகள் ஆறும் (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) ஒரே இனமாகும்
A. கூற்று 1 2 சரி        B. கூற்று 1 மட்டும் சரி        C. கூற்று 2 மட்டும் சரி        D. கூற்று 1 2 தவறு

93. பொருத்துக: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தளங்கள்
1. இரண்டாம் தளம் --- சொந்த நூல் படிப்பகம்
2. தரைத் தளம் --- கணிதம்
3. நான்காம் தளம் --- வேளாண்மை
4. ஐந்தாம் தளம் --- பொருளியல்
5. ஆறாம் தளம் --- தமிழ் நூல்கள்
A. 1 2 3 4 5        B. 4 1 3 2 5        C. 5 1 4 2 3        D. 5 4 3 2 1

94. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?
கூற்று 1: வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்
கூற்று 2: வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்
A. கூற்று 1 2 சரி            B. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு    
C. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி        D. கூற்று 1 2 தவறு

95. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?
கூற்று 1: வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துக்கள் என்று பெயர்.‌ எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
கூற்று 2: மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் --- எ, யா
கூற்று 3: மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள் --- ஆ, ஓ
கூற்று 4: மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து --- ஏ
A. அனைத்தும் சரி                B. கூற்று 1 3 தவறு, கூற்று 2 4 சரி
C. கூற்று 1 2 சரி, கூற்று 3 4 தவறு        D. அனைத்தும் தவறானவை

96. பொருத்துக:
1. மல்லெடுத்த‌ --- வயல்
2. சமர் --- நட்புக் கொள்ளுதல்
3. கழனி‌ --- போர்
4. நட்டல் --- இகழும்படி
5. தூற்றும் படி --- வலிமை பெற்ற
A. 5 4 3 2 1        B. 1 2 3 4 5        C. 5 3 1 2 4        D. 3 1 2 4 5

97. பொருத்துக:
1. இழைத்து --- ஒப்பிட்டு ஆராய்ந்தால்
2. நன்றியறிதல் --- பதித்து
3. ஒப்புரவு --- பிறர் செய்த நன்றியை மறவாமை
4. வற்றாமல் --- எல்லாரையும் சமமாகப் பேணுதல்
5. சீர்தூக்கின் --- குறையாமல்
A. 1 2 3 4 5        B. 5 4 3 2 1        C. 2 3 4 5 1        D. 3 2 5 4 1

98. பொருத்துக:
1. மகரசங்கராந்தி --- கர்நாடகம்
2. லோரி --- இராஜஸ்தான்
3. உத்தராயன் --- பஞ்சாப்
A. 3 2 1            B. 1 3 2        C. 1 2 3        D. 2 3 1

99. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: உழவர்கள் தைத் திங்களில் விதை விதைப்பர். ஆடித் திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர்
கூற்று 2: தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் ஆகும்
கூற்று 3: தை மாதத்தின் இறுதி நாள் போகித் திருநாள் ஆகும்
A. கூற்று 1 2 3 சரி                B. கூற்று 1 2 தவறு, கூற்று 3 சரி
C. கூற்று 1 3 தவறு, கூற்று 2 சரி        D. கூற்று 1 2 3 தவறு

100. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?
கூற்று 1: ஒரே பாறையில் செதுக்கி செய்யப்பட்ட கோவில் இரதக்கோவில் எனப்படும். ஐந்து ரதங்கள் உள்ளதால் இவ்விடத்திற்கு பஞ்ச பாண்டவர் ரதம் என்று பெயர்.இந்த இரதக் கோவில் மாமல்லர் காலத்தில் உருவாக்கப்பட்டது
கூற்று 2: மாமல்லரின் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு
கூற்று 3: அர்ச்சுனன் தவம் செய்யும் சிற்ப பாறைக்கு 'அர்ச்சுனன் தபசு' என்று பெயர். இதனை 'பகீரதன் தவம்' என்றும் கூறுவர்.
A. கூற்று 1 2 3 சரி                B. கூற்று 1 3 சரி, கூற்று 2 தவறு
C. கூற்று 1 2 சரி, கூற்று 3 தவறு        D. கூற்று 1 2 3 தவறு
    
    


No comments:

Post a Comment