LATEST

Tuesday, March 12, 2024

March 12, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 23 Test - 10th std Tamil Unit 5

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 23 Test
 
 கேள்விகள் : 50                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

10th std - Unit 5


1.“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்கிறார் ____.
A) மணவை முஸ்தபா    B) மு.கு. ஜகந்நாதர்        C) பரிதிமாற் கலைஞர்    D) உ.வே.சாமிநாதர்

2. ‘ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்” என்கிறார்
A) மணவை முஸ்தபா    B) மு.கு. ஜகந்நாதர்        C) பரிதிமாற் கலைஞர்        D) உ.வே.சாமிநாதர்

3.மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் _______________ என்பவர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார்.
A) திருவள்ளுவர்    B) வச்சணந்தி முனிவர்    C) குணவீர பண்டிதர்        D) தொல்காப்பியர்

4. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி யாது?
A) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது    
B) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
C) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
D) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

5.வடமொழியில் வழங்கி வந்த இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் ________________ நூல்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.
A) சிற்றிலக்கியம்    B) ஐம்சிறும் காப்பியம்       C) ஐம்பெரும் காப்பியம்     D) சங்க இலக்கியம்

6. கீழ்க்கண்டவற்றுள் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவை எவை?
A) பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்.
B) திருக்குறள், நாலடியார், நான்மணிக் கடிகை
C) ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்
D) இவற்றில் ஏதுமில்லை

7. _______________ மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.
A) பிரெஞ்சு        B) ஆங்கிலம்        C) மலாய்        D) ஜெர்மன்

8. _______________ ஆம் நூற்றாண்டுவரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாகப் பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின.
A) 16            B) 17        C) 18

9. ________________ வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
A) இரவீந்திரநாத தாகூர்    B) காசி நஸ்ருல்    C) கவிஞர் வித்யாபதி    D) அக்னிஹோத்ரி

10. ஒரு நாடு எவ்வளவு _______________ பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அதன் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள். அதுபோல, ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.
A) காற்று ஆற்றல்    B) மின்னாற்றல்     C) சூரிய ஆற்றல்        D) நீர் ஆற்றல்

11.எங்கோ தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அதுதான் மொழிபெயர்ப்பு. எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழிபெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன – என்ற கூற்று யாருடன் தொடர்புடையது?
A) ராஜம் கிருஷ்ணன்        B) சுஜாதா    C) சா. கந்தசாமி     D) பெருஞ்சித்திரனார்

12. ராகுல் சாங்கிருத்யாயன் 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை _______________ மொழியில் எழுதினார். ______________ ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்றுவரையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது.
A) மலையாளம், 1943        B) இந்தி, 1949        C) சமஸ்கிருதம், 1950     D) பஞ்சாபி, 1955

13. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை மொழிபெயர்த்த வருடம் மற்றும் ஆசிரியர் – சரியானது எது?
I. 1949 – கணமுத்தையா மொழி பெயர்ப்பு    
II. 2016 – டாக்டர் என். ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு
III. 2016 – முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு    
IV. 2018 – யூமா வாசுகி மொழி பெயர்ப்பு
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி    C) III, IV மட்டும் சரி      D) I, II, III, IV அனைத்தும் சரி

14. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் _______________ என்று குறிப்பிடுவார்கள். மொழிபெயர்ப்பு மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
A) அறிவுசார் வளம்        B) இலக்கியப் பயன்        C) பயன்கலை        D) இவற்றில் ஏதுமில்லை

15. _______________ தன் வெளியீட்டு வடிவமாகக் கொண்டிருந்த தமிழ், அச்சு இயந்திரத்தின் வருகையை ஒட்டி மொழிபெயர்ப்பை எதிர்கொண்டபோது உரைநடை வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
A) செய்யுளையே                B) இலக்கணத்தையே        
C) இலக்கியத்தையே            D) இவற்றில் ஏதுமில்லை

16. ஒரு குறிப்பிட்ட சிறு குழுவில் பேசப்படும் மொழியில் இருப்பவையும் கூட நம்மை வந்தடைய வேண்டும். சிறு குழுவினர் பேசும் _______________ மொழிகளின் படைப்பாளர்கள் நோபல் பரிசு பெறுகிறார்கள். ஆனால் அந்தப் படைப்புகள் நம்மை எட்டுவதில்லை.
A) ஜப்பானிய        B) இலத்தீன்        C) ஐரோப்பிய        D) ஆப்பிரிக்க

17. தமிழின் தொன்மையான இலக்கியங்கள் முன்னரே மொழி பெயர்க்கப்பட்டு அறிமுகமாகியிருந்தால் தமிழின் பெருமை உலகெங்கும் முறையாகப் பரவியிருக்கும். _______________ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும்.
A) ஹார்வர்ட்        B) ஆக்ஸ்போர்டு    C) ஸ்டான்போர்டு        D) நாளந்தா

18. தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும். இதனை _______________, “காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
A) இராஜராஜன்        B) குலோத்துங்கன்        C) கரிகாலன்     D) இரும்பொறை

19. “சென்றிடுவீர் எட்டுதிக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”, “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” – என்ற பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?
A) வாணிதாசன்    B) திரு.வி. க        C) பாரதிதாசன்    D) பாரதியார்

20.பிரான்சு “தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன் முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்” முதலிய நூல்களும் அங்கு உள.” – என்று கூறியவர் யார்?
A) மனோன்மணியம்        B) தனிநாயக அடிகள்        C) திரு.வி. க     D) உ.வே.சாமிநாதர்

21. கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது _______________?
A) சங்க இலக்கியம்         B) காவியம்    C) ஐம்சிறும் காப்பியம்   D) ஐம்பெரும் காப்பியம்

22. கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது _______________?
A) சங்க இலக்கியம்     B) காவியம்    C) ஐம்சிறும் காப்பியம்    D) ஐம்பெரும் காப்பியம்

23. நீதிவெண்பா நூலின் ஆசிரியர் யார்?
A) கா.ப. செய்குதம்பிப் பாவலர்    B) ஆறுமுக நாவலர்    C) பரிதிமாற் கலைஞர்    D) திரு.வி.க

24. ‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி’ – இவ்வடியில் பயின்று வரும் தொடை நயம் யாது?
A) எதுகை        B) மோனை        C) இயைபு        D) முரண்

25. செய்குதம்பிப் பாவலர் அவர்களின் காலம்?
A) 1874- 1950        B) 1884- 1960        C) 1894- 1970        D) 1904- 1980

26. கீழ்க்கண்டவற்றுள் யாருடைய நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன?
A) நா. கதிரைவேற்பிள்ளை    B) செய்குதம்பிப் பாவலர்    C) சாரண பாஸ்கரன்    D) கவி. கா. மு. ஷெரீப்

27. சதாவதானி என்பது _______________?
A) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது    B) ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
C) நூறு படைவீரர்களை கொன்று குவிப்பது        D) ஆயிரம் பேருக்கு உணவிடுவது

28. திருவிளையாடற் புராணம் நூலின் ஆசிரியர் யார்?
A) பரஞ்சோதி முனிவர்        B) சயம் கொண்டார்    C) சேக்கிழார்        D) நாகுத்தனார்

29. “உமையை ஒரு பாகத்திற்கொண்ட மேலான பரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா” – என்று கூறியவர் யார்?
A) அமைச்சர்        B) புலவர்        C) மன்னன்        D) இவர்களில் யாருமில்லை

30. காடனுக்கும் கபிலனுக்கும் – இலக்கணக்குறிப்பு தருக?
A) முற்றும்மை        B) எண்ணும்மை        C) உம்மைத்தொகை        D) உவமைத்தொகை

31. சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் – என்பதைப் பற்றிய பாடல் இது. “மாசற விசித்த வார்புறு வள்பின் …” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை        B) குறுந்தொகை        C) அகநானூறு        D) புறநானூறு

32. பரஞ்சோதி முனிவர் _______________ (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்.
A) திருக்கழுக்குன்றம்        B) திருமறைக்காடு        C) திருவாவடுதுறை        D) திருவாலவாய்

33. வேப்ப மாலை அணிந்த மன்னன்?
A) சேரன்        B) சோழன்        C) பாண்டியன்        D) பல்லவன்

34. சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் _______________?
A) பார்வதி        B) திருமகள்        C) கலைமகள்        D) அலைமகள்

35. வினா எத்தனை வகைப்படும்?
A) 6        B) 7        C) 8        D) 9

36. மன்னன் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து _______________ இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்?
அ) மரகத        ஆ) பொன்        இ) தன்            ஈ) வைர

37. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” (தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை) – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கலித்தொகை        B) பதிற்றுப்பத்து        C) ஐங்குறுநூறு        D) புறநானூறு

38. கல்விக்கண் திறந்தவர்களுக்கிடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
A) சாரதா அம்மையார்        B) முத்துலெட்சுமி     C) அம்புஜத்தம்மாள்    D) இவர்களில் யாருமில்லை

39. மொழியின் வளர்ச்சி என்பது வினவுவதிலும் விடையளிப்பதிலும் கூட இருக்கிறது.
அவற்றைப் பற்றி _______________ விளக்கியிருக்கிறார்.
A) திருவள்ளுவர்        B) ஆறுமுக நாவலர்        C) தொல்காப்பியர்    D) நன்னூலார்

40. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது. “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) கொளல் வினா        B) கொடை வினா        C) ஏவல் வினா        D) அறி வினா

41. ‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) ஏவல் விடை        B) நேர் விடை        C) மறை விடை        D) சுட்டு விடை

42. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை. இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) ஏவல் விடை        B) நேர் விடை        C) மறை விடை        D) சுட்டு விடை

43. வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல். “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) இனமொழி விடை        B) நேர் விடை        C) மறை விடை        D) சுட்டு விடை

44. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) சீவகசிந்தாமணி        B) நன்னூல்        C) புறநானூறு        D) மணிமேகலை

45. அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதியார்        B) பாரதிதாசன்        C) வாணிதாசன்        D) நாமக்கல் கவிஞர்

46. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?
I. Emblem – சின்னம்
II. Intellectual – அறிவாளர்
III. Thesis – ஆய்வேடு
IV. Symbolism – குறியீட்டியல்
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி        C) III, IV மட்டும் சரி    D) I, II, III, IV அனைத்தும் சரி

47. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) வெற்றி வேக்கை         B) புதிய ஆத்திச்சூடி        C) கொன்றை வேந்தன்    D) ஆத்திச்சூடி

48. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
A) தமிழ்        B) அறிவியல்        C) கல்வி        D) இலக்கியம்

49. உடன்பட்டுக் கூறும் விடை _______________?
A) சுட்டுவிடை        B) மறைவிடை        C) நேர்விடை        D) ஏவல்விடை

50. ஆடத்தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத்தெரியும் என்று கூறுவது _______________?
அ) வினாஎதிர் வினாதல்    ஆ) உற்றது உரைத்தல்        இ) உறுவது கூறல்    ஈ) இனமொழி விடை


Saturday, March 9, 2024

March 09, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 22 Test - 10th std Tamil Unit 4

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 22 Test
 
 கேள்விகள் : 45                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

10th std - Unit 4


1. __________ ஆம் ஆண்டுகளில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் (personal computers) வளர்ச்சியும், இணையப் பயண்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் (digital revolution) காரணமாயின. அவற்றுள் இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு.
A) 1970            B) 1980            C) 1990            D) 2000

2. இணையத்தில் வணிகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று ___________ பயன்படுத்திப் பெரும்பாலும் ஆளற்ற பல்பொருள் அங்காடிகளை உலகெங்கிலும் திறந்து வருகிறது.
A) இணையச் செயலியை    B) செயற்கை நுண்ணறிவை    C) வலைதளத்தை    D) இவற்றில் ஏதுமில்லை

3. 2016இல் _________ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான _________, சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
A) ஐ.பி.எம்., வாட்சன்       B) மைக்ரோசாப்ட், எக்ஸ் பாக்ஸ்    C) கூகுள், ஆல்பபெட்    D) இவற்றில் ஏதுமில்லை

4. _________ நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், இயந்திர மனிதர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன. அவை அங்கு வரும் நோயாளிகளின் குரலையும் முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன.
A) மலேசியா        B) அமெரிக்கா        C) சீனா

5.  இந்தியாவின் பெரிய வங்கியான __________, ‘இலா’ (ELA – Electronic Live Assistant) என்னும் உரையாடு மென்பொருளை (Chatbot) உருவாக்கியிருக்கிறது. ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் அது உரையாடும்.
A) இந்தியன் வங்கி        B) பாரத ஸ்டேட் வங்கி        C) ஆக்ஸிஸ் வங்கி          D) கனரா வங்கி

6.செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் __________ (DATA SCIENTISTS) தேவை கூடியுள்ளது. இயந்திரக் கற்றல் வல்லுநர்கள் முதலான பல தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவையும் பெருகி வருகிறது.
A) வன்பொருள் வல்லுநர்கள்            B) மென்பொருள் வல்லுநர்கள்    
C) தரவு அறிவியலாளர்கள்             D) இவற்றில் ஏதுமில்லை

7. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே __________. இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ. வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன. இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படுகின்றன. இந்த ரோபோவை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
A) அசிமோ        B) பெப்பர்         C) நவ்        D) டோபியோ

8.பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் __________ யைப் பயன்படுத்துகின்றன.
A) செயற்கை நுண்ணறிவு    B) விளம்பரங்கள்    C) தானியங்கி இயந்திரங்கள்    D) இவற்றில் ஏதுமில்லை

9.  பொருந்திய இணையைக் கண்டறிக.
I. பெப்பர் – ஜப்பான் சாப்ட் வங்கி        II. வாட்சன் – ஐ.பி.எம். நிறுவனம்
III. இலா – பாரத ஸ்டேட் வங்கி          IV. சுகா – புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் இயந்திர மனிதன்
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி         D) IV மட்டும் சரி

10. வேர்டுஸ்மித் என்பதைத் தமிழில் ________ என்று அழைப்பர்.
A) எழுத்தாளி        B) எழுத்தாணி        C) எழுத்தோவியம்        D) குரலாளி

11. “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர் யார்?
A) பாரதியார்        B) பாரதிதாசன்            C) கவிமணி

12. ஜப்பானில் வரவேற்பாளராகவும் பணியாளராகவும் உள்ள இயந்திர மனிதன் பெயர்?
A) வாட்சன்        B) இலா            C) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)        D) பெப்பர்

13. சீனாவில் சிவன் கோவில் கட்டிய சீனப்பேரரசர் யார்?
A) சூ யுவான்சாங்க்    B) கின் ஷி ஹுவாங்        C) குப்லாய்கான்           D) இவர்களில் யாருமில்லை

14.எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் ____________ தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவும் நம்மை வளப்படுத்த உதவும்.
அ) மூன்றாவது    ஆ) நான்காவது        இ) ஐந்தாவது        ஈ) இரண்டாவது

15.பெருமாள் திருமொழி என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) கம்பர்        B) குலசேகர ஆழ்வார்        C) மாணிக்கவாசகர்             d)}கவிமணி

16.சொல்லும் பொருளும் சரியானது எது?
I. சுடினும் – சுட்டாலும்    II. மாளாத – தீராத    III. மாயம் – விளையாட்டு
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி        C) III மட்டும் சரி    D) I, II, III அனைத்தும் சரி

17. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா! – வித்துவக்கோடு என்னும் ஊர் எங்கு உள்ளது? இங்குள்ள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியவர் யார்?
A) ஆந்திரா மாநிலம் திருப்பதி, நம்மாழ்வார்        B) கேரளா மாநிலம் பாலக்காடு, குலசேகர ஆழ்வார்
C) தமிழ்நாடு மாநிலம் சென்னை, கம்பர்        D) கர்நாடகம் மாநிலம் பெங்களூரு, சுந்தரர்

18. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) திருப்பாவை        B) பெரியாழ்வார் திருமொழி    C) திருச்சந்த விருத்தம்        D) பெருமாள் திருமொழி

19. கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?
I. இலக்கியங்கள் தாம் தோன்றிய சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு மட்டும் இல்லாமல் அக்காலகட்டத்தில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தாங்கி அமைகின்றன.
II. அறிவியல் செழுமை அடைந்திருக்கும் இக்காலத்தின் தொடக்க விதைகளைப் பண்டைய இலக்கியங்களில் நாம் பார்க்க முடிகிறது.
III. மேனாட்டு அறிவியல் சிந்தனையின் சாயல், துளியும் இல்லாமல் படைக்கப்பட்ட தமிழர் இலக்கியங்களில் துளிர்த்திருக்கும் அறிவியல் கருத்துகள் இன்றளவும் அவற்றோடு ஒத்துப்போவதைக் காண்கையில் பெருவியப்பு மேலிடுகிறது. புவியின் உருவாக்கம் குறித்து இன்றைய அறிவியல் கூறுகிற கருத்தை அன்றே காட்டிய பழங்கவிதை வியப்பிலும் வியப்பே!
A) I, II, III அனைத்தும் சரி         B) I, II சரி III தவறு    C) II, III மட்டும் சரி    D) III மட்டும் சரி

20. விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக், கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் செந் தீச்சுடரிய ஊழியும் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) பரிபாடல்         B) கலித்தொகை        C) ஐங்குறுநூறு        D) அகநானூறு

21.பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) சேக்கிழார்        B) ஒளவையார்        C) கீரந்தையார்        D) சீத்தலை சாத்தனார்

22. மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன் – என்ற கூற்று யாருடையது?
A) மாணிக்கவாசகர்        B) கம்பர்    C) ஒளவையார்        D) குலசேகர ஆழ்வார்

23. வளர்வானம் – இலக்கணக்குறிப்பு தருக?
A) அடுக்குத்தொடர்    B) வினைத்தொகை    C) பண்புத்தொகை    D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

24.செந்தீ – இலக்கணக்குறிப்பு தருக?
A) அடுக்குத்தொடர்    B) வினைத்தொகை    C) பண்புத்தொகை    D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

25. வாரா (ஒன்றன்) – இலக்கணக்குறிப்பு தருக?  
A) அடுக்குத்தொடர்    B) வினைத்தொகை    C) பண்புத்தொகை    D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

26.கிளர்ந்த – பகுபத உறுப்பிலக்கணம் சரியானது எது?
I. கிளர்ந்த – கிளர் + த்(ந்) + த் + அ        II. கிளர் – பகுதி; த் – சந்தி;
III. த்(ந்) – ஆனது விகாரம்            IV. த் – இறந்தகால இடைநிலை; அ – பெயரெச்ச விகுதி
A) I, II மட்டும் சரி    B) I, II, III மட்டும் சரி    C) I, II, III, IV அனைத்தும் சரி    D) I, II, III, IV அனைத்தும் தவறு

27.  _________ நாட்டின் வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் _________ ஆம் ஆண்டு நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.
A) இங்கிலாந்து, 1914        B) அமெரிக்கா, 1924        C) ரஷ்யா, 1934        D) அயர்லாந்து, 1944

28.__________ ஆண்டுகளுக்கு முன் __________ என்பவர் __________ நூலில், திருஅண்டப் பகுதியில் இவ்வாறாக எழுதுகிறார். “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் …. சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”.
A) 1000, கம்பர், கம்பராமாயணம்            B) 1100, இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்
C) 1200, சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை        D) 1300, மாணிக்கவாசகர், திருவாசகம்

29. பரிபாடல் __________ நூல்களுள் ஒன்றாகும்.
A) பத்துப்பாட்டு    B) எட்டுத்தொகை    C) சிற்றிலக்கியம்          D) ஐம்பெரும் காப்பியங்கள்

30. பரிபாடல் __________ ஆகும்.
A) இலக்கண நூல்        B) நாடகம்        C) இசைப்பாடல்            D) இவற்றில் ஏதுமில்லை

31.கீழ்க்கண்டவற்றுள் பெருவெடிப்புக் காட்சி – பற்றி கூறும் நூல் எது?
A) பரிபாடல்         B) கலித்தொகை        C) நற்றிணை        D) ஐங்குறுநூறு

32. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகம் எங்கு உள்ளது?
A) ஈரோடு, கோபிசெட்டி பாளையம்            B) திருவாரூர், மன்னார்குடி
C) சென்னை, கோட்டூர்புரம்                D) இவற்றில் ஏதுமில்லை

33. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் __________ ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இங்கு பத்துக் காட்சிக் கூடங்கள் உள்ளன. பரிணாம வளர்ச்சி பூங்கா, புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா, இயந்திரவியல் பூங்கா, குழந்தைகள் விளையாடத்தக்க பொம்மைகளைக் கொண்ட பூங்காக்கள் உள்ளன.
A) 1966            B) 1978            C) 1988            D) 2000

34. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கோளரங்கம் தனித்துவம் வாய்ந்தது. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை இங்குதான் உள்ளது. இது __________ ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
A) 2000            B) 2003            C) 2006            D) 2009

35. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை.
II. அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே.
A) I மட்டும் சரி            B) II மட்டும் சரி        C) I, II இரண்டுமே சரி        D) I, II இரண்டுமே தவறு

36. ஐன்ஸ்டைன், நியூட்டன் முதலானோர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவியல் முன்னோடிகள். இவர், அவர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறார். நியூட்டன், _______________ பல்கலைக்கழகத்தில் வகித்த _______________ துறையின் ‘லூகாசியன் பேராசிரியர்’ என்ற மதிப்பு மிகுந்த பதவியை ஸ்டீபன் ஹாக்கிங்கும் வகித்திருக்கிறார்.
A) நாட்டிங்காம், அறிவியல்            B) ஆக்ஸ்போர்டு, புவியியல்
C) கேம்பிரிட்ஜ், கணக்கியல்            D) இவற்றில் ஏதுமில்லை

37. _______________ என்பவர் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னார். அவர் காலத்தில் E = MC2 எனும் கோட்பாட்டை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 100 ஆண்டுகளுக்குப் பின் ஈர்ப்பலைகள் இருப்பதை உலகம் கண்டுகொண்டது.
A) ஸ்டீபன் ஹாக்கிங்        B) ஐன்ஸ்டைன்        C) நியூட்டன்    D) இவற்றில் ஏதுமில்லை

38. தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? – என்று கூறியவர் யார்?
A) ஸ்டீபன் ஹாக்கிங்        B) எடிசன்        C) நியூட்டன்        D) கலிலியோ

39. உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ, ஊனமோ ஒருவருக்குக் குறையாகாது; ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் ______________?
A) கலிலியோ        B) எடிசன்    C) நியூட்டன்        D) ஸ்டீபன் ஹாக்கிங்

40. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் ________________ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ________________ ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையானது.
A) இருபது, 1975    B) நாற்பது, 1988.    C) ஐம்பது, 2000    D) அறுபது, 2010

41. “கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” (கரூர் மாவட்டத்தின் கருவூர் (கரூர் )) – என்று கூறும் நூல் எது?
A) ஐங்குறுநூறு    B) கலித்தொகை        C) புறநானூறு        D) அகநானூறு.

42. “அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்துகொள்ளப்போவதையும் உள்ளடக்கியது – என்று கூறியவர் யார்?
A) ஐன்ஸ்டைன்        B) ஸ்டீபன் ஹாக்கிங்        C) கல்பனா சாவ்லா        D) ரைட் சகோதரர்கள்

43. “வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்” – என்று கூறியவர் யார்?
A) ஐன்ஸ்டைன்        B) ஸ்டீபன் ஹாக்கிங்        C) கல்பனா சாவ்லா         D) ரைட் சகோதரர்கள்

44. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. இருதிணை: ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.
II. ஐம்பால்: பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால் – பகுப்பு; பிரிவு). இஃது ஐந்து வகைப்படும்.
III. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது.
IV. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.
A) I மட்டும் சரி        B) I, II மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி       D) I, II, III, IV அனைத்தும் சரி

45. உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் – சரியானது எது?
I. வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால்    II. மகள், அரசி, தலைவி – பெண்பால்
III. மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால்IV. நாற்காலி, மேசை – பலவின்பால்
A) I மட்டும் சரி        B) I, II மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி        D) I, II, III, IV அனைத்தும் சரி

46. அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் – சரியானது எது?
I. அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும். எ.கா. யானை, புறா, மலை
II. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும். எ.கா. பசுக்கள், மலைகள்
A) I மட்டும் சரி            B) I, II இரண்டுமே சரி            C) II மட்டும் சரி

47. மூவிடம் பற்றிய சரியான கூற்று எது?
I. தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.
II. தன்மை – தன்மைப் பெயர்கள்: நான், யான், நாம், யாம்; தன்மை வினைகள்: வந்தேன், வந்தோம்.
III. முன்னிலை – முன்னிலைப் பெயர்கள்: நீ, நீர், நீவிர், நீங்கள்; முன்னிலை வினைகள்: நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்.
IV. படர்க்கை – படர்க்கைப் பெயர்கள்: அவன், அவள், அவர், அது, அவை; படர்க்கை வினைகள்: வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள், பறந்தது, பறந்தன.
A) I மட்டும் சரி        B) I, II மட்டும் சரி       C) I, II, III மட்டும் சரி        D) I, II, III, IV அனைத்தும் சரி

48. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் _______________ எனப்படும்.
A) வழாநிலை        B) வழு            C) வழுவமைதி        D) இவற்றில் ஏதுமில்லை

49.  இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் _______________ எனப்படும்.
A) வழாநிலை        B) வழு            C) வழுவமைதி        D) இவற்றில் ஏதுமில்லை

50.இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது _______________ ஆகும்.
A) வழாநிலை            B) வழு        C) வழுவமைதி            D) இவற்றில் ஏதுமில்லை

March 09, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 21 Test - 10th std Tamil Unit 3

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 21 Test
 
 கேள்விகள் : 45                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

10th std unit 3


1.உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். ‘விருந்தே புதுமை’ என்று ____________ கூறியுள்ளார்.
A) ஒளவையார்        B) பாரதிதாசன்            C) பாரதியார்        D) தொல்காப்பியர்

2. திருவள்ளுவர் ___________ இயலில் ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே’ அமைத்திருக்கிறார்.
A) பாயிரம்        B) ஊழியல்        C) இல்லறவியல்        D) துறவறவியல்

3. இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை “மோப்பக் குழையும் அனிச்சம்” என்று எடுத்துரைக்கிறார் – இந்த கூற்று யாரைப்பற்றியது?
A) ஒளவையார்        B) திருவள்ளுவர்        C) பாரதியார்        D) தொல்காப்பியர்

4. “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) சிலப்பதிகாரம்    B) மணிமேகலை    C) வளையாபதி          d) இராமாயணம்

5. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் _________________
குறிப்பிட்டுள்ளார்.
A) ஒளவையார்            B) திருவள்ளுவர்        C) பாரதியார்            D) கம்பர்

6. விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளவர் யார்?
A) ஒளவையார் (ஆத்திச்சூடி)                    B) திருவள்ளுவர் (திருக்குறள்)
C) செயம்கொண்டார் (கலிங்கத்துப்பரணி)            D) கம்பர் (இராமாயணம்)

7. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) (ஆத்திச்சூடி) ஒளவையார்                B) (கலிங்கத்துப்பரணி) செயம்கொண்டார்
C) (திருக்குறள்) திருவள்ளுவர்                D) (கம்பராமாயணம்) கம்பர்

8. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) (ஆத்திச்சூடி) ஒளவையார்                B) (கலிங்கத்துப்பரணி) செயம்கொண்டார்
C) (திருக்குறள்) திருவள்ளுவர்                D) (கம்பராமாயணம்) கம்பர்

9. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை, “உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர்; அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) (ஆத்திச்சூடி) ஒளவையார்                    B) (கலிங்கத்துப்பரணி) செயம்கொண்டார்
C) (புறநானூறு) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி        D) (கம்பராமாயணம்) கம்பர்

10 “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்று கண்ணகி வருந்துகிறாள். கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை _________ உணர்த்துகிறார்.
A) திருவள்ளுவர்    B) அறவண அடிகள்    C) சீத்தலைச் சாத்தானர்        D) இளங்கோவடிகள்

11. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு. இதை “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று _________ நூல் குறிப்பிடுகிறது.
A) அகநானூறு        B) கலித்தொகை        C) நற்றிணை        D) புறநானூறு

12. ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர். பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும் போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர். (“காலின் ஏழடிப் பின் சென்று”) என்று கூறும் நூல் எது?
A) கலித்தொகை    B) பொருநராற்றுப்படை    C) கலிங்கத்துப்பரணி       D) வளையாபதி

13. வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி. இதனை, “குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” – என்று கூறும் நூல் எது?
A) புறநானூறு        B) பொருநராற்றுப்படை    C) கலிங்கத்துப்பரணி       D) வளையாபதி

14. நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்; இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான். இச்செய்தி, “நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்று இக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்” – என்று கூறும் நூல் எது?
A) வளையாபதி            B) பொருநராற்றுப்படை        C) கலிங்கத்துப்பரணி            D) புறநானூறு

15. இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் ________________ நூலில் காட்டப்படுகிறது.
A) வளையாபதி        B) பொருநராற்றுப்படை    C) பெரியபுராணம்          D) புறநானூறு

16. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது _____________ நூல்.
A) சிறுபாணாற்றுப்படை    B) திருவாசகம்        C) நளவெண்பா    D) ஐங்குறுநூறு

17. “இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு” – என்று கூறியவர் யார்?
A) அருந்ததி            B) அம்சப்பிரியா        C) ரம்யா

18. இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” – என்று கூறும் நூல் எது?
A) சிறுபாணாற்றுப்படை    B) திருவாசகம்        C) குறுந்தொகை      D) ஐங்குறுநூறு

19. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று __________ நூலில் ஒளவையார் பாடியுள்ளார்.
A) நல்வழி    B) மூதுரை    C) கொன்றை வேந்தன்                D) புறநானூறு

20. “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈ(து) எல்லா உலகும் பெறும்” – என்று தனிப்பாடல் நூலில் __________________ அவர்கள் கூறுவதிலிருந்து வள்ளல்களால் விருந்தினர் போற்றப்பட்டதை அறியமுடிகிறது.
A) மாணிக்கவாசகர்        B) கம்பர்    C) செயம்கொண்டார்        D) ஒளவையார்

21. விருந்தினர் – விருந்து பற்றிய சரியான கூற்று எது?
I. சங்க காலத்திலிருந்தே அரசராயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர். கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது. விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின.
II. நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.
III. புதியவர்களான விருந்தினர்களை ஏற்பது குறைந்துவிட்ட காலத்தில், ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்றனர். படிப்படியாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி        C) III மட்டும் சரி    D) I, II, III அனைத்தும் சரி

22. காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர் பண்பு எது?
A) அந்நிய மொழியைப் பேணிக்காத்தல்        B) இறக்குமதியில் சிறந்து விளங்குதல்
C) விருந்தோம்பல்                    D) இவற்றில் ஏதுமில்லை

23. இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும் – இவ்வாறு கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பகிர்ந்துண்ணல் பற்றி கூறியவர் யார்?
A) பாரதியார்         B) பாரதிதாசன்        C) வாணிதாசன்       D) அழ. வள்ளியப்பா

24. ______________ நாட்டின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ‘வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டு வாழையிலையில் விருந்து வைக்கின்றனர். முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டு, தினைப் பாயசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.
A) மலேசியா        B) சிங்கப்பூர்        C) தென் ஆப்பிரிக்கா        D) அமெரிக்கா

25. வாழை இலையில் விருந்து – சரியான கூற்று எது?
I. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர்.
II. தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள்.
III. உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர்.
A) I, II மட்டும் சரி        B) II, III மட்டும் சரி    C) I, II, III அனைத்தும் சரி     D) I, II, III அனைத்தும் தவறு

26.காசிக்காண்டம் – நூலின் ஆசிரியர் யார்?
A) அதிவீரராம பாண்டியர்    B) ஒளவையார்        C) கம்பர்    D) சேக்கிழார்

27. விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் – என்ற பாடல் எதைப்பற்றிக் குறிப்பிட்டுக் கூறுகிறது?
A) நல்லொழுக்கம் (பொறை)            B) இல்லொழுக்கம் (விருந்தோம்பல்)
C) நன்றியுணர்வு                D) மேற்கூறிய அனைத்தும்

28. பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல் சொல்லும் பொருளும் பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) திருவாசகம், மாணிக்கவாசகர்            B) கம்பராமாயணம், கம்பர்
C) கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்        D) காசிக்காண்டம், அதிவீரராமபாண்டியர்

29. சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்தியது எது?
I. அருகுற – அருகில்
II. முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்
III. கேழல் – பன்றி
IV. நவ்வி – மான்
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி           C) III மட்டும் சரி        D) I, II, III, IV அனைத்தும் சரி

30. விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், ‘வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல், அவர் விடை பெற்றுச் செல்லும்போது வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும் – என்று விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தைப் பற்றி கூறுபவர் யார்?   
A) அதிவீரராம பாண்டியர்    B) ஒளவையார்         C) கம்பர்        D) சேக்கிழார்

31. நன்மொழி – இலக்கணக்குறிப்பு தருக?
A) அன்மொழித்தொகை         B) பண்புத்தொகை           C) வேற்றுமைத்தொகை            D) வினைத்தொகை

32. வியத்தல், நோக்கல், எழுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – இலக்கணக்குறிப்பு தருக?
A) தொழிற்பெயர்    B) வினைமுற்று        C) வினையெச்சம்       D) வியங்கோள் வினைமுற்று

33. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?
I. உரைத்த – உரை + த் + த் + அ
II. உரை – பகுதி
III. த் – சந்தி
IV. த் – இறந்தகால இடைநிலை; அ – பெயரெச்ச விகுதி
A) I, II, III மட்டும் சரி     B) I, II, III, IV அனைத்தும் சரி     C) III, IV மட்டும் சரி    D) I, II, III, IV அனைத்தும் தவறு

34. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?
I. வருக – வா(வரு) + க
II. வா – பகுதி
III. க – வியங்கோள் வினைமுற்று விகுதி
A) I, II, III அனைத்தும் சரி    B) I, II மட்டும் சரி       C) III மட்டும் சரி     D) I, II, III அனைத்தும் தவறு

35. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து, உண்மை பேசி, உப்பிலாக் கூழ் இட்டாலும், உண்பதே அமிர்தம் ஆகும். முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே – என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கலித்தொகை    B) புறநானூறு        C) விவேகசிந்தாமணி        D) ஐங்குறுநூறு

36. காசிக்காண்டம் நூல் பற்றிய சரியான கூற்று எது?
I. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.
II. துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.
III. ‘இல்லொழுக்கம்’ பகுதியில் உள்ள பதினேழாவது பாடலே “விருந்தினனாக” – எனத் தொடங்கும் பாடல்.
A) I, II, III அனைத்தும் சரி    B) I மட்டும் சரி        C) II மட்டும் சரி        D) III மட்டும் சரி

37. கீழ்க்கண்டவர்களுள், முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் யார்?
A) இரும்பொறை    B) அதிவீரராம பாண்டியர்       C) விக்கிரம சோழன்    D) நெடுங்கிள்ளி

38. வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துக்களைக் கூறும் நூல். இந்நூலின் ஆசிரியர் யார்?   
A) ஒளவையார்        B) ஒட்டக்கூத்தர்    C) அதிவீரராம பாண்டியர்    D) கம்பர்

39. சீவலமாறன் என்ற பட்டப்பெயர் உடைய மன்னன் யார்?
A) இரும்பொறை    B) சடையவர்மன் வீரபாண்டியன்     C) விக்கிரம சோழன்    D) அதிவீரராம பாண்டியர்

40. நைடதம், கூர்ம புராணம், லிங்க புராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?  
A) அதிவீரராம பாண்டியர்    B) ஒட்டக்கூத்தர்    C) ஒளவையார்        D) கம்பர்

41. அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி, கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி, அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) முதுமொழிக்காஞ்சி        B) மலைபடுகடாம்     C) பரிபாடல்        D) குறுந்தொகை

42. சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி நோனாச் செருவின் வலம்படு நோன்தாள் மான விறல்வேள் வயிரியம் எனினே, நும்இல் போல் நில்லாது புக்கு – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) பெருங்கெளசிகனார்    B) கூடலூர் கிழார்    C) பிசிராந்தையார்          D) மாணிக்கவாசகர்

43. கிழவிர் போலக் கேளாது கெழீஇ சேட் புலம்பு அகல இனிய கூறி பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள மலைபடுகடாம் நூலை ______________ என்றும் அழைப்பர்.
A) முதுமொழிக்காஞ்சி        B) கூத்தராற்றுப்படை        C) பரிபாடல்    D) குறுந்தொகை

44. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. அசைஇ – இளைப்பாறி
II. அல்கி – தங்கி
III. கடும்பு – சுற்றம்
IV. நரலும் – ஒலிக்கும்
A) I, II, III, IV அனைத்தும் சரி        B) I, II மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி    D) IV மட்டும் சரி

45. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. ஆரி – அருமை    
II. படுகர் – பள்ளம்    
III. வயிரியம் – கூத்தர்   
IV. வேவை – வெந்தது
A) I மட்டும் சரி        B) I, II மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி          D) I, II, III, IV அனைத்தும் சரி

Thursday, March 7, 2024

March 07, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 20 Test - 10th std Tamil Unit 2

  

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 20 Test
 
 கேள்விகள் : 45                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

10th - std (unit - 2)


1. _________________ என்பவர் உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்.
A) வள்ளலார்        B) தொல்காப்பியர்    C) சயம் கொண்டார்           D) மாணிக்கவாசகர்

2.திருமூலர் தம் ______________ நூலில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.
A) திருமந்திரம்        B) திருமூலர் காவியம்        C) ஆறாதாரம்        D) தீட்சை விதி

3.பிற்கால ஔவையார் தம் குறளில் _______________ எனும் அதிகாரத்தில், “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்று காற்றைச் சிறப்பித்துள்ளார்.
A) காற்றின் உயிர்        B) வாயு        C) காற்றாவி        D) வாயுதாரணை

4. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. காற்றுக்கு இந்தப் பூவுலகில் பல பெயர்கள் உண்டு.
II. காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களால் காற்று அழைக்கப்படுகிறது.
III. பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்பத் தென்றல்காற்று, பூங்காற்று, கடல்காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல்காற்று, கீழ்காற்று, மென்காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, பேய்க்காற்று, சுழல்காற்று, சூறாவளிக்காற்று எனப் பல்வேறு பெயர்களால் காற்று அழைக்கப்படுகிறது.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி        C) I, II, III அனைத்தும் சரி          D) I, II, III அனைத்தும் தவறு

5. தென்றலாகிய நான், பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், _____________ என்பவர் என்னை, “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என்று கூறுகிறார்.
A) இளங்கோவடிகள்        B) மாணிக்கவாசகர்        C) ஒளவையார்        D) கம்பர்

6. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) மணிமேகலை    B) சிலப்பதிகாரம்    C) கம்பராமாயணம்            D) கம்பர்

7. “பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது” என்னும் சிற்றிலக்கிய நூலின் ஆசிரியர் யார்?
A) பட்டினத்துப் பிள்ளையார்                B) காளமேகப் புலவர்    
C) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்            D) காரைக்கால் அம்மையார்

8.“நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) முகில்விடுதூது                    B) திருத்தணிகை மயில்விடு தூது
C) சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சுவிடு தூது    D) பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது

9. “நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே” எனப் பாடியவர்?
A) கண்ணதாசன்        B) வாலி        C) மருதகாசி              D) பட்டுக்கோட்டை

10.சரியாகப் பொருந்தியது எது?
I. கிழக்கு (குணக்கு) – கொண்டல்
II. மேற்கு (குடக்கு) – கோடை
III. வடக்கு – வாடை
IV. தெற்கு – தென்றல்
A) I, II, III மட்டும் சரி     B) I, II, III, IV அனைத்தும் சரி         C) III, IV மட்டும் சரி          D) IV மட்டும் சரி

11. முந்நீர் நாவாய் ஓட்டியாக காற்று (வளி): பழங்காலத்தில் கடல்கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றினால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால் தான் நிகழ்ந்தன. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – என்று பாடியவர் யார்?
A) அஞ்சில் அஞ்சியார்        B) ஒக்கூர் மாசாத்தியார்        C) வெண்ணிக் குயத்தியார்    D) வெள்ளி வீதியார்

12.“நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – என்ற பாடல்வரி _______________ அவர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்.
A) விசயாலய சோழன்         B) கண்டராதித்தர்        C) உத்தம சோழன்     D) கரிகால் பெருவளத்தான்

13. சரியானது எது? ஹிப்பாலஸ் பருவக்காற்று:
I. கி. பி. (பொ. ஆ) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்ய புதிய வழியைக் கண்டுபிடித்தார்.
II. அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன.
III. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர் (கிரேக்கரும் உரோமானியரும் யவனர் ஆவர்.) அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள்.
IV. ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.
A) I, II, III, IV அனைத்தும் சரி        B) I, II மட்டும் சரி        C) II, III மட்டும் சரி        D) III, IV மட்டும் சரி

14.சரியானது எது?
I. கிரேக்க அறிஞர் “ஹிப்பாலஸ்” (Hippalus) என்பவர் பருவக் காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார் என்பது வரலாறு.
II. அதற்கும் முன்னரே காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி            C) II மட்டும் தவறு    D) I, II இரண்டுமே சரி

15.காற்று, ______________ வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் ______________ வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் மழைப்பொழிவைத் தருகிறது.
A) ஜூன் முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் டிசம்பர்    B) அக்டோபர் முதல் டிசம்பர், ஜூன் முதல் செப்டம்பர்
C) மே முதல் டிசம்பர், ஜூன் முதல் செப்டம்பர்        D) அக்டோபர் முதல் டிசம்பர், ஆகஸ்டு முதல் செப்டம்பர்

16.இந்தியாவிற்குத் தேவையான ______________ விழுக்காடு மழையளவினைத் தென்மேற்கு பருவக்காற்று கொடுக்கிறது.
A) 35            B) 60            C) 70            D) 75

17.காற்றின் ஆற்றலை “வளி மிகின் வலி இல்லை” என்று ஐயூர் முடவனார் ___________ நூலில் கூறியுள்ளார்.
A) கலித்தொகை        B) நளவெண்பா        C) அகநானூறு        D) புறநானூறு

18.கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று காற்றின் வேகத்தைக் கூறும் புறநானூற்று பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) மதுரை இளநாகனார்    B) பூங்குன்றனார்    C) ஒளவையார்                     D) கம்பர்

19.காற்றின் ஆற்றல்: கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
I. உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கிறது. தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் உணவு உற்பத்திக்கு உதவுகிறது.
II. விதைகளைப் பல இடங்களுக்குப் பரப்புகிறது. உயிர்ச் சங்கிலித் தொடர் அறுபடாதிருக்க உதவுகிறது. நவீன தொலைத்தொடர்பின் மையமாக விளங்குகிறது.
III. காற்றாலை மூலம் மின்னாற்றலைப் பெற உதவுகிறது. புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளமான காற்றைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிமவளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி        C) I, II, III அனைத்தும் சரி         D) I, II, III அனைத்தும் தவறு

20.உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ______________ இடம் பெற்றுள்ளது. இந்தியாவில், தமிழகம் ______________ வகிக்கிறது.
A) இரண்டாமிடம், ஐந்தாமிடம்                B) மூன்றாமிடம், நான்காமிடம்    
C) முதலிடம், இரண்டாமிடம்                D) ஐந்தாம், முதலிடம்

21.உலகிலேயே அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் _____________ இடம் இந்தியாவுக்கு.
A) முதல்        B) இரண்டாம்        C) மூன்றாம்    D) நான்காம்

22. மனிதன் உணவின்றி _____________ வாரம் உயிர் வாழ முடியும். நீரின்றி ___________ நாள் உயிர் வாழ முடியும்.
A) ஐந்து, ஐந்து        B) நான்கு, நான்கு    C) மூன்று, மூன்று              D) இரண்டு, இரண்டு

23. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ____________ இடம் பெறுவது காற்று மாசுபாடு.
A) மூன்றாம்        B) நான்காம்        C) ஐந்தாம்        D) ஆறாம்

24.காற்று மாசுபடுவதால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ____________ தெரிவித்துள்ளது.
A) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
B) ஐக்கிய நாடுகளின் போதை மருந்துகள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம்
C) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
D) ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF)

25. கதிரவனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களை தடுக்கும் அரண் எது?
A) வானம்        B) ஓசோன்                  C) கோள்கள்             D) வானம்

26.புவியை ஒரு போர்வை போலச் சுற்றிக்கிடந்து பரிதியின் கதிர்ச்சூட்டைக் குறைத்துக் கொடுப்பது எது?
A) காற்று        B) ஓசோன்            C) கோள்கள்            D) வானம்

27. குளிர்ப்பதன பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்று எது?
A) குளோரோ அல்கேன்            B) குளோரோ புளோரோ கார்பன் (சி.எப்.சி)       C) அயடோ அல்கேன்    D) தொலுயீன்

28. காற்றே, வா எமது உயிர்-நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதிதாசன் (அழகின் சிரிப்பு)            B) பாரதியார் (பாரதியார் கவிதைகள்)
C) நாமக்கல் கவிஞர் (சங்கொலி)            D) வாணிதாசன் (கொடி முல்லை

29. “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா”, “சிந்துக்குத் தந்தை” – என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர் யார்?
A) திரு.வி.க        B) பாரதியார்        C) உ.வே.சாமிநாதர்    D) மனோன்மணியம்

30.கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?
எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர். கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சிச்திரம் – கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்;
A) திரு.வி.க        B) உ.வே.சாமிநாதர்    C) பாரதியார்        D) கே.கே.பிள்ளை

31. குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும், பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். – இவர் யார்?
A) மனோன்மணியம் சுந்தரனார்    B) நாமக்கல் கவிஞர்    C) பாரதிதாசன்        D) பாரதியார்

32.  பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர்?
A) கவிஞர் கண்ணதாசன்    B) பாரதியார்        C) பாரதிதாசன்          D) நாமக்கல் கவிஞர்

33. “திக்குகள் எட்டும் சிதறி – தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதியார்        B) பாரதிதாசன்        C) கண்ணதாசன்              D) நாமக்கல் கவிஞர்

34. மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைச் _________ படம்பிடித்துக் காட்டுகிறது.
A) சிறு கதைகள்    B) புதினங்கள்        C) காப்பியங்கள்                    D) சங்க இலக்கியம்

35. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
A) மதுரைக்காஞ்சி    B) நெடுநல்வாடை    C) குறிஞ்சிப்பாட்டு    D) முல்லைப்பாட்டு

36.முல்லைப்பாட்டு நூலின் ஆசிரியர் யார்?
A) பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்     B) இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
C) முடத்தாமக் கண்ணியார்            D) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

37. முல்லைப்பாட்டு _____________ அடிகளைக் கொண்டது?
A) 77            B) 17            C) 97            D) 103

38. புயலிலே ஒரு தோணி என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) சுஜாதா        B) ராஜம் கிருஷ்ணன்        C) ப.சிங்காரம்            D) பூமணி

39. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?
A) பிரதாப முதலியார் சரித்திரம்            B) புயலிலே ஒரு தோணி
C) திசை மாறிய தென்றல்                D) கரையைத் தேடும் கட்டுமரங்கள்

40. ‘கப்பித்தான்’- என்ற சொல்லின் பொருள்?
A) தலைமை மாலுமி         B) சிப்பாய்        C) கப்பல்        D) கயிறு

41. ‘தொங்கான்’ – என்ற சொல்லின் பொருள்?
A) தலைமை மாலுமி (கேப்டன்)    B) சிப்பாய்    C) கப்பல்         D) கயிறு

42. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை _____________ ஆம் ஆண்டில் தொடங்கியது.
A) 1985            B) 1990            C) 1995            D) 2000

43. _____________ இடத்தில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்ககைளப் பட்டியலிட்டுள்ளது.
A) புது தில்லி        B) கொச்சின்        C) சென்னை

44.புயலுக்குப் பெயர் சூட்டல் – சரியான கூற்று எது?
I. வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
II. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு. ‘கஜா’ புயலின் பெயர் இலங்கை தந்தது. அடுத்து வந்த ‘பெய்ட்டி’ புயல் பெயர் தாய்லாந்து தந்தது.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி        C) I, II அனைத்தும் தவறு       D) I, II அனைத்தும் சரி

45. வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்கள் _________ என அழைக்கப்படுகின்றன.
A) இடம்புரிப் புயல்கள்        B) வலம்புரிப் புயல்கள்      C) ஒருதிசைப் புயல்கள்        D) இவற்றில் ஏதுமில்லை

46. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் _________ என அழைக்கப்படுகின்றன.
A) இடம்புரிப் புயல்கள்        B) வலம்புரிப் புயல்கள்          C) ஒருதிசைப் புயல்கள்          D) இவற்றில் ஏதுமில்லை

47.பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த வலம்புரிப் புயல்கள், இடம்புரிப் புயல்கள் விளைவை __________ இல் கண்டுபிடித்தார். புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.
A) 1825            B) 1835            C) 1845            D) 1855

48. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. பறவை மீன், அவுலியா மீன் – மீன் வகை
II. பிலவான் – இந்தோனேசியாவிலுள்ள இடம்
III. கப்பித்தான் – தலைமை மாலுமி (கேப்டன்)
IV. தொங்கான் – கப்பல்
A) I, II மட்டும் சரி          B) II, III மட்டும் சரி          C) I, II, III, IV அனைத்தும் சரி            D) III, IV மட்டும் சரி

49. ‘தமிரோ’ என்பதற்கு ________ என்று பொருள்.
A) அமெரிக்கர்கள்        B) மலேசியர்கள்    C) ஜப்பானியர்கள்                   D) தமிழர்கள்

50. புயலிலே ஒரு தோணி – என்னும் புதினத்தின் ஆசிரியர் ப.சிங்காரம் அவர்களின் காலம்?
A) 1900 – 1977        B) 1910 – 1987        C) 1920 – 1997        D) 1930 – 2007

51. ப. சிங்காரம் அவர்களைப் பற்றிய சரியான கூற்று எது?
I. இவர் இந்தோனேசியாவில் இருந்தேபாது, தென்கிழக்காசியப் போர் மூண்டது.
II. அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு புயலிலே ஒரு தோணி என்னும் இப்புதினம்.
III. அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதியே கடல் காட்சி.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி        C) I, II, III அனைத்தும் சரி     D) III மட்டும் சரி

52. ப. சிங்காரம் ______________ மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்.
A) விருதுநகர்        B) சிவகங்கை        C) இராமநாதபுரம்        D) மதுரை

53.ப. சிங்காரம் அவர்கள் வேலைக்காக எந்த நாட்டிற்குச் சென்றார்?
A) இந்தோனேசியா        B) வியட்நாம்        C) மலேசியா        D) சிங்கப்பூர்

54.ப. சிங்காரம் அவர்கள் மீண்டும் இந்தியா வந்து _________ நாளிதழில் பணியாற்றினார்.
A) தி இந்து        B) தினமலர்        C) தினத்தந்தி            D) தினமணி

55. பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) புறநானூறு            B) கலித்தொகை    C) அகநானூறு         D) கலிங்கத்துப்பரணி