LATEST

Wednesday, March 6, 2024

March 06, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 19 Test - 10th std Tamil Unit 1

 

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 19 Test
 
 கேள்விகள் : 45                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
___________________________________________________________________

 10th - std (unit - 1)

1. “சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று கூறியவர் யார்?

A) இரசூல் கம்சதேவ்        B) பாரதிதாசன்        C) சச்சிதானந்தன்     D) ஆறுமுக நாவலர்

2. கீழ்க்கண்டவற்றுள் பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் எவை?

1. உலகியல் நூறு 2. பாவியக்கொத்து

3. நூறாசிரியம் 4. மகபுகுவஞ்சி

5. பள்ளிப் பறவைகள்

A) அனைத்தும் சரி         B) 2, 3, 5 சரி        C) 1, 3, 4 சரி            D) 1, 4, 5 சரி

3. பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது.

A) திருக்குறள் உரை                B) திருக்குறள் ஞான உரை

C) திருக்குறள் மெய்ப்பொருளுரை         D) திருக்குறள் மெய்யுரை

4. ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று கூறியவர் யார்?

A) பாரதியார்         B) பாரதிதாசன்        C) நாமக்கல் கவிஞர்        D) பேரறிஞர் அண்ணா

5. கீழ்க்கண்ட தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்களில் எது தவறானது?

A) தாள் – நெல், கேழ்வரகு                B) தண்டு – கீரை, வாழை

C) கோல் – நெட்டி, மிளகாய்ச் செடி            D) தூறு – மூங்கிலின் அடி

6. கீழ்க்கண்ட காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்களில் எது தவறானது?

A) கட்டை – காய்ந்த கொம்பும் கவையும் அடியும்        B) சுள்ளி – காய்ந்த குச்சி

C) விறகு – காய்ந்த கிளை                    D) வெங்கழி – காய்ந்த கழி

7. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.

1. சண்டு – காய்ந்த இலை

2. சருகு – காய்ந்த தாளும் தோகையும்

A) இரண்டும்         B) 1 மட்டும்        C) 2 மட்டும்        D) எதுவுமில்லை

8. இரா. இளங்குமரனார் குறித்த கூற்றுகளில் எது தவறானது?

A) பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்

B) தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்

C) தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர்

D) இசையாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்

9. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்து விடக் கூடாது என்று எண்ணியவர் யார்?

A) திரு.வி.க        B) இரா. இளங்குமரனார்        C) இளங்குமணன்    D) மீனாட்சி சுந்தரனார்

10. தமிழ்த்தென்றல் திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர் யார்?

A) அண்ணா        B) இரா.இளங்குமரனார்        C) இளங்குமணன்    D) மீனாட்சி சுந்தரனார்

11. கீழ்க்கண்ட தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்களில் சரியானது எது / எவை?

1. மூசு – பலாப்பிஞ்சு

2. குரும்பை – முற்றாத தேங்காய்

3. முட்டுக்குரும்பை – சிறு குரும்பை

4. இளநீர் – தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு

A) அனைத்தும் சரி        B) 1, 3 சரி        C) 2, 4 சரி        D) 1, 2, 3 சரி

12. தாவரங்களின் குலை வகைகளைக் குறிக்கும் சொற்களில் எது தவறானது?

A) கொத்து – அவரை, துவரை முதலியவற்றின் குலை        B) குலை – வாழைக்குலை

C) கதிர் – கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்        D) சீப்பு – வாழைத்தாற்றின் பகுதி

13. பொருத்துக

1. சூம்பல் – i) நுனியில் சுருங்கிய காய்

2. சிவியல் – ii) சுருங்கிய பழம்

3. சொத்தை – iii) புழு பூச்சி அரித்த காய் அல்லது கனி

4. வெம்பல் – iv) சூட்டினால் பழுத்த பிஞ்சு

A) iv iii ii I        B) i ii iii iv        C) ii i iv iii        D) iv ii i iii

14. பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்களில் எது சரி?

A) மட்டை – மிக மெல்லியது

B) தொலி – தேங்காய் நெற்றின் மேற்பகுதி

C) கொம்மை – வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி

D) தோடு – நெல், கம்பு முதலியவற்றின் மூடி

15. தானியங்களுக்கு வழங்கும் சொற்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு?

A) முத்து – வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து

B) தேங்காய் – தென்னையின் வித்து

C) கொட்டை – புளி, காஞ்சிரை முதலியவற்றின் வித்து

D) முதிரை – அவரை, துவரை முதலிய பயறுகள்

16. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. குட்டி – விளாவின் இளநிலை

2. மடலி – பனையின் இளநிலை

3. வடலி – பனையின் இளநிலை

4. பைங்கூழ் – நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்

A) அனைத்தும் சரி         B) 1, 2, 4 சரி        C) 1, 3, 4 சரி        D) 2, 3 சரி

17. கீழ்வருனவற்றுள் நெல்லின் வகைகளில் அல்லாதது எது?

1. சம்பா         

2. மட்டை         

3. கார்

4. கார்நெல்             

5. வெண்ணெல்        

6. செந்நெல்

A) அனைத்தும் சரி         B) 2, 3 தவறு        C) 2, 4 தவறு        D) 2, 3, 5 தவறு

18. “உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே ” என்று கூறியவர் யார்?

A) இராமலிங்கனார்        B) அய்யாத்துரையார்        C) அப்பாத்துரையார்            D) துரை மாணிக்கம்

19. பாவாணர் ____ கட்டுரையில் வித்துவகை, வேர் வகை, அரித்தாள்வகை, காய்ந்த இலைவகை போன்ற பல்வேறு பொருட்களின் வகைகளை பற்றி கூறியுள்ளார்.

A) தமிழ்வளம்        B) தமிழ்ச்சொல்    C) தமிழ்ச்சொல்வளம்         D) சொல்வளம்

20. பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி தமிழ் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்?

A) பரிதிமாற் கலைஞர்        B) தேவநேயப் பாவாணர்    C) அறிஞர் அண்ணா        D) பெரியார்

21. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் தமிழ் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் ______வரி வடிவில் அச்சிடப்பட்டுள்ளது.

A) ஆங்கிலம்        B) எகிப்தியம்        C) ரோமன்         D) கிரேக்கம்

22. கீழ்வருவனவற்றுள் ‘சொல்லுதல்’ எனும் பொருள் தரும் சொற்கள் எவை?

1. விளம்புதல்     

2. செப்புதல்     

3. உரைத்தல்        

4. கூறல்         

5. இயம்பல்

A) அனைத்தும் சரி         B) 3, 4, 5 சரி        C) 2, 4, 5 சரி        D) 1, 3, 4 சரி

23. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்”

– அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

1. விளம்புதல்        2. கற்பது         3. தருதல்        4. வாங்குவது

A) 1, 2        B) 2, 3         C) 3, 4            D) 1, 4

24. ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது _____அணி எனப்படும்.

A) பிறிது மொழிதல் அணி    B) உவமை அணி    C) எடுத்துக்காட்டுவமையணி        D) சிலேடை அணி

25. சந்தக் கவிமணி தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?

A) 11        B) 12             C) 13                D) 14

26. “காலையிலேயே மாலையும் வந்து விட்டதே” என்று கூறியவர் யார்?

A) கி.வா. ஜகந்நாதன்         B) இசை விமர்சகர் சுப்புடு        C) கி.ஆ.பெ. விசுவநாதன்

27. “திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்” என்று உவமையை பயன்படுத்தியவர் யார்?

A) ஈரோடு தமிழன்பன்        B) கல்கி        C) நா. பார்த்தசாரதி     D) சுரதா

28. ‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்’ என்று உருவகத்தை பற்றி எழுதியவர் யார்?

A) குன்னூர்க் கிழார்        B) தொல்காப்பியர்        C) தண்டி         D) நக்கீரர்

29. “களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைத்தான் அதற்குச் சான்று” என்பது யாருடைய உரைநடை

A) பெரியார்        B) அண்ணா        C) திரு.வி.க        D) மீனாட்சி சுந்தரனார்

30. “புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும் ”

இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி

A) உவமையணி                B) உருவக அணி        

C) எடுத்துக்காட்டுவமை அணி         D) பிறிது மொழிதல் அணி

31. “மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்று முற்றும் பார்ப்பேன்; மனம் அமைதி எய்தும் ” என்று எழுதியவர் யார்?

A) நா. பார்த்தசாரதி        B) தண்டி            C) வ.ராமசாமி        D) திரு.வி.க

32. “நாட்டுப்பற்று” என்னும் கட்டுரைத் தொகுப்பு யாருடையது?

A) மு.வ         B) ரா.பி.சேதுப்பிள்ளை        C) வ.ராமசாமி        D) திரு.வி.க

33. “இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?” என்பது கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டு

A) இணை ஒப்பு        B) இலக்கணை        C) ஒப்பு எல்லை    D) முரண்படு மெய்ம்மை

34. சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து எழுதுவது ______ எனப்படும்.

A) எதிரிணை இசைவு         B) இலக்கணை        C) சொல்முரண்        D) முரண்படு மெய்ம்மை

35. மா. இராமலிங்கம் (எ) எழில் முதல்வன் எந்த நூலுக்காக சாகித்திய அகாடெமி பரிசு பெற்றார்

A) இனிக்கும் நினைவுகள்            B) எங்கெங்கு காணினும்

C) யாதுமாகி நின்றாய்                D) புதிய உரைநடை

36. ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்ற இலக்கியத் தொடரில் அமைந்துள்ள நயம்

A) உவமை        B) உருவகம்        C) மோனை        D) எதுகை

37. அளபெடுத்தல் என்பதன் பொருள் _____

A) நீண்டு ஒலித்தல்         B) குறுகி ஒலித்தல்        C) வாய்ப்பாடு        D) அசை

38. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளிப்படுத்தல் _______ அளபெடை என்பர்

A) செய்யுளிசை அளபெடை             B) இன்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை            D) ஒற்றளபெடை

39. இசை நிறை அளபெடை என அழைக்கப்படும் அளபெடை எது?

A) செய்யுளிசை அளபெடை             B) இன்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை            D) ஒற்றளபெடை

40. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகள் மற்றும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது _____ அளபெடை.

A) செய்யுளிசை அளபெடை            B) இன்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை            D) ஒற்றளபெடை

41. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது _____ ஆகும்

A) தனி மொழி        B) தொடர் மொழி    C) பொது மொழி         D) எழுத்து மொழி

42. ‘வாழ்க்கை’ என்ற தொழிற் பெயரின் வினையடி மற்றும் விகுதி

A) வாழ்வு, கை        B) வாழ்வு, ஐ        C) வாழ், கை         D) வாழ், ஐ

43. வினையாலணையும் பெயர் குறித்த கூற்றுகளில் தவறானது எது?

A) தொழிலை செய்யும் கருத்தாவைக் குறிக்கும்            B) காலம் காட்டாது

C) மூவிடத்திற்கும் உரியது                    D) எ. கா.: பாடியவள், படித்தவர்

44. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

A) எந் + தமிழ் + நா            B) எந்த + தமிழ் + நா    

C) எம் + தமிழ் + நா             D) எந்தம் + தமிழ் + நா

45. பொருத்துக

1. Vowel – i) மெய்யெழுத்து

2. Consonant – ii) உயிரெழுத்து

3. Homograph – iii) ஒரு மொழி

4. Monolingual – iv) ஒப்பெழுத்து

A) i ii iii iv        B) i iii ii iv        C) i ii iv iii        D) ii i iv iii


Tuesday, March 5, 2024

March 05, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 18 Test - 9th std Tamil Unit 9

 

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 18 Test
 
 கேள்விகள் : 50                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
___________________________________________________________________

9th - std (unit - 9)


1. “பூட்கையில்லோன் யாக்கை போல” என்று கூறியவர் யார்?

அ) கணிமேதாவியார்    ஆ) ஆலத்தூர் கிழார்         இ) திருவள்ளுவர்        ஈ) ஒளவையார்


2. பண்டைக்கால தருமசாத்திர நூல்களில் ____ மலைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு கருமபூமியாக கருதப்பட்டது.

அ) பஃருளி மலை                ஆ) விந்திய, சாத்பூரா       

இ) சாத்பூரா, இமயமலை            ஈ) விந்தியமலை, இமயமலை


3. “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என்று திருக்குறளை பற்றிக் கூறியவர் யார்?

அ) கோர்டன்        ஆ) தெறன்ஸ்        இ) ஆல்பர்ட் சுவைட்சர்


4. “படுதிரை வையம் பாத்திய பண்பே” என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அ) நன்னூல்    ஆ) தொல்காப்பியம்        இ) திருக்குறள்        ஈ) சிலப்பதிகாரம்


5. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்

அறவிலை வணிகன் ஆய் அலன்”

இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?

அ) அகநானூறு        ஆ) புறநானூறு        இ) தொல்காப்பியம்        ஈ) திருக்குறள்


6. “இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்

தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே”

இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?

அ) அகநானூறு        ஆ) புறநானூறு        இ) தொல்காப்பியம்        ஈ) திருக்குறள்


7. திருக்குறளில் கூறப்படும் ‘பூட்கைமகன்’ என்பதன் பொருள் யாது?

அ) செல்வமகன்                ஆ) தொழில்புரியும் மாந்தன்

இ) குறிக்கோள் மாந்தன்             ஈ) விவசாயம் செய்பவர்


8. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. ஸ்டாயிக்வாதிகளின்படி அவர்களுடைய இலட்சிய மனிதர்கள் பலர்.

2. அவர்கள் தனிமையாகத் தம் இல்லங்களில் வாழ்ந்து வருவர்.

3. திருக்குறளின் சான்றோர் சிலர்.

4. அவர்களின் இயல்புகள் எல்லாம் பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நட்பு முதலான அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

அ) அனைத்தும் சரி        ஆ) 1, 2, 3 சரி        இ) 2, 3, 4 சரி        ஈ) 2, 4 சரி


9. பின்வருவனவற்றுள் ஸ்டாயிக்வாதிகள் கற்பித்தவை எவை?

1. உலகில் ஒற்றுமை உண்டு

2. மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர்

3. எல்லா உயிர்களும் தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளன

அ) அனைத்தும் சரி         ஆ) 1, 2 சரி        இ) 2, 3 சரி        ஈ) 1, 3 சரி


10. “நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்” என்று கூறியவர் யார்?

அ) மார்க்ஸ் அரேலியஸ்     ஆ) தெறன்ஸ்        இ) ஆல்பர்ட் சுவைட்சர்          ஈ) செனக்கா


11. தனிநாயகம் அடிகள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?

1. தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.

2. அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.

3. தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுக்கத் தமிழின் புகழைப் பரப்பினார்.

அ) அனைத்தும் சரி         ஆ) 1, 2 சரி        இ) 2, 3 சரி        ஈ) 1, 3 சரி


12. உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது சரியானது?

அ) 1960 – பாரீசு        ஆ) 1974 – மதுரை        இ) 1981 – யாழ்பாணம்           ஈ) 1987 – கோலாலம்பூர்


13. உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் ____ வழியாகத் தொடங்கினார்.

அ) உரைநடைக் கவிதை    ஆ) பத்திரிக்கைகள்        இ) வசனக் கவிதை        ஈ) செய்யுள்கள்


14. “சைக்கிளில் வந்த

தக்காளிக் கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்”

என்ற வரிகளை இயற்றியவர் யார்?

அ) அமுதோன்        ஆ) நா. முத்துக்குமார்        இ) கவிஞர் பாஷோ        ஈ) கல்யாண்ஜி


15. இலக்கணக் குறிப்புத் தருக – அனைவரும்

அ) எண்ணும்மை        ஆ) உம்மைத் தொகை        இ) பண்புத்தொகை        ஈ) முற்றும்மை


16. கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?

அ) கல்யாணபெருமாள்            ஆ) கல்யாணசுந்தரம்   

இ) கல்யாண்                ஈ) கல்யாணராமன்


17. கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்கள் எழுதிய பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ____ என்ற பெயரில் வெளியானது.

அ) சில இறகுகள் சில பறவைகள்         ஆ) கலைக்க முடியாத ஒப்பனைகள்

இ) அகமும் புறமும்                ஈ) உயரப் பறத்தல்


18. கல்யாண்ஜி அவர்கள் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றார்?

அ) 2015        ஆ) 2016         இ) 2017        ஈ) 2018


19. “வெட்டுக்கிளியின் சப்தத்தில்

மலையின் மெளனம்

ஒரு கணம் அசைந்து திரும்புகிறது”

என்ற வரிகளை இயற்றியவர் யார்?

அ) அமுதோன்        ஆ) நா. முத்துக்குமார்        இ) கவிஞர் பாஷோ        ஈ) கல்யாண்ஜி


20. குறுந்தொகை____ என்னும் அடைமொழிக் கொண்டு அழைக்கப்படுகிறது.

அ) ஓங்கு        ஆ) நல்        இ) நல்ல        ஈ) நன்மை


21. “நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின – தோழி அவர் சென்ற ஆறே”

இப்பாடலை இயற்றியவர் யார்?

அ) குறிஞ்சி கபிலர்    ஆ) ஓதலாந்தையார்    இ) பாலை பாடிய பெருங்கடுங்கோ         ஈ) ஓரம்போகியார்


22. சரியான பொருளைத் தேர்ந்தெடு

பிடி, வேழம்

அ) ஆண் யானை, பெண் யானை        ஆ) பெண் யானை, ஆண் யானை

இ) ஆண் குரங்கு, பெண் குரங்கு        ஈ) பெண் குரங்கு, ஆண் குரங்கு


23.இலக்கணக் குறிப்புத் தருக – களைஇய

அ) இன்னிசை அளபெடை            ஆ) செய்யுளிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை             ஈ) வினையெச்சம்


24. இலக்கணக் குறிப்புத் தருக – அன்பின

அ) ஒன்றன்பால் வினைமுற்று                ஆ) பலவின்பால் உயர்திணை வினைமுற்று

இ) பலவின்பால் அஃறிணை வினைமுற்று         ஈ) தன்மை பன்மை வினைமுற்று


25. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – உடையர்

அ) உடை + யர்        ஆ) உடை + ய் + ஆர்        இ) உடை + ய் + அர்         ஈ) உடைய + அர்


26. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்கள் உள்ளன?

அ) 400        ஆ) 401        இ) 402        ஈ) 403


27. சு. சமுத்திரம் அவர்கள் _____க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

அ) 200        ஆ) 300         இ) 400        ஈ) 350


28. கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் எது?

அ) வாடாமல்லி    ஆ) குற்றம் பார்க்கில்        இ) மண்சுமை        ஈ) வேரில் பழுத்த பலா


29. “இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”

என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி?

அ) உருவக அணி    ஆ) உவமை அணி     இ) எடுத்துக்காட்டுவமையணி        ஈ) பின்வருநிலையணி


30. பின்வருநிலை அணி எத்தனை வகைப்படும்?

அ) 2            ஆ) 3             இ) 4            ஈ) 5


31. புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் _____ அணி ஆகும்.

அ) எடுத்துக்காட்டுவமையணி        ஆ) உவமையணி    இ) உருவக அணி    ஈ) வஞ்சப்புகழ்ச்சியணி


32. கீழ்காணும் குறட்பாவில் அமைந்த அணி வகையை கண்டறி.

“ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்”

அ) எடுத்துக்காட்டுவமையணி                ஆ) உவமையணி   

இ) ஏகதேச உருவக அணி                 ஈ) வஞ்சப்புகழ்ச்சியணி


33. ‘யா’ மரத்தின் பட்டையை உரித்தது எது?

அ) ஆண் யானை         ஆ) பெண் யானை        இ) தலைவன்        ஈ) தோழி


34. ஐந்தாம் வேதம் என அழைக்கப்படும் நூல் எது?

அ) இராமாயணம்        ஆ) மகாபாரதம்        இ) சிலப்பதிகாரம்    ஈ) நன்னூல்


35. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. நளவெண்பா – கம்பன்

2. கலிங்கத்துப்பரணி – சயங்கொண்டார்

3. விருத்தம் என்னும் ஒண்பா – புகழேந்திப் புலவர்

அ) அனைத்தும் சரி        ஆ) 1, 3 சரி        இ) 2 மட்டும் சரி        ஈ) 1, 2 சரி


36. பொருத்துக

1. குரிசில் – i) அச்சு

2. நயம் – ii) மேன்மை

3. இருசு – iii) தலைவன்

4. தலையளி – iv) செலுத்துதல்

5. உய்த்தல் – v) கருணை

அ) i ii iii iv v        ஆ) iii i ii iv v        இ) v iv iii ii i        ஈ) iii ii i v iv


37. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. சிற்பியின் மகள் – பூவண்ணன்

2. அப்பா சிறுவனாக இருந்த போது – அலெக்சாந்தர் ரஸ்கின்.

அ) அனைத்தும் சரி     ஆ) 1 மட்டும் சரி            இ) 2 மட்டும் சரி        ஈ) இரண்டும் தவறு


38. செய்யுளில் முன்வந்த பொருளே பின்னர்ப் பல இடங்களிலும் வருவது _____ அணியாகும்.

அ) சொற்பின்வருநிலையணி                ஆ) பொருள்பின்வருநிலையணி

இ) சொற்பொருள்பின்வருநிலையணி            ஈ) எடுத்துக்காட்டுவமையணி


39. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருதலே ____ அணியாகும்.

அ) உருவக அணி    ஆ) உவமை அணி    இ) எடுத்துக்காட்டுவமையணி        ஈ) பின்வருநிலையணி


40. உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது ____அணி ஆகும்.

அ) உருவக அணி     ஆ) உவமை அணி    இ) எடுத்துக்காட்டுவமையணி        ஈ) பின்வருநிலையணி


41. “மலர்ப்பாதம்” இத்தொடர் குறித்த செய்திகளில் எது தவறானது?

1. இத்தொடரில் மலருக்கு பாதம் உவமையாக கூறப்படுகிறது.

2. பாதம் – உவமேயம்

3. மலர் – உவமை

4. போன்ற – உவமஉருபு

அ) அனைத்தும் சரி        ஆ) 1, 4 சரி        இ) 2, 4 சரி        ஈ) 2, 3, 4 சரி


42. பெருங்கடுங்கோ என்பவர் _____ நூலில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப்படுகிறார்.

அ) நற்றிணை        ஆ) குறுந்தொகை        இ) ஐங்குறுநூறு        ஈ) கலித்தொகை


43. குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?

அ) உ. வே. சா        ஆ) ஞானப்பிரகாசம்    இ) செளரிப் பெருமாள் அரங்கனார்     ஈ) ஆறுமுக நாவலர்


44. குறுந்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை                 ஆ) பத்துப் பாட்டு   

இ) ஐம்பெருங்காப்பியம்            ஈ) ஐஞ்சிறுங்காப்பியம்


45. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பொளிக்கும்

அ) பொளி + க் + கும்                ஆ) பொளி + க் + உம்

இ) பொளி + க் + க் + கும்            ஈ) பொளி + க் + க் + உம்


46. கல்யாணசுந்தரம் அவர்கள் _____ என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருகிறார்.

அ) வாணிதாசன்        ஆ) கல்யாண்ஜி        இ) வண்ணதாசன்     ஈ) கல்யாண்


47. கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?

அ) கல்யாணபெருமாள்        ஆ) கல்யாணசுந்தரம்   

இ) கல்யாண்                ஈ) கல்யாணராமன்


48. புதுக்கவிதைகள் ______ஐ வலியுறுத்துவனவாக இருக்கின்றன.

அ) ஈகை        ஆ) கருணை        இ) மனிதநேயம்         ஈ) ஆளுமை


49. 2010ல் செம்மொழி மாநாடு எங்கு நடைபெற்றது?

அ) சென்னை        ஆ) மதுரை        இ) தஞ்சாவூர்        ஈ) கோவை


50. உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது சரியானது?

அ) 1960 – பாரீசு        ஆ) 1974 – மதுரை        இ) 1981 – யாழ்பாணம்        ஈ) 1987 – கோலாலம்பூர்




March 05, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 17 Test - 9th std Tamil Unit 8

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 17 Test
 
 கேள்விகள் : 55                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்

 ___________________________________________________________________

 9th-std (unit - 8)


1. 20ம் நூற்றாண்டில் ஈரோட்டில் தோன்றிப் பகுத்தறிவு, தன்மதிப்பு (சுயமரியாதை) ஆகிய கண்களை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர் யார்?

அ) காமராஜர்        ஆ) பெரியார்             இ) அண்ணா        ஈ) எம். ஜி. ஆர்


2. கீழ்க்கண்டவற்றுள் பெரியாரை குறிக்கும் பெயர்கள் எவை?

1. வெண்தாடி வேந்தர்                     

2. பகுத்தறிவுப் பகலவன்    

3. வைக்கம் வீரர்                    

4. ஈரோட்டுச் சிங்கம்

அ) அனைத்தும்        ஆ) 1, 3, 4        இ) 1, 4            ஈ) 3, 4


3. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே ____ ஆகும்.

அ) பகுத்தறிவு         ஆ) மூடப்பழக்க வழக்கம்        இ) சிந்தனை        ஈ) செயல்


4. “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் “ என்று கூறியவர் யார்?

அ) அம்பேத்கர்    ஆ) பெரியார்             இ) பாரதியார்          ஈ) வள்ளலார்


5.சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை. அதனால், வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகிறது. அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தியவர் யார்?

அ) அம்பேத்கர்        ஆ) பெரியார்         இ) பாரதியார்         ஈ) வள்ளலார்


6. ‘மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா?’ என்று பகுத்தறிவு வினாக்களை எழுப்பியவர் யார்?

அ) அம்பேத்கர்        ஆ) பெரியார்         இ) பாரதியார்        ஈ) வள்ளலார்


7. சமூக வளர்ச்சிக்கு ____ஐ மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.

அ) செல்வம்        ஆ) தொழில்            இ) உரிமை        ஈ) கல்வி


8. கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என்று கூறியவர் யார்?

அ) அம்பேத்கர்        ஆ) பெரியார்          இ) பாரதியார்         ஈ) வள்ளலார்


9. “அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாது. சுய சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்” என்று கூறியவர் யார்?

அ) அம்பேத்கர்    ஆ) பெரியார்         இ) பாரதியார்            ஈ) அண்ணா


10. ‘பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும்’ என்று நம்பியவர் யார்?

அ) அம்பேத்கர்    ஆ) பெரியார்         இ) பாரதியார்             ஈ) அண்ணா


11. மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்று கூறியவர் யார்?

அ) அண்ணா        ஆ) பெரியார்         இ) பாரதியார்        ஈ) வள்ளலார்


12.பெரியாரின் மொழி சீரமைப்புகளை தமிழக அரசு எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது?

அ) 1987            ஆ) 1986        இ) 1968            ஈ) 1978


13. பெண்களுக்கு வேலைவாய்ப்பில் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என பெரியார் கூறினார்?

அ) 33            ஆ) 40                இ) 50             ஈ) 43


14. கீழ்க்கண்டவற்றுள் பெண்களின் முன்னேற்றம் குறித்த பெரியாரின் கூற்றுகள் எவை?

1. இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது.

2. கைம்பெண்களுக்கு மறுமணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

3. குடும்பத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.

4. குடும்பச் சொத்தில் ஆண்களுக்கு சமமான உரிமையைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.

அ) அனைத்தும் சரி        ஆ) 2, 3            இ) 3, 4            ஈ) 1, 3, 4


15.கீழ்க்கண்டவற்றுள் பெரியார் விதைத்த விதைகள் எவை?

1. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு. 2. பெண்களுக்கான இடஒதுக்கீடு

3. பெண்களுக்கான சொத்துரிமை             4. குடும்ப நலத்திட்டம்

5. சீர்திருத்த திருமணச் சட்டம் ஏற்பு

அ) அனைத்தும் சரி         ஆ) 1, 4        இ) 1, 3, 5        ஈ) 2, 3, 5


16. எங்கு நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ. வெ. ரா. வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?

அ) மதுரை        ஆ) கோவை           இ) கேரளா            ஈ) சென்னை


17.ஈ. வெ. ரா. வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் _____.

அ) 1937 நவம்பர் 13        ஆ) 1970 அக்டோபர் 5        இ) 1938 நவம்பர் 13     ஈ) 1970 ஜூன் 27


18. ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கி சிறப்பித்த நாள்

அ) 1937 நவம்பர் 13        ஆ) 1970 அக்டோபர் 5        இ) 1938 நவம்பர் 13          ஈ) 1970 ஜூன் 27


19. பெரியாரின் சிந்தனைகள் குறித்த அறிஞரின் மதிப்பீடுகளில் எது சரியனது?

1. பெரியாரின் சிந்தனைகள் அறிவுலகின் திறவுகோல்

2. பகுத்தறிவுப் பாதைக்கு வழிகாட்டி

3. மனித நேயத்தின் அழைப்புமணி

4. ஆதிக்கசக்திகளுக்கு எச்சரிக்கை ஒலி

5. சமூக சீர்கேடுகளைக் களைவதற்கு மாமருந்து

அ) அனைத்தும் சரி         ஆ) 1, 2, 4 சரி        இ) 3, 4, 5 சரி            ஈ) 1, 3, 4 சரி


20. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த ஆண்டு ____.

அ) 1921            ஆ) 1923                இ) 1925             ஈ) 1927


21. கீழ்க்கண்டவற்றுள் பெரியார் நடத்திய இதழ்கள் எவை?

1. குடியரசு    2. விடுதலை            3. உண்மை            4. ரிவோல்ட்

அ) அனைத்தும் சரி         ஆ) 1, 2, 3 சரி        இ) 2, 3 சரி        ஈ) 1, 2 சரி


22. “ முண்டி மோதும் துணிவே இன்பம்

உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி ”

– இவ்வரிகளை இயற்றியவர் யார்?

அ) நா. முத்துக்குமார்         ஆ) ந. பிச்சமூர்த்தி         இ) ஈரோடு தமிழன்பன்        ஈ) தாராபாரதி


23. ‘பெருமரத்துடன் போட்டியிடுகிறது’ என்று ந. பிச்சமூர்த்தி அவர்கள் குறிப்பிடும் மரம் எது?

அ) கமுகு         ஆ) தென்னை            இ) பனை        ஈ) மூங்கில்


24. இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்” என்று கூறியவர் யார்?

அ) வைரமுத்து        ஆ) கல்கி        இ) வல்லிக்கண்ணன்         ஈ) நா. முத்துக்குமார்


25. “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) வைரமுத்து        ஆ) கல்கி        இ) வல்லிக்கண்ணன்                ஈ) நா. முத்துக்குமார்


26. புதிய படைப்புச் சூழலில் மரபுக் கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் ____ எனப்பட்டன.

அ) ஹைக்கூ       ஆ) வசனக்கவிதைகள்    இ) சிறுகதைகள்     ஈ) புதுக்கவிதைகள்


27. யாரின் வசனக் கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில்

ந. பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.

அ) பாரதியார்         ஆ) பாரதிதாசன்    இ) வல்லிக்கண்ணன்            ஈ) சுரதா


28. “புதுக்கவிதையின் தந்தை” எனப் போற்றப்படுபவர் யார்?

அ) பாரதியார்        ஆ) பாரதிதாசன்    இ) வல்லிக்கண்ணன்        ஈ) ந. பிச்சமூர்த்தி


29. ந. பிச்சமூர்த்தி அவர்கள் கீழ்க்கண்ட எந்த துறைகளில் பணியாற்றினார்?

1. வழக்குறைஞர்    

2. ஆசிரியர்        

3. உயர்நீதிமன்ற நீதிபதி

4. இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலர்

அ) 1, 2            ஆ) 1, 3                இ) 1, 2, 3        ஈ) 1, 4


30.கீழ்க்கண்டவற்றுள் ந. பிச்சமூர்த்தி அவர்கள் துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை?

1. இந்தியா    

2. நவசக்தி            

3. நவஇந்தியா            

4. ஹனுமான்

அ) 1, 4            ஆ) 1, 3            இ) 2, 4            ஈ) 3, 4


31. “ஒரு பக்கம் இருத்தலின் பலன் கிடைக்கிறது;

இன்னொரு பக்கம் இருத்தலின்மையைப் பயன்படுத்திக்கொள்கிறோம்”

என்ற வரிகளை இயற்றியவர் யார்?

அ) ஜென்        ஆ) லாவோட்சு             இ) தாவோ           ஈ) கன்பூசியஸ்


32.பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – இணைகின்றன

அ) இணை + கின்று + அ            ஆ) இணை + கிறு + அன் + அ

இ) இணை + கின்று + அன் + அ            ஈ) இணை + கிறு + அ


33. இலக்கணக் குறிப்புத் தருக – பாண்டம் பாண்டமாக

அ) எண்ணும்மை    ஆ) உம்மைத்தொகை        இ) இரட்டைக்கிளவி          ஈ) அடுக்குத் தொடர்


34. இலக்கணக் குறிப்புத் தருக – வாயிலும் சன்னலும்

அ) எண்ணும்மை         ஆ) உம்மைத்தொகை     இ) பண்புத்தொகை        ஈ) அடுக்குத் தொடர்


35. “நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே ”

இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

அ) சிலப்பதிகாரம்        ஆ) மணிமேகலை    இ) ஏலாதி         ஈ) யசோதர காவியம்


36. “நசை பெரிது உடையர்”

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) வழங்குதல்        ஆ) தொந்தரவு           இ) கடுஞ்சொல்        ஈ) விருப்பம்


37. சரியான பொருளைத் தேர்ந்தெடு

நல்கல், பொளிக்கும்

அ) விருப்பம், அளிக்கும்                ஆ) அன்பு, அளிக்கும்  

இ) வழங்குதல், உரிக்கும்                 ஈ) அன்பு, உரிக்கும்


38. சரியான பொருளைத் தேர்ந்தெடு--பிடி, வேழம்

அ) ஆண் யானை, பெண் யானை         ஆ) பெண் யானை, ஆண் யானை

இ) ஆண் குரங்கு, பெண் குரங்கு            ஈ) பெண் குரங்கு, ஆண் குரங்கு


39. “மென்சினை யாஅம் பொளிக்கும்”

இதில் ‘யா’ என்பதன் பொருள்

அ) ஒரு வகை யானை           ஆ ) ஒரு வகை மரம்       இ) ஒரு வகை குரங்கு          ஈ) ஒரு வகை மலர்


40. இலக்கணக் குறிப்புத் தருக – களைஇய

அ) இன்னிசை அளபெடை                ஆ) செய்யுளிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை                 ஈ) வினையெச்சம்


41. இலக்கணக் குறிப்புத் தருக – பெருங்கை, மென்சினை

அ) வினைத்தொகை                ஆ) பண்புத்தொகை

இ) உவமைத்தொகை                ஈ) உம்மைத்தொகை


42.  குறுந்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை                 ஆ) பத்துப் பாட்டு    

இ) ஐம்பெருங்காப்பியம்            ஈ) ஐஞ்சிறுங்காப்பியம்


43.குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்கள் உள்ளன?

அ) 400            ஆ) 401                இ) 402                ஈ) 403


44.குறுந்தொகையில் உள்ள பாடல்களின் அடி எல்லை எவ்வளவு?

அ) 9-12 அடி        ஆ) 4-8 அடி         இ) 3-6 அடி        ஈ) 4-12 அடி


45.குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?

அ) உ. வே. சா                        ஆ) ஞானப்பிரகாசம்

இ) செளரிப் பெருமாள் அரங்கனார்             ஈ) ஆறுமுக நாவலர்


46.பாலை பாடிய பெருங்கடுங்கோ கீழ்க்கண்ட எந்த மரபைச் சேர்ந்தவர்?

அ) சேர மரபு         ஆ) சோழ மரபு    இ) பாண்டிய மரபு        ஈ) பல்லவர் மரபு


47.பெருங்கடுங்கோ என்பவர் _____ நூலில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப்படுகிறார்.

அ) நற்றிணை        ஆ) குறுந்தொகை        இ) ஐங்குறுநூறு    ஈ) கலித்தொகை


48. “நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம். . . . ”

என்பது குறுந்தொகையில் எத்தனையாவது பாடல்?

அ) 27            ஆ) 28            இ) 37             ஈ) 38


49.சு. சமுத்திரம் அவர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

அ) இராமநாதபுரம்-திப்பணம்பட்டி                ஆ) தூத்துக்குடி- திப்பணம்பட்டி

இ) திருநெல்வேலி – திப்பணம்பட்டி                 ஈ) விருதுநகர் – திப்பணம்பட்டி


50. சு. சமுத்திரம் அவர்கள் _____க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

அ) 200            ஆ) 300                 இ) 400                ஈ) 350


51. கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள் எவை?

1. வாடாமல்லி    

2. பாலைப் புறா    

3. மண்சுமை   

4. தலைப்பாகை    

5. காகித உறவு

அ) அனைத்தும் சரி            ஆ) 1, 2, 5 சரி         இ) 2, 3, 5 சரி          ஈ) 2, 3, 4 சரி


52. கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற

நாவல் எது?

அ) வாடாமல்லி    ஆ) குற்றம் பார்க்கில்        இ) மண்சுமை          ஈ) வேரில் பழுத்த பலா


53. கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் அவர்களின் தமிழக அரசின் பரிசை பெற்ற சிறுகதைத் தொகுதி எது?

அ) வாடாமல்லி    ஆ) குற்றம் பார்க்கில்         இ) மண்சுமை       ஈ) வேரில் பழுத்த பலா


54.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும்.

2. சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது ‘அணி’ இலக்கண இயல்பாகும்.

அ) அனைத்தும் சரி         ஆ) 1 மட்டும் சரி    இ) 2 மட்டும் சரி             ஈ) இரண்டும் தவறு.


55.அணிகளில் இன்றியமையாதது _____ அணி ஆகும்.

அ) உருவக அணி    ஆ) உவமை அணி     இ) எடுத்துக்காட்டுவமையணி    ஈ ) உவமேயம்



March 05, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 16 Test - 9th std Tamil Unit 7

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 16 Test
 
 கேள்விகள் : 50                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
___________________________________________________________________

 9th-std (unit - 7)


1. ‘இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு’ என்ற நூலுக்காக தமிகழ அரசின் பரிசு பெற்றவர்
a. தில்லான்        b. கேப்டன் தாசன்    c. மா.சு.அண்ணாமலை        d. நேதாஜி

2. தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரியவர்.
a. முத்துராமலிங்க தேவர்    b. தில்லான்        c. கேப்டன் தாசன்        d. நேதாஜி

3. ‘இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்’ என்று கூறியவர்.
a. முத்துராமலிங்க தேவர்        b. தில்லான்        c. கேப்டன் தாசன்        d. நேதாஜி

4. சுதந்திர இந்தியாவின் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர்.
a. முத்துராமலிங்க தேவர்        b. தில்லான்        c. கேப்டன் தாசன்    d. நேதாஜி

5. இந்திய தேசிய இராணுவத்தில் .......... என்ற பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
a. லட்சுமி        b. ஜானகி        c. ஜான்சிராணி        d. இராஜாமணி

6. இந்திய தேசிய இராணுவம், ஆங்கிலோயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் ‘மொய்ராங்’ என்ற மூவண்ணக் கொடியை ஏற்றியது எப்போது?
a. 1942        b. 1944        c. 1946        d. 1947

7. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு.
a. 1942        b. 1944        c. 1946            d. 1947

8. கூற்று: இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான். ‘இந்தியதேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.
காரணம்: இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்
a. கூற்றும் காரணமும் சரி        b. கூற்றும் காரணமும் தவறு    
c. கூற்று சரி, காரணம் தவறு        d. கூற்று தவறு, காரணம் சரி

9. ‘மலேசியாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது’ என்று கூறியவர்.
a. சர்ச்சில்        b. இராமு        c. கர்னல்        d. பிரபு

10. ........ என்பவரின் தலைமையில் இந்திய இராணுவப் படை உருவாக்கப்பட்டது.
a. கேப்டன் தாசன்        b. தில்லான்        c. மோகன்சிங்        d. நேதாஜி

11. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்.
a. சிலப்பதிகாரம்        b. சீவகசிந்தாமணி        c. குண்டலகேசி        d. கம்பராமாயணம்

12. சீவகசிந்தாமணியின் ஆசிரியர்.
a. சீத்தலைசாத்தனார்        b. வர்த்தமான தேவர்        c. திருத்தக்கத்தேவர்        d. கந்தியார்

13. சீவகசிந்தாமணி .......... சமயம் சார்ந்த நூல்.
a. சைவ        b. வைணவ        c. சமண            d. பௌத்த

14. சீவகசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் இயற்றிய நூல்.
a. சிந்தாமணிமாலை        b. நரிவிருத்தம்        c. சுரமஞ்சரி        d. விருத்தமாலை

15. சீவக சிந்தாமணியின் மற்றோரு பெயர்.
a. இன்பநூல்        b. துன்பநூல்        c. துறவுநூல்        d. மணநூல்

16. சீவகசிந்தாமணியின் காலம்........... நூற்றாண்டாகும்.
a. இரண்டாம்        b. ஐந்தாம்        c. ஒன்பதாம்        d. பத்தாம்

17. சீவகசிந்தாமணியில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
a. 1300        b. 2358        c. 3145        d. 4679

18. சீவகசிந்தாமணியில் அமைந்துள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை.
a. 13        b. 23        c. 33        d. 43

19. சீவகசிந்தாமணியின் உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.
a. காதை        b. படலம்        c. சருக்கம்        d. இலம்பகம்

20. ‘இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும்’ என்ற மையக் கருத்தைக் கொண்ட காப்பியம்.
a. சிலப்பதிகாரம்        b. மணிமேகலை        c. சீவகசிந்தாமணி        d. குண்டலகேசி

21. முத்தொள்ளாயிரம் எப்பாவால் இயப்பட்டுள்ளது.
a. வெண்பா        b. அகவற்பா        c. கலிப்பா        d. வஞ்சிப்பா

22. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை.
a. 100        b. 103        c. 108        d. 132

23. இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக் குறிப்பு தருக.
a. உருவத்தொடர், வினைத்தொகை        b. பண்புத்தொகை, வினைத்தொகை
c. வினைத்தொகை, பண்புத்தொகை        d. பண்புத்தொகை, உருவகம்

24. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
a. வருக்கை – இருக்கை        b. புள் – தாவரம்        c. அள்ளல் – சேறு        d. மடிவு – தொடக்கம்

25. நச்சிலைவேல் கோக்கோதை நாடுஇ நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே.
a. பாண்டிய நாடு, சேர நாடு            b. சோழ நாடு, சேர நாடு    
c. சேர நாடு, சோழ நாடு            d. சோழநாடு, பாண்டியநாடு

26. அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் இந்நாட்டைக் குறிப்பிடுகிறது?
a. சேர நாடு        b. சோழ நாடு        c. பாண்டிய நாடு        d. அனைத்தும்

27. கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே, நல்யானைக் கோக்கிள்ளி நாடு’ இவ்வடிகளில் இம் பெறும் அணி எது?
a. உவமை அணி    b. உருவகம் அணி    c. வேற்றுபொருள் வைப்பணி        d. வேற்றுமை அணி

28. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்.
a. நக்கீரர்        b. கபிலர்        c. பரணர்        d. அறிய முடியவில்லை

29. முத்தொள்ளாயிரத்தின் காலம்.
a. மூன்றாம் நூற்றாண்டு    b. ஐந்தாம் நூற்றாண்டு        c. ஆறாம் நூற்றாண்டு         d. எட்டாம் நூற்றாண்டு

30. பொருத்துக.
1. சேர நாடு - ஏர்க்களச் சிறப்பு
2. சோழ நாடு – அச்சமில்லாத நாடு
3. பாண்டிய நாடு - முத்துடை நாடு
a. 2, 1, 3        b. 3, 1, 2            c. 3, 2, 1        d. 2, 3, 1

31. மதுரைக்காஞ்சி .......... அடிகளைக் கொண்டுள்ளது.
a. 150        b. 354            c. 782            d. 829

32. மதுரைக்காஞ்சியில் .......... அடிகள் மதுரைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.
a. 150        b. 354        c. 782        d. 829

33. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன்.
a. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்    
b. ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்
c. அதிவீரராம பாண்டியன்
d. சடையவர்மன் வீரபாண்டியன்

34. மதுரைக்காஞ்சியின் நூலாசிரியர்.
a. மாங்குடி மருதனார்        b. காரியாசான்        c. கபிலர்        d. அறியப்படவில்லை

35. ‘மாங்குடி’ என்ற ஊர் அமைந்துள்ள மாவட்டம்.
a. திருச்சி        b. சேலம்        c. திருநெல்வேலி        d. இராமநாதபுரம்

36. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனைப் பாடல்கள் பாடியுள்ளார்.
a. 10        b. 13        c. 18        d. 23

37. ‘ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்.
a. முத்தொள்ளாயிரம்        b. சிறுபஞ்சமூலம்    c. தமிழ்விடு தூது        d. மதுரைக்காஞ்சி

38. ‘பொறிமயிர் வாரணம்.... கூட்டுறை வயமாப் புலியொடு குழும’ என்ற பாடலடிகள் மூலம் மதுரையில் ........... இருந்ததை அறிய முடிகிறது.
a. மயில்கள் சரணாலயம்            b. பறவைகள் சரணாலயம்    
c. வனவிலங்கு சரணாலயம்            d. புலிகள் சரணாலயம்

39. ‘நியமம்’ என்பதன் பொருள்.
a. நீதி         b. தர்மம்        c. அங்காடி        d. ஆகமம்

40. ‘குழாஅத்து’ – இலக்கணக் குறிப்பு தருக.
a. இன்னிசை அளபெடை        b. சொல்லிசை அளபெடை
c. செய்யுளிசை அளபெடை        d. இயற்கை அளபெடை

41. புகழ்பெற்ற போச்சம்பள்ளிச் சந்தை அமைந்துள்ள மாவட்டம்.
a. திருச்சி        b. சேலம்        c. கிருஷ்ணகிரி        d. இராமநாதபுரம்

42. போச்சம்பள்ளிச் சந்தை ..... ஏக்கர் நிலப்பரப்பு உடையது.
a. 13        b. 15    c. 18            d. 20

43. மாட்டுத்தாவணி என்பதில், ‘தாவணி’ என்பதன் பொருள்.
a. ஆடை        b. தொழுவம்        c. சந்தை            d. கூட்டம்

44. பொருத்துக
1. மணப்பாறை – ஆட்டுச் சந்தை
2. அய்யலூர் - மாட்டுச் சந்தை
3. காராமணிக் குப்பம் - மீன் சந்தை
4. நாகப்பட்டினம் - கருவாட்டுச் சந்தை
a. 2, 3, 4, 1        b. 2, 1, 4, 3        c. 3, 2, 4, 1        d. 4, 1, 2, 3

45. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
a. ஒட்டன் சந்திரம் - காய்கறிச் சந்தை        b. தோவாளை - பூச் சந்தை
c. கடலூர் - மீன் சந்தை                d. ஈரோடு - ஜவுளிச் சந்தை

46. ஒன்றன் பெயர்ச்சொல் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறோரு பொருளுக்கு ஆகி வருவது.
a. தொழிற்பெயர்        b. ஆகுபெயர்    c. வினையாலணையும் பெயர்        d. வழக்கு

47. பொருத்துக.
வகுப்பறை சிரித்தது – 1.எண்ணலளவை ஆகுபெயர்
மஞ்சள் பூசினாள் – 2. காரியவாகுபெயர்
பைங்கூர் வளர்ந்தது – 3. பண்பாகுபெயர்
ஒன்று பெற்றால் ஒளிமயம் – 4. இடவாகுபெயர்
a. 4, 3, 2, 1        b. 3, 2, 4, 1        c. 4, 3, 1, 2        d. 2, 1, 4, 3

48. ‘கார் அறுத்தான்’ – எவ்வகை ஆகுபெயர்?
a. பொருளாகு பெயர்        b. சினையாகு பெயர்    c. காலவாகு பெயர்    d. கருவியாகு பெயர்

49. அளவைப் பெயர்கள் ............ வகைப்படும்.
a. இரண்டு        b. மூன்று        c. நான்கு        d. ஐந்து

50. ஆகுபெயர்கள் ............. ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
a. 6        b. 12        c. 16            d. 18


March 05, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 15 Test - 9th std Tamil Unit 6

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 15 Test
 
 கேள்விகள் : 55                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
___________________________________________________________________

9th-std (unit - 6)


1. கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை சிற்பக் கலை எனக் கூறும் நூல்
அ) அகராதி நிகண்டு        ஆ) சிந்தாமணி நிகண்டு    இ) சூடாமணி நிகண்டு       ஈ) திவாகர நிகண்டு

2. உருவ அமைப்பின் அடிப்படையில் சிற்பங்களின் வகைகள் எத்தனை?
அ) 3            ஆ) 2             இ) 4            ஈ) 5

3. கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், கோவிலின் தரைப்பகுதி, சுவர்களின் வெளிப்புறங்களில் காணப்படும் சிற்பங்கள் ____.
அ) புடைப்புச் சிற்பங்கள்    ஆ) முழு உருவச் சிற்பங்கள்   இ) பிரதிமை        ஈ) தெய்வசிற்பங்கள்

4. உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பங்கள் _______ எனப்படும்.
அ) புடைப்புச் சிற்பங்கள்               ஆ) முழு உருவச் சிற்பங்கள்
இ) பிரதிமை                      ஈ) தெய்வசிற்பங்கள்

5. உலோகங்கள் மற்றும் கல்லினால் செய்யப்படும் சிற்பங்கள் எத்தனை நிலைகளில் செய்யப்படுகின்றன.
அ) 2            ஆ) 3            இ) 4

6. கீழ்க்கண்டவற்றுள் தமிழர் அழகியலின் வெளிப்பாடு எது?
அ) கோயில்கள்    ஆ) சிற்பங்கள்         இ) நூல்கள்        ஈ) மொழி

7. சிற்ப இலக்கண மரபுப்படி சிற்பங்கள் செய்பவர்கள் _____ எனப்படுவர்.
அ) கற்கவிஞர்கள்     ஆ) சிற்பக் கவிஞர்கள்        இ) உருவக் கவிஞர்கள்     ஈ) உலோக கவிஞர்கள்

8. மாளிகைகளில் பல சுதைச் சிற்பங்கள் இருந்ததை கூறும் நூல் ____.
அ) சிலப்பதிகாரம்    ஆ) தொல்காப்பியம்    இ) திவாகர நிகண்டு        ஈ) மணிமேகலை

9. போரில் இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும் என்ற செய்தியை கூறும் நூல்
அ) சிலப்பதிகாரம்    ஆ) தொல்காப்பியம்        இ) திவாகர நிகண்டு         ஈ) மணிமேகலை

10. தமிழர்களின் தொடக்கக் காலச் சிற்பக் கலைக்கு சான்று
அ) நடுகல்      ஆ) சுதைச் சிற்பங்கள்        இ) புடைப்புச் சிற்பங்கள்    ஈ) கோயில்கள்

11. பல்லவர் கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இக்காலத்தில் சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
2. மாமல்லபுரச் சிற்பங்கள் பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று.
3. காஞ்சி வைகுந்த பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது.
4. பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் உள்ளன.
அ) அனைத்தும் சரி    ஆ) 1, 3 தவறு        இ) 3 தவறு         ஈ) அனைத்தும் தவறு

12. கீழ்க்கண்டவற்றுள் சிற்பக்கலை பற்றிய குறிப்புகள் இடம்பெறாத நூல் எது?
அ) தொல்காப்பியம்     ஆ) திவாகர நிகண்டு       இ) மணிமேகலை         ஈ) திருக்குறள்

13. பஞ்ச பாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் ____.
அ) மாமல்லபுரம்                     ஆ) காஞ்சி கைலாசநாதர் கோயில்
இ) தஞ்சை பெரிய கோவில்                ஈ) மலைக்கோட்டை

14. கீழ்க்கண்டவற்றுள் பாண்டியர் கால சிற்பங்கள் காணப்படாத இடம்
அ) பிள்ளையார்பட்டி        ஆ) திருமயம்          இ) கழுகுமலை                ஈ) மலைக்கோட்டை

15. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என அழைக்கப்படுவது ____.
அ) சோழர்காலம்    ஆ) சேரர் காலம்        இ) பாண்டியர் காலம்               ஈ) பல்லவர் காலம்

16. தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் வாயிற்காவலர் உருவங்களின் உயரம் _____.
அ) 13 அடி        ஆ) 15 அடி        இ) 14 அடி         ஈ) 11 அடி

17. சோழர் காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்ற கலை எது?
அ) கற்சிற்பக் கலை     ஆ) உலோக சிற்பக் கலை    இ) ஓவியக்கலை       ஈ) சுதை சிற்பக்கலை

18. பொருத்துக.
1. 2 ம் குலோத்துங்கன் – i) தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
2. 2 ம் இராசராசன் – ii) தீரிபுவன வீரேசுவரம் கோயில்
3. முதலாம் இராசேந்திரன் – iii) தஞ்சை பெரிய கோவில்
4. முதலாம் இராசராசன் – iv) கங்கைகொண்ட சோழபுரம்.
அ) i ii iii iv    ஆ) ii i iv iii            இ) ii i iii iv            ஈ) i ii iv iii

19. நடன முத்திரைகளுடன் கூடிய சோழர் கால சிற்பங்கள் காணப்படும் இடம்
அ) தஞ்சாவூர்        ஆ) நார்த்தாமலை     இ) சிதம்பரம்        ஈ) கும்பகோணம்

20. ஒரே கல்லில் அமைந்த நவக்கிரக சி லை அமைந்துள்ள இடம்
அ) மாமல்லபுரம்                   ஆ) கங்கை கொண்ட சோழபுரம்    
இ) தாராசுரம்                   ஈ) தஞ்சை பெரிய கோவில்

21. 2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்
அ) நார்த்தாமலை – புதுக்கோட்டை            ஆ) சீனிவாசநல்லூர் – திருச்சி
இ) கொடும்பாளூர் – புதுக்கோட்டை         ஈ) திருவரங்கம் – திருச்சி

22. குரங்கநாதர் கோவில் சிற்பங்கள் அமைந்துள்ள இடம்
அ) நார்த்தாமலை – புதுக்கோட்டை            ஆ) சீனிவாசநல்லூர் – திருச்சி
இ) கொடும்பாளூர் – புதுக்கோட்டை            ஈ) திருவரங்கம் – திருச்சி

23. கீழ்க்கண்டவற்றுள் பல்லவர் கால சிற்பங்கள் காணப்படும் இடம் எது?
அ) குன்றக்குடி   ஆ) பிள்ளையார்பட்டி           இ) காஞ்சிபுரம்                ஈ) திருப்பரங்குன்றம்

24. பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
1. பாண்டியர் கால குகைக் கோவில்கள் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கவை.
2. திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் இவற்றை காணலாம்.
3. கோவில்பட்டிக்கு கிழக்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலிலும் இவர்களது சிற்பங்கள் உள்ளன.
அ) அனைத்தும் சரி         ஆ) 1 மட்டும் சரி        இ) 1, 2 சரி        ஈ) 1, 3 சரி    

25. சுண்ணாம்புக் கலவையால் செய்யப்படும் சிற்பங்கள் ______ எனப்படும்.
அ) புடைப்பு சிற்பங்கள்                ஆ) முழு உருவச் சிற்பங்கள்
இ) சுதைச் சிற்பங்கள்                     ஈ) சுண்ணாம்பு சிற்பங்கள்

26. தெலுங்கு, கன்னடப் பகுதிகளின் சிற்பக் கலை தாக்கம் தமிழக சிற்பக் கலையில் யாருடைய காலத்தில் ஏற்பட்டது.
அ) சோழர்கள் காலம்         ஆ) பாண்டியர்கள் காலம்    இ) நாயக்கர் காலம்    ஈ) விஜயநகர மன்னர் காலம்

27. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களை அமைத்தவர்கள் யார்?
அ) சோழர்கள்       ஆ) பாண்டியர்கள்    இ) நாயக்கர்கள்     ஈ) விஜயநகர மன்னர்கள்

28.  “அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை” இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) பூக்களை உடைய வனம்         ஆ) மயில்        இ) இறகு        ஈ) சந்தனம்

29. “மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்
கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே ”
இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன?
அ) குறிஞ்சி         ஆ) முல்லை            இ) மருதம்        ஈ) நெய்தல்

30. சரியான பொருளைத் தேர்ந்தெடு? பொலம், பொலி
அ) காடு, அழகு                ஆ) அழகு, அழகு    
இ) அழகு, தானியக்குவியல்             ஈ) காடு, தானியக்குவியல்

31. “பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்
தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்”
இதில் குறிப்பிடப்படும் முக்குழல் எவற்றால் ஆனது?
1. கொன்றை    2. மூங்கில்    3. வேம்பு    4. ஆம்பல்
அ) 1, 2            ஆ) 1, 2, 3        இ) 1, 2, 4         ஈ) 2, 3, 4

32.சரியான பொருளைத் தேர்ந்தெடு
கடறு, உழை
அ) மேடு, யானை    ஆ) பள்ளம், புலி    இ) காடு, யானை    ஈ) காடு, ஒரு வகை மான்

33. “பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்”
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) பூஞ்சோலை    ஆ) காகம்        இ) நாகணவாய்ப் பறவை     ஈ) வண்டுகள்

34. “முதிரையும் சாமையும் வரகும் பொய்மணிக்
குதிரைவாலி யும்களம் குவித்துக் குன்றுஎனப்
பொதுவர்கள் பொலிஉறப் போர்அ டித்திடும் ”
இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன?
அ) குறிஞ்சி        ஆ) முல்லை             இ) மருதம்        ஈ) நெய்தல்

35. “மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ”
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) துன்புறுதல்    ஆ) கொம்பு      இ) சோர்வால் வாய் குழறுதல்      ஈ) வருந்துதல்

36. “இன்னிளம் குருளை மிகு இனைந்து வெம்பிட” இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) யானை        ஆ) மான்        இ) குரங்கு            ஈ) குட்டி

38. சரியான பொருளைத் தேர்ந்தெடு.
இனைந்து, உயங்குதல்
அ) சேர்ந்து, உரங்குதல்            ஆ) துன்புறுதல், உரங்குதல்
இ) துன்புறுதல், வருந்துதல்             ஈ) சேர்ந்து, வருந்துதல்

39. சரியான பொருளைத் தேர்ந்தெடு.
படிக்குஉற, கோடு
அ) வருந்துதல், கொம்பு            ஆ) நிலத்தில்விழ, கொம்பு
இ) கூறுதல், மலை                ஈ) வருந்துதல், மலை

40. “தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற
நன்னரில் வலியசெந் நாய்உய ங்குமே ”
இவ்வரிகள் எந்நிலத்தில் நிகழும் நிகழ்ச்சியை உணர்த்துகின்றன?
அ) குறிஞ்சி        ஆ) முல்லை            இ) மருதம்        ஈ) பாலை

41. “கல்லிடைப் பிறந்த ஆறும்” இதில் ‘கல்’ என்பதன் பொருள்?
அ) அருவி        ஆ) மலை             இ) பாறை        ஈ) மழை

42.முருகுகான் யாறு பாயும்” இதில் முருகு என்பதன் பொருள் என்ன?
1. தேன்        2. மணம்    3. அழகு    4. காடு
அ) 1, 2, 3         ஆ) 2, 3, 4        இ) 1, 2

43. “மல்லல்அம் செறுவில் காஞ்சி” இதில் செறு என்பதன் பொருள்
அ) செறுக்கு        ஆ) சோலை        இ) காடு        ஈ) வயல்

44. சரியான பொருளைத் தேர்ந்தெடு – மல்லல், விசும்பு
அ) குற்றம், வருத்தம்        ஆ) வளம், வருத்தம்        இ) வளம், வானம்         ஈ) குற்றம், வானம்

45. “நீண்ட பொரு கரிக்குருத்து அளந்து”
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) சிறு செடி        ஆ) யானைத் தந்தம்         இ) வயல்        ஈ) சோலை

46. “குரைகழல் சிறுவர் போரில்
குலுங்கியே தெங்கின் காயைப் “
இதில் குறிப்பிடப்படும் ‘ போர் ‘ என்பதன் பொருள்
அ) போர்க்களம்    ஆ) வைக்கோற்போர்         இ) விவாதம்        ஈ) யானை

47. “புரைதபப் பறித்துக் காஞ்சிப்
புனைநிழல் அருந்து வாரே “
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) குற்றம்        ஆ) கனிகள்        இ) குற்றமின்றி         ஈ) தேன்

48.“நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும் ”
இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன?
அ) குறிஞ்சி        ஆ) முல்லை        இ) மருதம்             ஈ) நெய்தல்

49. “மலையெனத் துவரை நன்னீர்”
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) ஒரு வகை தானியம்        ஆ) நிலவு        இ) வானம்        ஈ) பவளம்

50.சரியான பொருளைத் தேர்ந்தெடு
தும்பி, மரை
அ) ஒரு வகை வண்ணத்துப்பூச்சி, மான்            ஆ) ஒரு வகை வண்டு, தாமரை மலர்
இ) ஒரு வகை வண்ணத்துப்பூச்சி, தாமரை மலர்        ஈ) ஒரு வகை வண்டு, மலை

51.” இளமைதீர் மதியம் தன்னை ”
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) சூரியன்        ஆ) நிலவு         இ) மலர்        ஈ) கடல்

52. “வசிபட முதுநீர் புக்கு
மலையெனத் துவரை நன்னீர்”
இவ்வடிகள் எந்நிலத்தின் இயல்பைக் கூறுகின்றன
அ) குறிஞ்சி        ஆ) முல்லை        இ) மருதம்        ஈ) நெய்தல்

53. “இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் ” என்று கூறியவர் யார்?
அ) காமராசர்        ஆ) அண்ணா         இ) பெரியார்        ஈ) வைரமுத்து

54. இலக்கணக் குறிப்புத் தருக.
இடிகுரல், மரைமுகம்
அ) உவமைத் தொகை                ஆ) வினைத் தொகை    
இ) 2ம் வேற்றுமைத் தொகை             ஈ) பண்புத்தொகை

55.இலக்கணக் குறிப்புத் தருக.
இன்னுயிர், பைங்கிளி
அ) உவமைத் தொகை                    ஆ) வினைத் தொகை  
இ) 2ம் வேற்றுமைத் தொகை                ஈ) பண்புத்தொகை